The Constitution Of The Democratic Socialist Republic Of Sri Lanka of 1978

Download as PDF

The Constitution Of The Democratic Socialist Republic Of Sri Lanka of 1978

Public Act
Date of assent
Commencement

Contents

Part 0

Administrative Law

Part 1

Circulars

Part 2

Forms

Part 3

Other Law

Part 4

Other Resources

Part 5

T Acts

Part 6

T Constitution Making

Part 7

T Law Category

Part 8

T Multimedia/Publications

Part 9

T News

Part 10

T Subcommittees

Part 11

Uncategorized @ta

Part 12

Updates

Part 13

குடும்பவியல் சட்டம்

Part 14

குற்றவியல் சட்டம்

Part 15

சர்வதேச சட்டம்

Part 16

சிவில் சட்டம்

Part 17

சுற்றாடல் சட்டம்

Part 18

தொழிலாளர் சட்டம்

Part 19

நில சட்டம் / வீட்டு சட்டம்

Part 20

மனித உரிமை சட்டம்

Part 21

மொழி உரிமை

Part 22

மொழி உரிமைகள்

Part 23

வர்த்தமானி

Part 24

வளங்கள்

Part 0

Administrative Law

Part 1

Circulars

Part 2

Forms

Part 3

Other Law

  • பாராளுமன்ற தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம்

    பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும், விடுபாட்டுரிமைகளையும், தத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்கும், வரைவு படுத்துவதற்கும்; பாராளுமன்றத்தில் பேச்சு, விவாதம் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றுக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பெறுவதற்கும்; பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல்களுக்கான தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், பாராளுமன்ற அறிக்கைகள், பத்திரங்கள், நிகழ்சிக்குறிப்புகள், தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை ‌வெளியிடுவதில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமானதொரு சட்டம்.

Part 4

Other Resources

Part 5

T Acts

Part 6

T Constitution Making

Part 7

T Law Category

Part 8

T Multimedia/Publications

Part 9

T News

  • 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்

    2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்

    PDF link : Click Here

     

  • காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

    காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

    மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கைது சட்டவிரோதமானது என மீனவர்கள் போராட்டம் நடத்திய பொழுது அங்கு செய்தி சேகரிக்க சென்ற வேளை ஊடகவியலாளரான இராசரத்தினம் தர்ஷன் (25) தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை காணொளி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் முறையிட்டிருக்கின்றார்.
    சுழிபுரம், சுழிபுரம் மேற்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கண்டகண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியாக படம் ஒன்றையும் முறைப்பாட்டில் பதிவு செய்திருக்கின்றார்.

    இவ்விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியரிடம் அறிவிக்கப்பட்டதுள்ளதாகவும், இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவத்திற்கான காரணமாக நிர்வாகக் காரணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் இனிவரும் காலங்களில் காணொளி எடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதும், காணொளி செய்வதும் பொதுவான விடயமாக உள்ளது. இது யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளதுடன், இந்த செயற்பாடுகள் எதிர்காலங்களில் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாக மாறக் கூடும் என்று ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், மக்கள் பேரணிகளின் போது படைத்தரப்பும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இது போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் நடைபெற்றுக கொண்டிருக்கும் விடயமாக உள்ளது. இது தங்கள் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயல் என்றும், முற்றிலும் மனித உரிமைகள் மீறப்படும் செயல் என்றும் ஊடகவியலாளர்கள் தரப்பு கருதுகின்றது. ஏனெனில் இவ்வாறு புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுத்தல் என்பனவை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் முன் அனுமதி கோரப்படுவதில்லை. ஒருவரின் அனுமதியும் விருப்பமும் இன்றி புகைப்படம் எடுக்கவோ காணொளி பதிவுகளை மேற்கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் அத்துமீறி செயற்படுவது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளையும் முடக்கவும் அன்றி வேறெதுவும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

    இந்த காணொளிகள் ஏன் எடுக்கப்படுகின்றன? புகைப்படங்கள் எடுப்பதற்கான காரணம் என்ன? என்று விளக்கமளிக்கும் கடப்பாடும் பாதுகாப்பு தரப்பினருக்கு இல்லை. பொதுவாக பாதுகாப்பு காரணம் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திலும் அவர்களின் தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

    தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்ற மனோபாவத்துடன் செயற்படும் பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த யாழ் ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

    ஊடகவியலாளர் இராசரத்தினம் தர்ஷன்.

  • இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

    இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

    இராணுவப்புலனாய்வார்கள் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த க. சதாசிவம் (80) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

    புலனாய்வாளர்களின் இந்த செயலால் தன்னால் சுதந்திரமாக இயங்க இயலாமல் உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
    மட்டக்களப்பு, தாமரைக்கேணி வீதி இல 9ஐச் சேர்ந்த இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

    தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த துன்புறுத்தலை தான் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
    இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:

    “மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் இராணுவப்புலனாய்வாளர்கள் என்னைப் பின்தொடர்;ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள். இதனால் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதுடன், எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். சுதந்திரமாக நடமாடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது”. என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

    இனியும் இந்த துன்புறுத்தல் தொடரக் கூடாது என்றும், இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    – மட்டக்களப்பு சதாசிவம்

  • இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள்

    இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள் – “இலங்கையில் தெரியப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் சமூக
    ஒருங்கிணைப்பிற்கு குடியியல் வெற்றிடத்தை உருவாக்குதல்”

    Click Here to PDF – Agriculture Policy – Download Here

  • புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரஜைகளின் ஆய்வூ

    படிக்க கிளிக் செய்யவும்

Part 10

T Subcommittees

Part 11

Uncategorized @ta

Part 12

Updates

  • 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்

    2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்

    PDF link : Click Here

     

  • காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

    காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

    மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கைது சட்டவிரோதமானது என மீனவர்கள் போராட்டம் நடத்திய பொழுது அங்கு செய்தி சேகரிக்க சென்ற வேளை ஊடகவியலாளரான இராசரத்தினம் தர்ஷன் (25) தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை காணொளி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் முறையிட்டிருக்கின்றார்.
    சுழிபுரம், சுழிபுரம் மேற்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கண்டகண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியாக படம் ஒன்றையும் முறைப்பாட்டில் பதிவு செய்திருக்கின்றார்.

    இவ்விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியரிடம் அறிவிக்கப்பட்டதுள்ளதாகவும், இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவத்திற்கான காரணமாக நிர்வாகக் காரணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் இனிவரும் காலங்களில் காணொளி எடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதும், காணொளி செய்வதும் பொதுவான விடயமாக உள்ளது. இது யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளதுடன், இந்த செயற்பாடுகள் எதிர்காலங்களில் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாக மாறக் கூடும் என்று ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், மக்கள் பேரணிகளின் போது படைத்தரப்பும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இது போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் நடைபெற்றுக கொண்டிருக்கும் விடயமாக உள்ளது. இது தங்கள் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயல் என்றும், முற்றிலும் மனித உரிமைகள் மீறப்படும் செயல் என்றும் ஊடகவியலாளர்கள் தரப்பு கருதுகின்றது. ஏனெனில் இவ்வாறு புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுத்தல் என்பனவை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் முன் அனுமதி கோரப்படுவதில்லை. ஒருவரின் அனுமதியும் விருப்பமும் இன்றி புகைப்படம் எடுக்கவோ காணொளி பதிவுகளை மேற்கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் அத்துமீறி செயற்படுவது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளையும் முடக்கவும் அன்றி வேறெதுவும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

    இந்த காணொளிகள் ஏன் எடுக்கப்படுகின்றன? புகைப்படங்கள் எடுப்பதற்கான காரணம் என்ன? என்று விளக்கமளிக்கும் கடப்பாடும் பாதுகாப்பு தரப்பினருக்கு இல்லை. பொதுவாக பாதுகாப்பு காரணம் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திலும் அவர்களின் தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

    தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்ற மனோபாவத்துடன் செயற்படும் பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த யாழ் ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

    ஊடகவியலாளர் இராசரத்தினம் தர்ஷன்.

  • இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

    இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

    இராணுவப்புலனாய்வார்கள் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த க. சதாசிவம் (80) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

    புலனாய்வாளர்களின் இந்த செயலால் தன்னால் சுதந்திரமாக இயங்க இயலாமல் உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
    மட்டக்களப்பு, தாமரைக்கேணி வீதி இல 9ஐச் சேர்ந்த இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

    தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த துன்புறுத்தலை தான் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
    இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:

    “மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் இராணுவப்புலனாய்வாளர்கள் என்னைப் பின்தொடர்;ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள். இதனால் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதுடன், எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். சுதந்திரமாக நடமாடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது”. என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

    இனியும் இந்த துன்புறுத்தல் தொடரக் கூடாது என்றும், இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    – மட்டக்களப்பு சதாசிவம்

  • இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள்

    இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள் – “இலங்கையில் தெரியப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் சமூக
    ஒருங்கிணைப்பிற்கு குடியியல் வெற்றிடத்தை உருவாக்குதல்”

    Click Here to PDF – Agriculture Policy – Download Here

  • புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரஜைகளின் ஆய்வூ

    படிக்க கிளிக் செய்யவும்

Part 13

குடும்பவியல் சட்டம்

Part 14

குற்றவியல் சட்டம்

Part 15

சர்வதேச சட்டம்

Part 16

சிவில் சட்டம்

Part 17

சுற்றாடல் சட்டம்

Part 18

தொழிலாளர் சட்டம்

Part 19

நில சட்டம் / வீட்டு சட்டம்

Part 20

மனித உரிமை சட்டம்

Part 21

மொழி உரிமை

  • நிர்வாகமும், நாளாந்த வாழ்க்கையும்

    கிராம சேவகர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசத்தில் வாழும் மக்களுடைய மொழியை அறிந்திராததினால், அவர்கள் அரச திணைக்களங்களுக்குச் செல்லும்போது, தமது மொழியில் உரையாடும் அலுவலர்கள் இல்லாதிருக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.

    வழக்கமான செயற்பாடுகளான பொலீஸ் நிலையத்தில் முறையீடுசெய்தல், அரச வைத்தியசாலைகளில் சுகாதாரப் பராமரிப்பை நாடுதல், இழப்பீடு அல்லது ஓய்வூதிய விண்ணப்பம் செய்தல் ஃ அனுமதிப்பத்திரம் பெறுதல், பிறப்பு, இறப்பு, திருமணம் என்பவற்றின் பதிவு அல்லது பிரயாணம் செய்தல் என்பன சிங்களம் தெரியாத இலங்கையர்களுக்கு ஒரு கவலைக்கிடமான அனுபவமாக அமைகின்றது.

  • தகவல்களுக்கான அணுகுவழி

    குறியீடுகள் – எல்லா அரச நிறுவனங்களாலும்;, குறிப்பாக இருமொழி பேசும் பிரதேசங்களில் குறியீட்டுப் பலகைகள், வீதிகளின் பெயர்ப்பலகைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூன்று மொழிகளிலும் இருக்கN;வண்டுமென்பது ஏற்றுக்கொண்ட விடயமாக இருப்பினும், உண்மையான நிலமை சில அரச நிறுவனங்கள் இவ்வாறான பெயர்பலகைகளை அல்லது உத்தியோகபூர்வ ஆவணங்களை மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்துவதில்லை என்பதாகும். உதாரணமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள திம்பிரிகஸ்யாய, கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசச் செயலகங்களில் இக்கொள்கைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், சிறுபான்மை சமூகத்தினரின் அத்தியாவசியமான ஆவணங்களான, பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் கூட அவர்களுடைய சொந்தமொழியில் கிடைப்பதில்லை.

    உற்பத்திப்பொருட்கள் தகவல்கள் – மருந்தாக்கற் தொழிற்றுறை மீறல்கள்:
    மேலுமொரு பாரதூரமான மொழிஉரிமை மீறல் மருந்தாக்கற் தொழிற்றுறையில் இடம்பெறுகின்றது. இங்கு, கிட்டத்தட்ட சகல மருந்துகள் உபகரணங்கள் மற்றும் மருந்து மூலிகைகள் என்பன தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே பெயரிடப்படுகின்றன. இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள, தமிழ் நுகர்வோர் மருந்துகளை வாங்கும்போது நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் அத்தியாவசியமான தகவல்களான அளவுகள், பக்கவிளைவுகள், மாற்று ஏற்பர்டுகள் அல்லது வேறு தகவல்கள் என்பவற்றை அறியாதிருக்கின்றனர். அத்தோடு, குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் வைத்திய பணியாளர்கள் தமிழ் பேசாததினால் நோயாளிகள் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளுகின்றனர். நோய்வாய்பட்டு அல்லது காயப்பட்டு வேதனைப்படும் நோயாளிகள் பீதியினால் நம்பிக்கையிழந்திருக்கும் வேளையில், புரியாத மொழியில் மருந்து முறைகளும், பொருத்தமான தகவல்களும் கொடுக்கப்படுவதால் அது அவர்களை மேலும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்குகின்றது.

  • கல்விக்கான அணுகுவழி

    குடியேற்றவாத ஆட்சிக்காலம்தொட்டு இலங்கையின் பொதுக்கல்விமுறையில் சிங்களம், தமிழ் என்னும் இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது எப்படியெனினும், பிரயோகத்தில் அநேக பிரதேசங்களில் ஏற்றமொழியில் ஆசிரியர்கள் இல்லை. வலயக் கல்வி அலுவலங்களிலிருந்து சிங்களத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. தமிழ் ஆசிரியர்களுக்கு (ஆசிரியர் வழிகாட்டிகள், கற்பித்தல் நெறிமுறை) சிங்களத்தில் அனுப்பப் படுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்புகள் பிரயோசனமற்றவிதத்தில் தாமதமாகவே அனுப்பப்படுகின்றன. இருமொழிகள் உபயோகத்திலுள்ள கொழும்பு போன்ற பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர் காலைக்கூட்டங்கள் சிங்களத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. அநேகமாக, பாடசாலை மாணவர்களுக்;கு உத்தியோகபூர்வ மொழி பெயர்ப்புகள் கிடைப்பதில்லை. பாடசாலைக்கும், பெற்றோருக்கும் இடையிலான தொடர்பாடல் சிங்களத்திலேயே நடைபெறுகின்றது. சிலவேளைகளில், சிங்களம் பேசத்தெரியாத காரணத்தினால் பெற்றோருக்கு பாடசாலை வளவுக்குள் செல்லமுடியாமலிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில பாடத்திட்டங்களை நடத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமையான, கல்விக்குரிய சரிசம உரிமையை மீறுகின்றன.

  • நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகுவழி

    நீதிவழிமுறையின் எந்தவொரு நிலையிலும், குற்றச்சார்த்துதல் பெற்றவர் தனது தாய்மொழியில் எதிர்வாதம் கூறமுடியாமல், தவறான மொழிப்பெயர்புகளில் தங்கியிருப்பதால் சரியான நீதி வழங்கப்படாத சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நேர்காணல்கள்மூலம் கண்டறியப்பட்ட விடயங்களில் ஒன்றானது, தமிழ் பிரிஜைகளினால் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் சிங்களத்தில் பதிவுசெய்யப்படுகின்றது என்பதாகும். மேலும், முறைப்பாட்டளர்கள் இவ்வாக்குமூலங்களுக்கு கையொப்பம் இடுமாறு கூறப்படுகின்றனர். (வவுனியா, திருகோணமலை, மன்னார், அம்பாறை) கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரஜைகள் சிங்களத்தில் நீதிமன்ற அழைப்பாணைகளைப் பெறுகின்றனர். இலங்கையின் பல பாகங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் ஆகியன சிங்களத்தில் மட்டுமே நடாத்தப்படுகின்றன.

Part 22

மொழி உரிமைகள்

Part 23

வர்த்தமானி

Part 24

வளங்கள்