பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

வவுணதீவு மக்கள் வங்கி முகாமையாளர் பகிடிவதைக்குட்படுத்துவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த இராஜேஸ்வரன் ஜசோ (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

வவுணதீவு மக்கள் வங்கி முகாமையாளருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வங்கிக்கு செல்லும் போது பகிடிவதையான பேச்சுகளுக்குட்படுத்துதல் உட்பட அவதூறான வார்த்தைப் பிரயோகங்களும் அவரால் மேற்கொள்ளப்படுவதாக ஜசோ குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணத்திற்காக இவர் இவ்வாறு நடந்துகொள்வதாவும், இதனால் சுதந்திரமாக ஒரு வேலையை வங்கியில் மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈச்சந்தீவு, நாவற்காடு என்ற முகவரியைச் சேர்ந்த இவர், சாட்சிகள் இருந்தும் அச்சம் காரணமாக ஒருவரும் விடயங்களை பகிரங்கப்படுத்த முன்வருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மாற வேண்டும் என்றும், சுதந்திரமாக ஒரு வேலையை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு சூழலை இலகுப்படுத்தி தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு ஜசோ முறைப்பாடு.

This post is also available in: English සිංහල

More News