தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)

இலங்கையிலுள்ள தேரவாத பிக்குமார்களின் நிகாயாக்கள் அல்லது மதப்பிரிவுகள் தொடர்பாக கதிகாவத்தை வகுத்தமைத்து பதிவு செய்வதற்கும்; பிக்கு ஒவ்வொருவருடனும் எந்த நிகாயா அல்லது மதப்பிரிவு தொடர்புபடுகின்றதோ அந்த நிகாயாவின் அல்லது மதப்பிரி
வின் பதிவு செய்யப்பட்ட கதிகாவத் ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுக செயலாற்றுவதற்கு அத்தகைய பிக்குவுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; ஏதேனும் பதிவு செய்யப்பட்ட கதிகாவத்தின் ஏற்பாடுகளை மீறிச்
செயலாற்றுகின்ற பிக்குமாருக்குத் தண்டனை விதிப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

சூழல்

பிரஜைகள் தமது சூழல்மீது தாக்கம் செலுத்தும் புவி அரசியல் சக்திகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். இது விடயத்தில் அவர்கள் கண்காணிபப்களை மேற்கொண்டு, தமது அரசாங்கத்தை வகைப்பொறுப்புக்கூறவைத்தல் வேண்டும். மனித உரிமைகளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவகையில் சூழல் நீதியென்பது உயர்வாக மதிக்கப்படுதல் வேண்டும்.

“’இறுதியான விருட்சம் வெட்டி வீழ்த்தப்பட்டதும், இறுதியான மீன் கொல்லப்பட்டதும், இறுதியாக எஞ்சியுள்ள நதியும் நஞ்சூட்டப்பட்டதும், பணத்தை உண்டு உயிர்வாழ முடியாதென்பதைக் காணுவீர்கள்”
―தலைவர் சியாட்டில்

சூழல் உபகுழுவின் நோக்கங்கள்

  1. விவசாயம், கால்நடை, மற்றும் மீன்பிடிக்கருத்திட்டங்களில் முன்னேற்றத்தின் நிலைபேற்றுத்தன்மை குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல்
  2. பொருத்தமான விவசாய வழிமுறைகளுக்குக் கவனம் செலுத்துதல்
  3. விவசாய உற்பத்தியில் தீங்கு ஏற்படுத்தும் பக்கவிளைவுகளைக் குறைத்து, மாற்று வழிகளை இனங்காணுதல்
  4. சுதேச மருத்துவ மூலிகைகள், தொடர்ச்சியாகப் புவிப்பிரதேசத்துக்குரிய விதைகள் மற்றும் உயிர்ப்பல்வகைமை என்பவற்றைப்பாதுகாத்து விருத்திசெய்தல்
  5. கனிப்பொருள் அகழ்வு, மணர் அகழ்வு, குப்பை கூளங்களை அகற்றுதல், காடுகளுக்குத் தீ மூட்டுதல்ஃ வெட்டியழித்தல்போன்ற விடயங்களில் சூழலைப்பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல்
  6. கிராமத்தில் சூழல் நீதியைக் கண்காணித்து, உறுதிசெய்தல்

இளைஞர் விவகாரங்கள்

இளைஞர்களே நாளைய தலைவர்களாவர். அவர்கள் தமது அதியுயர்வான சாத்தியவளங்களை ஈட்டிக்கொள்ளும்வகையில், அறிவு, வழிகாட்டல் என்பவை வழங்கப்படுதல் வேண்டும். குறிப்பாக இலங்கையின் இளைஞரக்ள் சகிப்பின்மைகாரணமாகப் பெரிதும் இன்னலுற் றுள்ளனர். இருப்பினும், புரிந்துணர்வு, மீளிணக்கம் மற்றும் முன்னேற்றத்துக்கான சாத்தியவளம் அவர்களின் கைகளிலேயே உள்ளது

இளைஞர் உப குழுக்கள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன :

  1. இளைஞர்களிடையே மொழி உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவித்தல்
  2. இளைஞர்களை விமர்சனரீதியான, பகுப்பாய்வுச் சிந்தனைக்கு ஊக்குவித்தல்
  3. இளைஞர்களின் ஆக்கபூர்வமான உள்ளீடுகளை அபிவிருத்திக்குப் பயன்படுத்துதல்
  4. திட்டமிடல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளலில் இளைஞர்களின் உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
  5. இளைஞர்களுக்கு திறன்கள் அபிவிருத்திக்கான வாய்ப்புகளையும், தமது கிருஷ;டித் திறன்களை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குதல்
  6. ஆட்சிமுறையில் இளைஞர் பங்கேற்பை ஊக்குவித்தல்

பெண்களும், சிறுவர்களும்

நாகரீகமுற்ற உலகம் முழுவதும் மேலுஞ்சிறந்த ஒரு சமூகத்தைநோக்கிய நகர்வில் மையப்பொருளாக விளங்குவது பால்நிலை சமத்துவமாகும். சிறுவர்களே எதிர்காலப் பிரஜைகளாவர். அவர்கள் பாசத்துடன் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, வழிநடத்தப்படுதல் வேண்டும். பெண்களுக்கு அதிகாரவலு வழங்குவதற்கும், சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகள் சபைகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்க்கவும்.

“எமது சிறுவர்களுக்குச் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும்,தொடர் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வாழுவதற்குமான உரிமை உள்ளது”

-2015 ஐ.நா. பொதுச்சபையில் ஷாக்கிரா

பெண்கள் மற்றும் சிறுவர்கள் உபகுழுவின் பாத்திரம்,

  1. சிறுவர்களுக்குப் பாதுகாப்பான, மகிழ்ச்சியான பிள்ளைப்பருவமொன்று கிட்டுவதை உறுதிசெய்தல்
  2. பெண்களையும், சிறுவர்களையும் கிராமத்தின் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்
  3. பெண்களினதும், சிறுவர்களினதும் உரிமைகளைப்பாதுகாத்தல்
  4. பெண்கள், சிறுவர்கள் ஈடுபடும் கைப்பணிகள்ஃ குடிசைக் கைத்தொழில்கள் / கலைப் பணிகள் என்பவற்றை ஊக்குவித்து, முன்னேற்றுதல்
  5. இலவச போஷhக்கு உணவு, உடல் மற்றும உளநல சுகாதார நிலையங்கள், மற்றும் பெண்கள், விசேட தேவைகளுள்ளவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சட்ட ஆலோசனைகள் கிட்டுவதை உறுதிசெய்தல்

மொழி, கலாசாரம் மற்றும் மீளிணக்கம்

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் ஏனைய கலாசாரங்ள் மற்றும் மதங்களுடன் சௌஜன்யமாக வாழுவதற்கும், நாம் முதலில் மக்களின் தாய்மொழியை மதிக்கவேண்டும் இலங்கையின் அரச கருமமொழிகள்குறித்து வாசித்தறிந்துகொள்ளுங்கள்.
மொழி உரிமைக்கு மதிப்பளிக்கும் வாக்குறுதியை பிரதிக்கினையாக எடுத்துக் கொள்ளுங்கள்

“புரியும் மொழியில் ஒருவருடன் பேசினால், அது அவரின் மூளைக்குச் செல்லும். அவருடைய மொழியில் அவருடன் பேசினால் அது அவரின் இதயத்துக்குச் செல்லும்”

-நெல்சன் மண்டேலா

மொழி மற்றும் கலாசார உபகுழுவின் நோக்கங்கள்

  1. மொழி உரிமைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அடிப்படையானவை என்பதை ஏற்றுக்கொண்டு, மொழி உரிமைகளைப் பாதுகாத்தல்
  2. ஜாதி, அந்தஸ்து, மதம், இனத்துவநிலை காரணமாக எழும் பாரபட்சங்களுக்கு எதிரான செல்நெறியை முன்னேற்றுதல
  3. மத மற்றும் சர்வமதப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களையும், கலந்துரையாடல்களையும் ஆரம்பித்தல். இவை மதங்களின் உள்ளமைவான விழுமியங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
  4. புராதனக் கலை மரபுகளையும் பாரம்பரியக் கைப்பணியாளர்களையும் பாதுகாத்தல்
  5. ரசனையை வளர்க்கும் இலக்கியம், கட்புலக்கலை, நாட்டார் கலைகள் சம்பந்தமான கலந்துரையாடலை ஆரம்பித்தல்
  6. மற்றும் இறுவட்டுக்கள் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்தல், எழுத்தாக்கங்கள், நூல்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள். இலக்கியம் போன்ற துடிப்பாற்றல் மிக்க பிரஜைகள் சபைக்குப் பயனுள்ள விடயங்கள் சம்;பந்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளுதல்

2013 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம்

2013 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம்

2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம்

2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம்

2013 ஆண்டின் 33ஆம் இலக்கஇ விளையாட்டில் ஊக்குப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டம்

2013 ஆண்டின் 33ஆம் இலக்கஇ விளையாட்டில் ஊக்குப் பதார்த்த பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டம்

2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ) சட்டம்

2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ) சட்டம்

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 இன் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டம்

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 இன் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டம்

நிர்வாகமும், நாளாந்த வாழ்க்கையும்

கிராம சேவகர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசத்தில் வாழும் மக்களுடைய மொழியை அறிந்திராததினால், அவர்கள் அரச திணைக்களங்களுக்குச் செல்லும்போது, தமது மொழியில் உரையாடும் அலுவலர்கள் இல்லாதிருக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.

வழக்கமான செயற்பாடுகளான பொலீஸ் நிலையத்தில் முறையீடுசெய்தல், அரச வைத்தியசாலைகளில் சுகாதாரப் பராமரிப்பை நாடுதல், இழப்பீடு அல்லது ஓய்வூதிய விண்ணப்பம் செய்தல் ஃ அனுமதிப்பத்திரம் பெறுதல், பிறப்பு, இறப்பு, திருமணம் என்பவற்றின் பதிவு அல்லது பிரயாணம் செய்தல் என்பன சிங்களம் தெரியாத இலங்கையர்களுக்கு ஒரு கவலைக்கிடமான அனுபவமாக அமைகின்றது.

தகவல்களுக்கான அணுகுவழி

குறியீடுகள் – எல்லா அரச நிறுவனங்களாலும்;, குறிப்பாக இருமொழி பேசும் பிரதேசங்களில் குறியீட்டுப் பலகைகள், வீதிகளின் பெயர்ப்பலகைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூன்று மொழிகளிலும் இருக்கN;வண்டுமென்பது ஏற்றுக்கொண்ட விடயமாக இருப்பினும், உண்மையான நிலமை சில அரச நிறுவனங்கள் இவ்வாறான பெயர்பலகைகளை அல்லது உத்தியோகபூர்வ ஆவணங்களை மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்துவதில்லை என்பதாகும். உதாரணமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள திம்பிரிகஸ்யாய, கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசச் செயலகங்களில் இக்கொள்கைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், சிறுபான்மை சமூகத்தினரின் அத்தியாவசியமான ஆவணங்களான, பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் கூட அவர்களுடைய சொந்தமொழியில் கிடைப்பதில்லை.

உற்பத்திப்பொருட்கள் தகவல்கள் – மருந்தாக்கற் தொழிற்றுறை மீறல்கள்:
மேலுமொரு பாரதூரமான மொழிஉரிமை மீறல் மருந்தாக்கற் தொழிற்றுறையில் இடம்பெறுகின்றது. இங்கு, கிட்டத்தட்ட சகல மருந்துகள் உபகரணங்கள் மற்றும் மருந்து மூலிகைகள் என்பன தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே பெயரிடப்படுகின்றன. இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள, தமிழ் நுகர்வோர் மருந்துகளை வாங்கும்போது நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் அத்தியாவசியமான தகவல்களான அளவுகள், பக்கவிளைவுகள், மாற்று ஏற்பர்டுகள் அல்லது வேறு தகவல்கள் என்பவற்றை அறியாதிருக்கின்றனர். அத்தோடு, குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் வைத்திய பணியாளர்கள் தமிழ் பேசாததினால் நோயாளிகள் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளுகின்றனர். நோய்வாய்பட்டு அல்லது காயப்பட்டு வேதனைப்படும் நோயாளிகள் பீதியினால் நம்பிக்கையிழந்திருக்கும் வேளையில், புரியாத மொழியில் மருந்து முறைகளும், பொருத்தமான தகவல்களும் கொடுக்கப்படுவதால் அது அவர்களை மேலும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்குகின்றது.

கல்விக்கான அணுகுவழி

குடியேற்றவாத ஆட்சிக்காலம்தொட்டு இலங்கையின் பொதுக்கல்விமுறையில் சிங்களம், தமிழ் என்னும் இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது எப்படியெனினும், பிரயோகத்தில் அநேக பிரதேசங்களில் ஏற்றமொழியில் ஆசிரியர்கள் இல்லை. வலயக் கல்வி அலுவலங்களிலிருந்து சிங்களத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. தமிழ் ஆசிரியர்களுக்கு (ஆசிரியர் வழிகாட்டிகள், கற்பித்தல் நெறிமுறை) சிங்களத்தில் அனுப்பப் படுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்புகள் பிரயோசனமற்றவிதத்தில் தாமதமாகவே அனுப்பப்படுகின்றன. இருமொழிகள் உபயோகத்திலுள்ள கொழும்பு போன்ற பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர் காலைக்கூட்டங்கள் சிங்களத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. அநேகமாக, பாடசாலை மாணவர்களுக்;கு உத்தியோகபூர்வ மொழி பெயர்ப்புகள் கிடைப்பதில்லை. பாடசாலைக்கும், பெற்றோருக்கும் இடையிலான தொடர்பாடல் சிங்களத்திலேயே நடைபெறுகின்றது. சிலவேளைகளில், சிங்களம் பேசத்தெரியாத காரணத்தினால் பெற்றோருக்கு பாடசாலை வளவுக்குள் செல்லமுடியாமலிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில பாடத்திட்டங்களை நடத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமையான, கல்விக்குரிய சரிசம உரிமையை மீறுகின்றன.

நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகுவழி

நீதிவழிமுறையின் எந்தவொரு நிலையிலும், குற்றச்சார்த்துதல் பெற்றவர் தனது தாய்மொழியில் எதிர்வாதம் கூறமுடியாமல், தவறான மொழிப்பெயர்புகளில் தங்கியிருப்பதால் சரியான நீதி வழங்கப்படாத சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நேர்காணல்கள்மூலம் கண்டறியப்பட்ட விடயங்களில் ஒன்றானது, தமிழ் பிரிஜைகளினால் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் சிங்களத்தில் பதிவுசெய்யப்படுகின்றது என்பதாகும். மேலும், முறைப்பாட்டளர்கள் இவ்வாக்குமூலங்களுக்கு கையொப்பம் இடுமாறு கூறப்படுகின்றனர். (வவுனியா, திருகோணமலை, மன்னார், அம்பாறை) கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரஜைகள் சிங்களத்தில் நீதிமன்ற அழைப்பாணைகளைப் பெறுகின்றனர். இலங்கையின் பல பாகங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் ஆகியன சிங்களத்தில் மட்டுமே நடாத்தப்படுகின்றன.

நல்லாட்சி

குடிமக்கள் தமது உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தமது அபிலாiஷகளை ஈட்டிக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கத்தோடு ஈடுபட்டுச் செயலாற்றுவது அவசியமாகும்.

பிரஜைகள் சபைகளின் நல்லாட்சி உப – குழுக்களின் பாத்திரம் பின்வருமாறு :

  1. மக்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் சம்பந்தமான தகவல்களை வழங்குதல் உம் : பொலிஸ், பிரதேச செயலகம்;, குடும்ப சுகாதார சேவை, கிராம அலுவலர், கமநல உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்;தியோகத்தர், பெருந்தோட்டக் கண்காணிப் பாளர், மீன்பிடி சமாஜம், மகளிர் அமைப்புகள், மரண ஆதார சமாஜங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள், மத அமைப்புகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கம்.
  2. இந்த நிறுவனங்களைக் கேள்வி கேட்கும் அவர்களின் உரிமை சப்பந்தமாக பிரஜை களுக்குக் கல்வியூட்டுதல்
  3. பல்வேறு வழிகளில் இந்த நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தும் கலந்துரையாடல் களை ஆரம்பித்து, அவசியமான செயற்பாடுகளை முன்னெடுத்தல்