சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Click Here to PDF – Download Here

தேர்தல் ஆணைக்குழு – திரு. சனத் நிசாந்தவின் மரணம் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, புத்தளம் தேர்தல் மாவட்ட இலக்கம் 16க்கான ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினராக திரு. எல்.கே.ஜே. பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு – திரு. சனத் நிசாந்தவின் மரணம் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, புத்தளம் தேர்தல் மாவட்ட இலக்கம் 16க்கான ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினராக திரு. எல்.கே.ஜே. பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Click Here to PDF – Download Here

தேயிலைச் சாயத்தின் கதை

தேயிலைச் சாயத்தின் கதை

ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் நூற்றுக்கணக்கான குடிமக்களின் கடின உழைப்பின் கதை உள்ளடங்கியிருக்கிறது, அதனாலேயே, பூரணமான ஒரு கோப்பை இலங்கை தேநீரை நாம் அனுபவிக்க முடிகிறது.

தேயிலைச் சாயம் புகைப்படக் கண்காட்சி

நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, தொலைக்காட்சியைப் பார்க்கும்போது அல்லது ஓய்வாக இருக்கும்போது ஒரு தேநீர் கோப்பையை சுவைக்கின்றீர்களா?

அது உங்களுக்கு எவ்வளவு இனிமையை, சுகத்தைக் கொடுக்கிறது? ஆனால், இந்தச் சுவையான தேநீர் கோப்பையின் சுவையின் அடியில் உள்ள கண்ணீர்ன் கதையை நீங்கள் அறிவீர்களா? தேநீர் கோப்பைக்காக கஷ்டப்படும் சகோதர மக்களைப்பற்றி நீங்கள் ஒரு நொடிப்பொழுது யோசித்தீர்களா?

அந்தத் தேநீர் கோப்பையில் மறைந்திருக்கும், மலையக மக்களின் வாழ்க்கையை, நாம் இப்புகைப்படக் கண்காட்சியின் ஊடாகப் படம்பிடித்துக் காட்டுகின்றோம்.

‘மலையக அடையாளத்தைக் கொண்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்தது முதல், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இச்சமூகம் வழங்கும் பங்களிப்பை விலை மதிக்க முடியாது.”

 

‘சிலோன் ரீ ” அல்லது இலங்கைத் தேயிலை உற்பத்தி காரணமாகவே  இலங்கையை உலகு அறிகிறது ஆனால், தொடர்ந்தும் தேயிலைக் கொழுந்து பறித்தல், தேயிலைச் செடிகளைக் கவாத்து வெட்டுதல்,  பசளையிடுதல் போன்ற அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுக்கும் மலையகத் தமிழ் சமூகத்தின்  வாழ்க்கை நிலைமை மேம்படவில்லை. அனேக அரசியல், பொருளாதார, சமூக விடயங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு உரித்தான இடம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையைப் மீளப் பெறுவதற்கான சக்தி அவர்களுக்கு உண்டு.

இச்சகோதர சமூகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கவிதைகளும் பாடல்களும் பல்வேறு படைப்புக்களும் ஏராளம். அவற்றில் அனேகமான படைப்புக்கள் அனுதாப மனப்பாங்குடன் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களுக்காக சமூக அறிவினை விரிவாக்குவதில் வெற்றி கண்டுள்ளன. மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையின் குறுக்கு வெட்டை காட்சிப்படுத்துவதே இப்புகைப்பட கண்காட்சியின் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது. அதாவது அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார வாழ்வு பற்றிய சமூக உணர்வை வழங்குவதன் மூலம் அவர்களுடைய யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகும்.

 

மலையகப் பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பெருந்தோட்டங்களைச் சார்ந்த இ

ளைஞர்களும் யுவதிகளும் படம்பிடித்த புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. நுவ

ரெலிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஹொலிருட் மற்றும் லொகி பெருந்தோட்டங்களும், பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊவா ஹைலன்ட் பெருந்தோட்டங்களின் இளைஞர்களும் யுவதிகளும் இதன்போது பங்களிப்புச் செய்துள்ளனர்.

சுமார் ஓராண்டு காலம், சில செயலமர்வுகள் ஊடாக புகைப்படப்பிடிப்பு பற்றிய தொழில்நுட்ப அறிவையும் கலை மற்றும் சமூக அரசியல் அறிவையும், சமூக மாற்றத்திற்கான கலையைப் பயன்படுத்துவது பற்றிய அறிவையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய சமூக வாழ்வு அவர்களாலேயே கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது ஆய்வு ரீதியான நிகழ்ச்சித்திட்டமாகும். சமூக அறிவினை இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வழங்கி அவர்களுடைய வாழ்க்கையில் யதார்த்தத்தை ஆய்வு செய்தல் இதன் மூலம் இடம்பெறுகிறது. சிறந்த சமூக வாழ்வை உதயமாக்குவதற்கு அவசியமான நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கு இது காரணமாக அமைகிறது. அதே சமயம் மலையகத் தமிழ் சமூகத்தின் வாழ்க்கை மீது மூன்றாம் கண் கொண்டு அவதானிப்பதனூடாக அறிவினைப் பெறுவதும் குறிப்பிட்டதொரு கலந்துரையாடலுக்கான வழிகாட்டலுக்கும் இது உதவியாக இருக்கிறது.

சிறந்த சமூக வாழ்க்கையைப் பெறுவதன்  ஊடாக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மலையக தமிழ் சமூகம் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை

 

செய்தமை பற்றியும் இது தொடர்பான ஒரு கலந்துரையாடலை உருவாக்குவதற்கும் இக்கண்காட்சியினூடாக வழி சமைக்க முடியும்.

இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவதற்கு மலையக இளைஞர்களும் யுவதிகளும் அவர்களுகடைய சமூகமும் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.  அதே சமயம் இது ஒரு கூட்டு நடவடிக்கையாகும். மலையகத் தமிழ் இளைஞர் யுவதிகளை, மலையக தமிழ் சமூகம் இதன்பொருட்டு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியதோடு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஊவா சக்தி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் (Strengthening Reconciliation Processes in Sri Lanka (SRP) Deutsche Gesellscha

ft für Internationale Zusammenarbeit (GIZ)  நிறுவனத்தின் அனுசரனை மற்றும் நிதி உதவியின் அடிப்படையில் நீண்டகால செயற்பாட்டின் பெறுபேறாக இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

இலங்கையில் பிரசித்திபெற்ற இரண்டு புகைப்படக் கலைஞர்களான நதிஷ்க்க ரணசிங்க, அஜித் செனெவிரத்ன ஆகிய இருவரும், மலையக இளைஞர் யுவதிகளுடன் தொடர்புகொண்டு, புகைப்படம் எடுத்தல் பற்றிய அறிவையும் தேர்ச்சியையும், மேற்படி இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சி வழங்கினர்.

Click Here to PDF – Download Here “The Kahata”

இலங்கையின் மலையகத் தமிழ்ச் சமூகங்களால் முகங்கொடுக்கப்பட்ட பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு சாத்தியமான கொள்கைச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அவை முழுவதையும் உள்ளடக்கியிராத ஒரு குறிப்பின் விளக்கம்.

இலங்கையின் மலையகத் தமிழ்ச் சமூகங்களால் முகங்கொடுக்கப்பட்ட பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு சாத்தியமான கொள்கைச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அவை முழுவதையும் உள்ளடக்கியிராத ஒரு குறிப்பின் விளக்கம்.Click Here to PDF – Download Here

ஒரு பரந்த கொள்கைக் கலந்துரையாடலுக்கான ஆரம்ப ஏற்பாட்டமைப்பு.

Click Here to PDF – Download Here

இலங்கையில் நீர் தொடர்பான முரண்பாடுகளைத் துரிதமாக அடையாளங்காணுதல்

இலங்கையில் நீர் தொடர்பான முரண்பாடுகளைத் துரிதமாக அடையாளங்காணுதல் – “இலங்கையில் தகவலறிந்த ஆதரித்து வாதாடுதலையும் சமூக
ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதற்கு குடியியல் வெளியை உருவாக்குதல்”

Click Here to PDF – Water Policy – Download Here

இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள்

இலங்கையின் விவசாயத்துறையில் உள்ள பிணக்குகள் – “இலங்கையில் தெரியப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் சமூக
ஒருங்கிணைப்பிற்கு குடியியல் வெற்றிடத்தை உருவாக்குதல்”

Click Here to PDF – Agriculture Policy – Download Here

இலங்கையில் நுண் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒழுங்குறுத்தும் பொறிமுறையின் அவசரத் தேவை குறித்த ஒரு சுருக்கமான விவரணம் – பின்னணிக் குறிப்பு

இலங்கையில் நுண் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒழுங்குறுத்தும் பொறிமுறையின் அவசரத் தேவை குறித்த ஒரு சுருக்கமான விவரணம் – பின்னணிக் குறிப்பு

Click Here to PDF – Micro Finance Policy – Download Here

கொள்கைத் தொகுப்பு இலங்கை ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் பிரஜைகளின் குரல் – ஜனவரி 2023

கொள்கைத் தொகுப்பு இலங்கை ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் பிரஜைகளின் குரல் – ஜனவரி 2023

Click Here to PDF – Adivasi Policy – Download Here

 

A BRIEF REPORT ON THE IMPLEMENTATION OF THE OFFICIAL LANGUAGES POLICY (OLP) IN SELECTED MINISTRIES & GOVERNMENT INSTITUTIONS & PUBLIC PERCEPTION ON OLP IN SRI LANKA

A BRIEF REPORT ON THE IMPLEMENTATION OF THE OFFICIAL LANGUAGES POLICY (OLP) IN SELECTED MINISTRIES & GOVERNMENT INSTITUTIONS & PUBLIC PERCEPTION ON OLP IN SRI LANKA

Click Here to Pdf – A Brief Report on the Implementation of the Official Languages Policy (OLP)

அருணோதயம்

மாணவர்களுக்கிடையேயான பரிமாற்றத் தொடர் நிகழ்ச்சித் திட்டம் 2006 வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பன்முகத்தன்மை மற்றும் இன நல்லிணக்கத்தைப் போற்றும் முகாம் உணர்வைக் கொண்டாடும் வகையில் இந்த வண்ணமயமான, நினைவுப் பரிசு முகாம் அறிக்கைகள், தொகுப்பு அனுபவங்கள், உரைகளின் சிறப்பம்சங்கள், மாணவர்களின் பார்வைகள் மற்றும் எழுத்துக்களின் தொகுப்பு.

Arunodaya tamil

இலங்கையில் தகவல் அறியும் உரிமை : கொள்கை அமுலாக்கச் சிக்கல்களும் சவால்களும்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமானது  தகவல் அறியும் உரிமை: கொள்கை மற்றும் அமலாக்கத்தின் சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது, இது சமீபத்திய தகவல் சட்டம் தொடர்பான பத்திரிக்கையாளர்களின் பகுப்பாய்வாகும். இந்த வெளியீட்டில் இதுவரை வெளியிடப்படாத தகவல் பற்றிய வழக்கு ஆய்வுகள் பலவிதமான கொள்கை நிலைகள் குறித்த கவலைகளை எழுப்புவதற்கு ஒரு பயனுள்ள கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது மற்றும் கொள்கைகள் மற்றும் நடைமுறையில் உள்ள அனுபவங்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது சமூகம் தொடர்பான பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையில் பத்திரிகையாளர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும் பார்வைகளையும் முன்வைத்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் CPA இன் RTI 011-3030463 உடனடி தொடர்பு  பொது அழைப்புகளின் சுருக்கமான பகுப்பாய்வையும் இந்த அறிக்கையில் கொண்டுள்ளது. நீண்ட காலப் போராட்டமும், பல்வேறு மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் நீடித்த வாதமும் முக்கிய அடையாளத்திற்கு வழிவகுத்தது.

அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக தகவல் அறியும் உரிமையை (தகவல் அறியும் உரிமை) அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வெளியீடு, FNF ஆல் ஆதரிக்கப்படுகிறது, இலங்கையில் தகவல் அறியும் உரிமையை ஊக்குவிப்பதற்காக CPA ஆல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாதிட்டதைத் தொடர்ந்து, பொது நலனுக்காக ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த உரிமையை திறம்பட பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.

Please Click Here PDF – RTI – Issues and Challanges of Policy and Implementation

 

இலங்கையில் மனித உரிமைகளும் ஜனநாயகமும்

இலங்கையில் மனித உரிமைகளும் ஜனநாயகமும்

ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் சிவில் சமூகத்திற்கும் எதிரான அச்சுறுத்தல்கள்

Click Here PDF – Human Rights and Democracy

இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான கொள்கைப் பரிந்துரைகள்

இலங்கையில் வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான கொள்கைப் பரிந்துரைகள்

இலங்கையில் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.

Click Here Pdf

உங்களது சட்டத்துக்கு கீழ்ப்படிய வேண்டிய எமது மண், இலங்கையில் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்

உங்களது சட்டத்துக்கு கீழ்ப்படிய வேண்டிய எமது மண், இலங்கையில் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்

பிரஜைகளின் குரல்  E-Magazine – PDF இற்காக இங்கே பிரவேசிக்கவும்.

தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை

 

தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை
தயாசிரி ஜயசேக்கர
பாராளுமன்ற உறுப்பினர் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

 

நாட்டில், இன்று காணப்படும் சூழ்நிலை உண்மையில் முதலாவது விடயம் பாராளுமன்றத்தின் 225 பேரும் அவசியமற்றவர்கள் என்ற விடயம். இது இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சொல்லும் விடயம் அல்ல போராட்ட பூமியிலியிருக்கும் ஒரு சில குழுவினர்களால் தோற்றுவிக்கப்பட்ட விடயம் என்பதே அங்குள்ள பிரதான நெருக்கடியாகும். இவ்வாறுதான் 2019லும் 225 வேண்டாம்.

பாராளுமன்றத்திற்கு குண்டு வீச வேண்டும் எனச் சொல்லிக் கொண்டுவந்த 225ம் தான் இப்போது மீண்டும் வேண்டாம் என்ற நிலைமைக்கு வந்துள்ளது. உண்மையில் இங்கிருப்பது இலக்கத்திலுள்ள பிரச்சனையல்ல. தாம் நியமிக்கின்ற பிரதிநிதி பற்றிய நம்பிக்கை, கௌரவம், அவர் உண்மையில் போய் என்ன செய்வார், பாராளுமன்றத்தில் செயற்படுகின்ற செயல்முறை, போன்றவை பற்றிய பிரச்சனையாகத் தான் நான் அதனைக் காண்கின்றேன். இரண்டாவது விடயம், 74 வருடங்களாக அரசியல் வேண்டாம் என்கின்ற விடயம். 74 வருடங்களில் அல்ல இந்த பிரச்சனை எழுந்தது. 7

 

7க்கு முன்னர் இருந்த அரசாங்கங்களில் ஊழல் தன்மை குறைவாக இருந்தது. நபர்கள் தீயவர்கள் அல்ல. எமக்குத் தெரியும் சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர அவர்கள் உயிரிழக்கும் போது அவர் கருணைத் தொகையையே பெற்றுக் கொண்டார். அவ்வாறான அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு சமூகம்தான் 77ன் பின்னர், விகிதாசார தேர்தல் முறையும் திறந்த பொருளாதார முறையும் காரணமாக பாரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

அதனால் இது 40 வருடங்களுக்கு முந்திய அரசியலுடன் ஏற்பட்ட நிலைமை என்றே நான் நம்புகின்றேன். தேசிய சபை தொடர்பான பிரேரணை அவ்வாறே, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து தொழில்வாண்மையாளர்களைக் கொண்ட தேசிய சபையொன்றைத் தாபித்து, அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு அரசாட்சி செய்ய வேண்டும் என்ற விடயம், இந்த போராட்ட பூமியில் இருந்தவர்களிடமிருந்து வந்த பாரிய முன்மொழிவாகவே இருந்தது. அதைத் தான் நாமும் பிரேரித்துள்ளோம்.

அவர்கள் பாராளுமன்றத்திற்கு எங்களை நியமித்து அனுப்புவதைப் போன்றே மறுபுறத்தில், பாராளுமன்றத்திற்கு நியமித்து அனுப்புவர்களிடையிலேயே மேலும் ஒரு குழுவினரை அரசியலுக்கு எடுத்துக் கொள்ள, அவர்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள, கருத்துக்கள் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளுகின்ற ஒரு சபை இருக்க வேண்டும் என்ற விடயம். ஒரு வகையான பெறுமதியுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்ற விடயமாக நாம் இதனைக் காண்கின்றோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் எமது ஏற்பாட்டாளர்களை தலைவர் நியமிப்பதில்லை. தலைவர் கடிதத்தைக் கொடுத்தாலும் அதற்கு முன்னர் சில நிகழ்வுகள் உள்ளன. ஏனென்றால் நேர்முகத் தேர்வு விசாரணைச் சபையொன்று உள்ளது.

அச் சபைக்கு நபர்கள் வருவார்கள். அவர்களின் தகவல்கள் கலந்துரையாடப்படும். அதிலிருந்துதான் நாம் அந்தந்தத் தொகுதிகளுக்கு ஏற்பாட்டாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்போம். கட்சித் தலைவர் ஒருவரால் நபரொருவர் நியமிக்கப்படுவது நியாயமான முறையல்ல. தேர்தலொன்றின் போது தாம் விரும்பிய நபருக்கு வாக்களிக்க சிறந்த பட்டியலொன்று இல்லையென்பது மக்களிடமிருந்து விடுக்கப்படும் பாரிய குற்றச்சாட்டு. சில மாவட்டங்களில் பட்டியலை எடுத்துக் கொண்டால், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், சமூக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், காடையர்கள், அயோக்கியர்கள், கல்வியறிவற்றவர்கள் என இவ்வாறான பல எண்ணிக்கையிலான பெயர்கள் இந்தப் பட்டியலில் காணப்படுகின்றன.

அதுதான் காணப்படுகின்ற பிரதான நெருக்கடி. மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய மனிதர்கள் இந்த பட்டடியலில் இல்லை. ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளர்கள் தேவை அரசியற் கட்சி என்ற ரீதியில் எம் அனைவருக்கும் நாட்டிலும் சமூகத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை ஈடுபடுத்தும் பொறுப்புள்ளது. ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், கொலை செய்தவர்கள், கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பட்டியலின் மூலம் சமர்ப்பிக்கும் போது தேர்ந்தெடுக்கின்ற ஆற்றல் மக்களுக்குக் கிடைக்காது.

அது தொடர்பான பல விடயங்களை நாம் கலந்துரையாடி வருகின்றோம். அரசியலமைப்புத் திருத்தம் என்ற விடயத்தில், இங்கு சொல்லப்பட்ட விடயங்களுடன் இணைந்து இப்போது காணப்படும் தேர்தல் முறையும் சீர்திருத்தப்பட வேண்டும். அது பற்றியும் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். எமது பல பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளோம். எதிர்காலத்தில் மிக விரைவாக இந்த தேர்தல் திருத்தச் செயற்பாடுகளை வலுப்படுத்தினால் மட்டுமே பிரதிநிதித்துவ சனநாயகம் வலுப்பெறும். போராட்டத்துடன் தொடர்புபட்டுள்ள மனிதர்களின் உணர்வுகளை ஓரளவுக்கு இந்த செயற்பாட்டில்தான் ஆசுவாசப்படுத்த நேரிடும் என நான் நம்புகின்றேன்.

அபிவிருத்திக்கும் அரசியலமைப்பு ரீதியான சமநிலை அவசியம்.

அபிவிருத்திக்கும் அரசியலமைப்பு ரீதியான சமநிலை அவசியம்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் – ஐக்கிய மக்கள் சக்தி

புதியதொரு அரசியலமைப்பு தொடர்பான கருத்து மீண்டும் தோன்றியுள்ளது. 2022 ஏப்ரல் 12ம் திகதி அரசு வங்குரோத்துத் தன்மையை வெளியிட்டதே அதற்குக் காரணம். இதனால் மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சனைகளோடு தமது பிரதிநிதிகளையும் ஆட்சியாளர்களையும் பாரதூரமான முறையில் கேள்விகேட்கத் தூண்டப்பட்டுள்ளார்கள். அதனாலேயே பாராளுமன்றத்திற்கு வெளியே நேரடி சனநாயகம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் பிரதிநிதித்துவ முறையைப் பற்றிய கலந்துரையாடலொன்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் நெருக்கடியை எடுத்துக் கொண்டால், அதற்கு ஒரு வரலாற்று ரீதியான காரணம் இருந்தாலும், இந்த நெருக்கடி இந்த அளவுக்கு முற்றி வளர்ந்ததற்கு 2010ன் பின்னர், எம்மால் எடுக்கப்பட்ட வணிகமல்லாத கடன்களை எந்தவொரு வருமானத்தையும் ஈட்ட முடியாத கருத்திட்டங்களில் முதலீடு செய்ததும், அதிலிருந்து பெரும் பணத்தொகையை கொள்ளயடித்ததுமே காரணம்.

அது அரசியலமைப்பிலுள்ள சிக்கலா என்ற கேள்வி எம்முன்னே காணப்பட்டாலும், அதன் பின்னணியில் ஆளுகை (Govewernance) பற்றிய கேள்வி உள்ளது. அதனால், அடுத்த அரசியலமைப்பொன்றின் மூலம்பெரும்பாலும் கடந்தகால அரசியலமைப்புகளில் சிறுபான்மை இன மக்களின் துன்பதுயரங்கள் அல்லது அபிலாசைகள் பற்றிப் பேசினாலும் இப்போது அதைக் காட்டிலும் விரிவான துறையொன்றில் சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நடத்தைகள் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாடலுக்கு எடுப்பதற்கான வாய்ப்புகள் விரிவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல் பொதுவாக அரசியலமைப்பு பற்றிய அரசியல் விஞ்ஞானத்தின் வரைவிலக்கணங்களுக்கு ஏற்ப, பொருளாதாரம் பற்றிய விடயங்கள் அரசியலமைப்பில் பிரதிபலிக்கப்படுவதில்லை.

அவை கட்டளைச் சட்டங்களால் பிரதிபலிக்கப்படுகின்றன. எனினும் இப்போதிருக்கின்ற நிலைமையின் கீழ், ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் தன்னிச்சையாக தீர்மானமெடுப்பதற்கு இடமளிக்காது, அரசியலமைப்பு ரீதியான சமநிலையொன்று அபிவிருத்தியென்ற விடயத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தோன்றியுள்ளது. தேசிய பௌதீகத் திட்டத்தை முன்மொழிந்துள்ளோம். அவ்வாணைக்குழுவை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு வெளியேயான அபிவிருத்திச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளோம். அது தவிர மரபு ரீதியான கட்சி அரசியல் மீது பாரதூரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

எமது நாட்டில் புரட்சிகரமான அரசியலில் ஈடுபட்டவர்கள் ஆயுதப் போராட்டத்தினால் இந்த முறையை புரட்டிப் போட்டுவிட எப்போதும் எதிர்பார்த்தனர். வேறு முறையில் சமூக முறையொன்றை தாபிக்க முயன்றனர். அவை தோல்வியடைந்தன. அதற்கேற்ப சனநாயக முறை மட்டும் இலங்கையில் தோல்வியடைந்துவிடவில்லை. ஆயுத அரசியலும் பாரதூரமான முறையில் தோல்வியுற்றிருக்கின்றது. அவ்வாறே ஆயுத அரசியல் மூலம் கட்டியெழுப்ப முனைந்த சோசலிசம் போன்ற விடயங்கள் கியூபா போன்ற நாடுகளைப் பார்க்கின்ற போது மிக மோசமான முறையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சமூக முறைமைகள் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இன்னும் அந்த நினைவுகளைச் சுமந்துகொண்டுள்ளவர்கள் காணப்படுவதால் அச் சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்சிகளின் உள்ளக சனநாயகம் எனவே தாம் பின்பற்றுகின்ற பொருளாதார முறை எது என்பது பற்றி மாத்திரமன்றி கட்சி முறை மற்றும் கட்சித் தலைவர்களுக்குக் கிடைத்திருக்கும் எல்லையற்ற அதிகாரங்கள், கட்சிகளுக்குள்ளே சனநாயகம் இல்லாமை, தோல்வியின் போது விலகிச் செல்லாதிருக்கும் பண்பு, மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திலோ, மாகாண சபையிலோ, பிரதேச சபையிலோ புகுந்து கொள்ள எடுக்கின்ற வெறுக்கத்தக்க முயற்சி, அவ்வாறே இந்த நாட்டில் குடும்பவாதத்தால் ஏற்படுத்தப்பட்டு பாதிப்பு போன்றவை பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும். இப்போத பாராளுமன்றத்தில் மூன்றில் ஒன்று உறவினர்கள், இன்னுமொரு குழுவினர் முறைகேடான பணத்தைக் கொண்டு விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொண்டு வந்தவர்கள். அவ்வாறே ஊடகங்களால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள், குறிப்பாக இலத்திரனியல் ஊடக உரிமையாளர்கள் தமது குழுக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக பாரிய செயற்பாடொன்றை கட்டவிழ்த்து விடுவதுடன் தாம் விரும்பாதவர்களைத் தோற்கடிப்பதற்கும் அபகீர்த்தீக்கு ஆளாக்குவதற்குமான செயல்களையும் வழிநடத்துகின்றனர்.

இந்த ஊடகங்கள் மற்றும்கட்சிகளில் உள்ளக சனநாயகம் பற்றிய பாரிய கலந்துரையாடலொன்று இப்போது ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது.வெகுசன ஊடகமும் முறைகேடான மூலதனமும் வெகுசன ஊடகங்களை எடுத்துக் கொண்டால், குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களின் அலைவரிசைகள் மக்களுக்குரித்தானவை. அவற்றை மிகவும் கேவலமான முறையில் மக்களை திசைதிருப்புவதற்கும், தாம் விரும்பாத நபர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்கும், தமது குழுவினரைக் கொண்டு வருவதற்கும் ஈடுபடுத்துகின்றனர்.

 

அவ்வாறே போதைப் பொருள் வியாபாரமாகட்டும், அரச கொந்தராத்துகளாகட்டும், இவ்வாறான முறைகளில் ஈட்டப்படும் பில்லியன் கணக்கில் ஈட்டப்படும் முறைகேடான நிதி தேர்தல்களின் போது முதலீடு செய்யப்படுகின்றது. அவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். இவ்வாறான நிலைமைகளுடன், சனநாயகம், மக்களின் வாக்குகள் என்பன கேலிக்குரியனவாக மாறியுள்ளன.

 

இந்த குடும்பவாதிகள், கேவலமானவர்கள் மற்றும் ஊடக பொம்மைகளால் ஆட்டப்படும் அரசியலுக்குப் பதிலாக மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த அரசியலமைப்பில் கட்சி உள்ளக சனநாயகத்தையும் வெளிவாரி சனநாயகச் செயற்பாட்டையும் தேர்தற் செயற்பாடுகளையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது என்பதுதான் எமது நம்பிக்கை. எமது கருத்திற்கு ஏற்ப, தேர்தல்கள் ஆணைக்குழு அமுல்ப்படுத்தப்பட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவானது ஒருபுறம் கட்சிகளின் உள்ள சனநாயகமற்ற அரசியலமைப்புகளை நிராகரிக்க வேண்டும். அவ்வாறே தேர்தற் தோல்வியின் பின்னர் பிரதான தலைவர்கள் விலகி ஏனைய தலைவர்கள் அதிகாரத்தில் நியமிக்கப்படும் சனநாயகச் சூழலொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு குறிப்பிட்ட வழக்கமொன்றை நாட்டில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அவ்வாறே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கட்சிகளின் பிரதேச குழுக்களின் விருப்பம் தொடர்பான விடயத்தை முன்னெடுக்கும் ஆற்றலை அடைய வேண்டும். சில நாடுகளில் வேட்பாளர்களுக்கான ஆரம்பத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவற்றினூடாகத்தான் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இல்லையேல் ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது மிகவும் அவசியமானது. தேர்தற் செலவுக் கட்டுப்பாடு இரண்டாவது விடயம் பணம். பணத்தைச் செலவிடுவது தொடர்பில் குறித்த கட்டுப்பாடொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்க வேண்டும். பெரும்பாலும் இதற்கான அவதானம் அரச சொத்துக்கள் மீது மட்டுந்தான் செலுத்தப்படுகின்றது.

 

அரச சொத்துக்கள் மட்டுமல்ல முறையற்ற விதத்தில் ஈட்டப்படும் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்
தேர்தல் செயற்பாடுகளில் குறிப்பிட்ட சட்டவிதிகளை விதிப்பதை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறே வெகுசன ஊடகம். வெகுசன ஊடகம் தொடர்பில் அச்சு ஊடகம் பற்றி ஒருவகையான பிரச்சனையிருந்தாலும், நாட்டில் பாரிய அளவில் பயன்படுத்தப்படுகின்ற ஊடகம் இலத்திரனியல் ஊடகமாகும். அந்த இலத்திரனியல் ஊடகங்களின் அலைவரிசைகள் நாட்டு மக்களுக்கு உரித்தானதாகும். இணைய வலைத்தளங்கள் மக்களுக்கு உரித்தானது.

 

அதனால் வலைத்தளத்தையும் இலத்திரனியல் ஊடகத்தையும் குறித்த கட்டுப்பாட்டில், சமநிலையான முறையில் பேணிச் செல்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் இடையீட்டுக்கான அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அளித்தல் அத்தியாவசியமானது. இல்லையேல் இது மிகவும் ஊழல்மிக்க வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும். அவ்வாறே பொதுமக்களுக்கும், அரசியலமைப்பிற்கும் வெளியே ஏதேனுமொரு வழக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

 

இப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்தாலும் பின்னர் ‘ஐயோ எங்களுக்கு நடந்தது என்ன? யார் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்’ என்று சொல்வதைக் காட்டிலும் ஆரம்பத்திலிருந்தே ஒருவகையான புரிதலுடன் செயற்பட்டிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது.

 

எனவே மக்களும் இந்த மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலொன்றைக் கோரிய பின்னர் வேட்பாளர் வெற்றியீட்டினால், அவர் அந்தப் பதவியை வகித்த பின்னர், அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்ற, வேட்பாளர் தோல்வியைத் தழுவினால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்ற,
பிரதான தேர்தல் தோல்வியின் பின்னர் கட்சித் தலைவர்கள் அவற்றிலிருந்து விலகி, மற்றவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கும் குடும்பவாத மற்றும் முறைகேடான பணத்தை வெறுக்கும் வகையிலான மரபொன்று நாட்டுக்கு மிக முக்கியம்.

போராட்டத்தில் கட்டுண்டு அரசியலமைப்புகளைத் தயாரிப்பது நாட்டில் இடி விழுவதற்கு ஒப்பாகும்

போராட்டத்தில் கட்டுண்டு அரசியலமைப்புகளைத் தயாரிப்பது நாட்டில் இடி விழுவதற்கு ஒப்பாகும்

பிரசன்ன ரணதுங்க

பாராளுமன்ற உறுப்பினர் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

எமது நாட்டில் அரசியலமைப்பானது 78லிருந்து இதுவரை 20 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இத் திருத்தங்களில் பல, அரசியற் கட்சிகளின் அல்லது நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே
கொண்டுவரப்பட்டன. அதனாற்தான் திருத்தங்கள் வந்து வந்து இது சிக்கல் நிலைமைக்கு வந்துள்ளது.

எனவே நிகழ்காலத்திற்குப் பொருந்துகின்ற புதிய அரசியலமைப்பொன்றை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கருத்து நாட்டு மக்களிடமும் கல்விமான்களிடமும் காணப்படுகின்றது. மக்களின் தேவைகளை இனங்கண்டு நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எனது ஆலோசனையும் கூட. ஜனாதிபதி முறையை இரத்துச் செய்கின்ற போது மாகாண சபைகளுக்கு என்ன நடக்கும், உள்ளூராட்சியாரின் கீழ் நிருவகிக்கப்படும், என்ற சிக்கல் தோன்றும். இவை ஒன்றோடொன்று இணைந்துள்ள விடயங்கள்.

 

எமது நாட்டை கூட்டாட்சி ஆக்குவதா, ஒற்றையாட்சி நாடாக்குவதா? என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். கூட்டாட்சியாக்குவதாயின் மாகாண சபைகளை வைத்துவிட்டு  ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தால் கூட்டாட்சியாகக் கொண்டு செல்லலாம். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இது ஒற்றையாட்சி அரசாங்கமாக இருக்க வேண்டும் எனச் சொல்வார்களாயின்இ மாகாண சபைகளைக் கையாள்வதற்கான சில அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். இதனைச் சுருக்கமாக விளக்க முடியாது. இது விரிவான கலந்துரையாடல்.

 

நான் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசியலமைப்புத் திருத்தக் குழுவில் நான்கு வருடங்கள் இருந்தேன். நாம் கலந்துரையாடினோம். முடிவொன்றைக் காணவில்லை. அரசியலமைப்பு எனப்படுவது ஓரிரு நாட்களில் தயாரிக்கக் கூடிய விடயமல்ல. நாட்டில் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பலருக்கு இந்த அரசியலமைப்பு பற்றிய புரிதல் இல்லை.

 

அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதே அவர்களது தேவை. எனவேஇ இந்த நாட்டில் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி இது தொடர்பான வாதவிவாதங்கள் ஏற்பட இடமளித்து இந்த நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என நம்புகின்றேன். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். இல்லாவிடில் இதனைச் செய்ய முடியாது. இன்று பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்  தவிர்ந்த ஏனைய அனைவரும் மக்கள் வாக்குகளால், மக்களின் பிரதிநிதிகளாகத்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

 

இன்று போராட்டத்தைப் பற்றி இந்த நாட்டில் பெரிதாகப் பேசுகின்றார்கள். அங்கிருக்கின்ற அறுபது தலைவர்களிடம் இடம்பெற வேண்டியது எதுவெனக் கேட்டால்இ அந்த அறுபது பேரும் அறுபது விடயங்களைச் சொல்வார்கள். அரசியலமைப்பைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் அங்கு பேசுகின்றார்கள். அவர்கள் எதனை முன்மொழிகின்றார்கள் என ஊடகங்கள் கேட்கும் போது அவ்வாறான பிரேரணைகள் அங்கேயில்லை என்கின்றார்கள். எனவே இந்தப் போராட்டத்தில் சிக்குண்டு, அரசியலமைப்புகளை தயாரிக்க முனைந்தால் அது நாட்டில் இடி விழுந்ததற்கு ஒப்பாகும்.

இது பற்றிய சிறந்த புரிதலையுடைய குழுக்களை ஒன்றிணைத்துக்கொண்டு நல்லதொரு கலந்துரையாடலை ஏற்படுத்திஇ அதனை மக்களுடைய தரப்பிலிருந்து பார்த்து மக்களின் குறிக்கோள்கள்
பாதுகாக்கப்படும் வகையில் செயற்படுகின்ற அரசியலமைப்பொன்றாகஅது இருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் 225 பேரும் வேண்டாம் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் இப்போதிருக்கின்ற 225 பேரும் விலகினால் அடுத்து பட்டியலில் உள்ள 225 பேர்தான் நியமிக்கப்படப் போகின்றார்கள். அதனால் நிறைவேற வேண்டியது போராட்டக்காரர்களின் நோக்கமல்ல.

 

பிரஜைகளின் குரல்

பழைய முறையை ஓரங்கட்டி புதிதாக சிந்திக்க வேண்டும்

பழைய முறையை ஓரங்கட்டி புதிதாக சிந்திக்க வேண்டும்

எம்.ஏ. சுமந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர் – இலங்கை தமிழ் அரசு கட்சி

போராட்டக்காரர்கள் மிகவும் அழுத்தமாக சொல்கின்றார்கள் தற்போதைய ஒட்டுமொத்த ஆட்சிமுறையில் மாற்றம் இடம்பெற வேண்டுமென்று. அவர்கள் சொல்லும் ஒருசில விடயங்கள் உண்மை என்பதை நாங்களும் உணர்கின்றோம். தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக முறை மக்கள் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுகின்றதா? அல்லது குறிப்பிட்ட பிரதிநிதிகளின் அபிலாசைகள் அல்லது மாற்றுக் கருத்தா என்ற நியாயமான சந்தேகம் நம் அனைவருக்குமே உண்டு. இந்த முறையை முழுமையாக மாற்றுவதாயின் எமக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம். அதனூடாக நடைமுறையிலுள்ள பிரதிநிகளை தெரிவு செய்யும் முறையை மாற்றலாம்.

 

தற்போது அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்கள் முன்னிறுத்தும் செயன்முறை இடம்பெறுகின்றது. மாறாக பழைய தேர்தல் முறையானது, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தமது பிரதிநிதிகளை முன்நிறுத்தினர். நடைமுறை செயன்முறையில் ஐந்து வருடங்களுக்கு அதிகாரமளித்து பிரதிநிகளை தெரிவுசெய்து அனுப்பியதன் பின் குறிப்பிட்ட பிரதிநிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு நடைமுறை செயன்முறையில் ஐந்து வருடங்களுக்கு அதிகாரமளித்து பிரதிநிகளை தெரிவுசெய்து அனுப்பியதன் பின் குறிப்பிட்ட பிரதிநிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு தலையீடு செய்வதற்கும், அழுத்தம் தெரிவிப்பதற்கான ஆற்றல், அதிகாரம் இவர்களை நியமித்த மக்களுக்கு இருப்பதில்லை.

 

புதிய அரசியலமைப்பிற்கான சவால் 27 தலையீடு செய்வதற்கும், அழுத்தம் தெரிவிப்பதற்கான ஆற்றல், அதிகாரம் இவர்களை நியமித்த மக்களுக்கு இருப்பதில்லை.

உள்ளுராட்சி மன்றங்களிலும் இவ்வாறான முறையே இடம்பெறுகின்றது. வாக்கெடுப்பில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அந்த சபை ஒன்றுகூடி ஆட்சியமைப்பது எவ்வாறென்பதை தீர்மானிக்கின்றது. தற்போதைய முறைக்கமைய அதிக வாக்குகளை அல்லது அதிக தொகுதிகளை வென்ற கட்சியே ஆட்சியமைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.

 

இம்முறை மாற வேண்டுமென்றால் மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்து முன்நிறுத்தி, குறிப்பிட்ட பிரதிநிதி வாக்கெடுப்பால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சியை அல்லது குழுமுறை (கொமிடி) ஒன்றை உருவாக்க வேண்டும். தற்போது இம்முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

பொதுமக்கள் சபை என்றால் என்ன? பொதுமக்கள் சபை என்பது தொடர்பிலும் இந்நாட்களில் சில கலந்துரையாடல் இடம் பெற்றுவருகின்றன. பொதுமக்கள் சபை என்பது குறித்து பின்வருமாறு விளக்கலாம். அதன்போது வெவ்வேறு மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து, அவ்வாறான பிரதிநிதிகள் ஒன்றுகூடி பாராளுமன்றமொன்றாக அல்லது பொதுமக்கள் சபையாக ஒன்றுகூடி பொறுப்புக்கள் ஏற்று ஆட்சி முன்னெடுத்தல் எனலாம்.

 

இம்முறைகளை மேற்கொள்ள வேண்டுமெனின் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, நடைமுறைச் செயன்முறையை ஒருபுறம் வைத்து, புதிதாக சிந்திக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் சபையென்பது நாட்டுக்குரிய முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட
தீர்மானங்கள் பொதுமக்கள் சபைகளுக்கு அனுப்பியதன் பின் இறுதியாக பிரதான சபைக்கு அனுப்ப வேண்டும்.

 

இந்த முறையை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்பட்டாலும் தற்போது எமது நாட்டிற்கு அவ்வாறான முறையொன்று அவசியமென்ற நிலைக்கு நாடு முகம்கொடுத்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையினுள் ஐந்து வருடத்திற்கு அதிகாரங்களை வழங்கி பிரதிநிதிகளை தெரிவுசெய்து அனுப்பியதன் பின்னர் குறித்த பிரதிநிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு எதிராக தலையீடு செய்வதற்கான அல்லது அழுத்தம் செலுத்துவதற்கான ஆற்றல் அப்பிரதிநிதிகளை நியமிக்கும் பொதுமக்களுக்கு இருப்பதில்லை.

 

எமது நாடு முகம் கொடுத்துள்ள தற்போதையநிலைக்கு இம்முறையும் முக்கிய காரணம் என்பதை அதானிக்க முடிகின்றது. ஆகவே முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தலையீடு செய்வது பொதுமக்கள் சபையின் முக்கிய பணியாகும். மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது அதுகுறித்து ஆராய்ந்து, குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதியை நீக்கி, வேறொருவரை நியமிப்பதற்கான அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

 

அத்தோடு எனது யோசனை என்னவென்றால் புதிய அரசியலமைப்பில் இவை உள்ளடக்கப்பட்டால் மாத்திரமே இந்த அரசியலமைப்பு உயர் ஜனநாயகப் பண்புடைய அரசியல் அமைப்பாக அமையும். இந்த முறையை நடைமுறைப்படுத்துவது இலகுவானதல்ல ஆனபோதும், நாம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருந்தால் இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய செயன்முறையை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

 

இதன்போது எமக்கு தொழில்நுட்ப உதவியை வழங்க முடியும். மேலும் நவீன உலகில் உயர்தர ஜனநாயக செய்முறைக்காக இது போன்ற நடைமுறை பிரச்சினைகளுக்கு விடைகண்டுள்ளனர். அவ்வாறு இடம்பெறவில்லை என்றால் தொடர்ச்சியாக மக்களது அபிலாசைகள் திரிபடையும்.

 

பிரஜைகளின் குரல்

கட்சிகளின் உள்ளக சனநாயகமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

கட்சிகளின் உள்ளக சனநாயகமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாராளுமன்ற உறுப்பினர் – தேசிய மக்கள் சக்தி

இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இந்த பிரசைகளின் எழுச்சியை, அரசியல் விழிப்புணர்வுடன் எமது நாட்டுக்குத் தேவையான அரசியல் மாற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற தருணமாகவே பார்க்கின்றோம். குறிப்பாக சனநாயக கட்டமைப்புக்குள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பிரசைகளுக்குமிடையே காணப்படும் தொடர்பு பற்றிய புதிய வரைவிலக்கணம் அவசியப்படுகின்றதும் அது பற்றிய கலந்துரையாடல் தோன்றியுள்ளதுமான தருணம். சுருக்கமாகச் சொன்னால், ஆட்சியாளர்களுக்கும் பிரசைகளுக்குமிடையில், புதிய சமூக உடன்படிக்கையொன்று கோரப்படும் நேரம். தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் இன்று காணப்படும் அரசியலமைப்பின் மூலம் வரக்கூடிய அதிகபட்ச தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். இதனைத் தொடர்ந்தும் சீர்திருத்துவதன் மூலம் எமது நாட்டின் சனநாயகத்தை விரிவாக்கவோ வலுப்படுத்தவோ முடியாது என்பது பலகாலமாக நாம் பேசுகின்ற விடயம்.

 

சனநாயகம் சார்பில் இவ்வரசியலமைப்பு பற்றிய பல விமர்சனங்கள் உள்ளன. எனவே நாம் புதிய அரசியலமைப்பொன்றைத் தான் பிரேரிக்கின்றோம். நாம் 2018லிருந்தே அடிப்படை ரீதியான சில பிரச்சனைகளைப் பேசுவதற்காக புதிய அரசியலமைப்பொன்றுக்கான ஆலோசனையை விடுத்தோம். தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் இன்று காணப்படும் அரசியலமைப்பின் மூலம் வரக்கூடிய அதிகபட்ச தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். இதனைத் தொடர்ந்தும் சீர்திருத்துவதன் மூலம் எமது நாட்டின் சனநாயகத்தை விரிவாக்கவோ வலுப்படுத்தவோ முடியாது என்பது பலகாலமாக நாம் பேசுகின்ற விடயம். 22 புதிய அரசியலமைப்பிற்கான சவால் சமத்துவத்தை சான்றுப்படுத்தல் போராட்டம் நடத்தியதும், சிரமப்பட்டதும், ஆயுதப் போராட்டம் போன்றவற்றை மேற்கொண்டதும் ஆட்சியாளருக்கும் பிரசைக்கும் இடையிலான இந்த சமூக இணக்கப்பாட்டைச் சரிசெய்து கொள்வதற்காகத்தான் என இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் எமது மக்கள் நினைக்கின்றார்கள் என்பது ஒரு விடயம். பல வருடங்களுக்குப் பின்னரும் கூட அது சரியாக இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள நேரிடுகின்றது.

 

அதனைக் கட்டியெழுப்புவதுதான் எமது அடிப்படை நோக்கம். சமத்துவத்தையும் சமமான சமூக நியாயத்தையும் உறுதிப்படுத்துவது அடுத்த நோக்கமாகும். அரசியலமைப்பொன்றில் அது மிக முக்கியமான ஒன்று. அங்கு பிரசைகளின் பல்வேறு வகையான அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பக்கச்சார்புகளை மேற்கொள்ள முடியாதவாறு, உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மனித உரிமைகள் அத்தியாயத்திலும் தனிநபர் அடையாளம் மட்டுமன்றி குழுக்களின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பால்நிலை, பாலியல், மத, கலாசார அடையாளங்கள் போன்றவை பாதுகாக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியம். ஏனெனில் எமது சமூகத்தில் பன்மைத்துவம் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பன்மைத்துவத்தில் இரண்டாம் தர (second class citizens) பிரசைகள் இருக்க வாய்ப்பில்லை. சமத்துவம் உறுதிப்படுத்தப்பட
வேண்டும்.

 

பிரசைகளின் அதிகாரத்தை அதிகரித்தல் சனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் பிரசைகளின் அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அடுத்த விடயம். இறையாண்மை பிரசையிடம்தான் உள்ளது. என்றாலும் எம்மால் இப்போதிருக்கின்ற முறைக்கு ஏற்ப, இறையாண்மை அதிகாரத்தை காட்டவோ அதனைச் செயற்படுத்தவோ தேர்தலொன்றின் போது மட்டுந்தான் முடிகிறது. அது போதுமானது அல்ல என நாம் நினைக்கின்றோம். சனநாயகத்தை வலுப்பெறச் செய்வதாயின், விரிவாக்குவதாயின், பிரசையொருவர் ஆட்சிச் செயற்பாட்டில் இதைவிட வலிமையோடு, தொடர்ச்சியாகச் செயற்படுவது எப்படியென்பதைப் பற்றியும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதனூடாக எம்மிடம் சில பிரேரணைகள் உள்ளன. இவை இறுதிப் பிரேரணைகளோ இறுதித் தீர்மானங்களோ அல்ல. இவற்றை நாம் கலந்துரையாடி வருகின்றோம். நான் ஓரிரு உதாரணங்களைக் குறிப்பிடுகின்றேன். தேர்தலொன்றின் போது அதிகாரத்திற்கு வரும்போது செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அரசியற் கட்சிகள், அவர்களின் தேர்தல் பிரகடனங்களை முன்வைக்கின்றன, வாக்குறுதிகளை முன்வைக்கின்றன.

 

அவற்றுக்கு ஏதேனுமொரு செல்லுபடித் தன்மை இருக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம். அத்தேர்தல் பிரகடனங்களுக்கு ஏற்ப நியமிக்கப்படுகின்ற அரசாங்கம் அவற்றைச் செயற்படுத்துவதில் கடப்பாடுடையதாக இருத்தல்வேண்டும். அந்த விடயம் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். வழங்கப்பட்ட அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, தமது மனித உரிமையொன்று மீறப்பட்டுள்ளது என யாரேனும் ஒரு நபர் நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். அப்போது அரசியற் கட்சிகள் தாம் முன்வைத்த தேர்தற் பிரகடனங்கள், வாக்குறுதிகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் கடப்பாடுடையவையாக இருக்கும். அப்போது தேர்தற் பிரகடனங்கள் எச்சரிக்கையுடன் சமர்ப்பிக்கப்படும் என நாம் நினைக்கின்றோம். முடியாத விடயங்களைச் செய்வதாக வாக்குறுதி வழங்காதிருப்பதைப் போன்றே பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றவும் தயாராக மாட்டா. ஏனென்றால தமது உரிமையொன்று மீறப்படுகின்றது என பிரசையொருவர் வழக்குத் தொடர அரசியலமைப்பு ரீதியாக வாய்ப்பு உள்ளது. பால்நிலை, பாலியல், மத, கலாசார அடையாளங்கள் போன்றவை பாதுகாக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியம். ஏனெனில் எமது சமூகத்தில் பன்மைத்துவம் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பன்மைத்துவத்தில் இரண்டாம் தர பிரசைகள் இருக்க வாய்ப்பில்லை.

 

புதிய அரசியலமைப்பிற்கான சவால் 23 திருப்பியழைக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் நாங்கள் சிந்திக்கின்ற இன்னுமொரு விடயம் (Right to Recall). திருப்பியழைக்கும் அதிகாரம். அதாவது தேர்தலொன்றில் நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதியின் நடத்தை பற்றிய விமர்சனங்கள் அவரை நியமித்த பிரசைகளிடம் இருக்குமாயின், அவர்கள் ஊழலில் ஈடுபடுவார்களாயின், ஏற்றுக் கொள்ள முடியாதவாறு நடந்துகொள்வார்களாயின் மனுவொன்றின் மூலம் அல்லது தேர்தலின் ஊடாக பிரசைகளுக்கு அவர்களைத் திருப்பியழைக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். 05 வருடங்கள் பூர்த்தியாகும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அந்த மக்கள் பிரதிநிதிகளை நியமித்த பிரசைகளால் அவர்களைத் திருப்பியழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். 05 வருடங்கள் எதை வேண்டுமானாலும், செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தானே இன்று மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றார்கள்.

 

அவர்கள் வாக்குறுதியளித்த விடயங்களைச் செயற்படுத்துவதில்லை. இன்னொரு புறம் மக்கள் கருத்தும் மாறியிருக்கின்றது. ஆனால் பிரசைகளால் எதுவும் செய்ய முடியாது. 05 வருடங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்கவும் இடைநடுவில் செய்யக் கூடிய விடயங்கள் பற்றி நாம் அவதானம் செலுத்த வேண்டும். கட்சிகளிலிருந்து அங்குமிங்கும் தாவுவதை நிறுத்த வேண்டும். அதன்மூலம் மக்களால் வழங்கப்பட்ட ஆணை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. ஏதேனுமொரு காரணத்திற்கா நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால் நியமித்தவுடன் அவர்களுக்குத் தேவையான பக்கம் சாய்ந்து விடுகின்றார்கள். இவை சனநாயகத்திற்கு எதிரானவை. இவற்றை அரசியலமைப்பு ரீதியாக நிறுத்த வேண்டும்.

 

இவ்வாறான சில பிரேரணைகள் எம்மிடம் உள்ளன. அவ்வாறே அரசியலமைப்பு ரீதியாகவும், கட்சி அரசியலுக்குள்ளும் இடம்பெற வேண்டிய இன்னொரு விடயம் உள்ளது. நாம் இந்த நேரத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் ‘வட்டார சபைகளை’ அமைத்து வருகின்றோம். அவ்வட்டார சபைகளால் கட்சியின் மேல்மட்டத்திற்கே அழுத்தம் செலுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அக்கட்டமைப்பை ஆட்சி முறையுடன் தொடர்புபடுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். உதாரணமாக தேர்தலொன்றின் போது கட்சியின் வேட்பாளர்களை அவ்வட்டார சபைகள் முன்மொழியக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வட்டார சபைகளின் ஊடாக தமது வேட்புமனு முன்னெடுக்கப்பட வேண்டுமேயன்றி மேலிருந்து இடுகின்ற ஒன்றாக இருக்க முடியாது. இதனூடாக கட்சி சனநாயகத்தை வலுப்படுத்தவும், பிரசைகள் ஏதேனும் செயற்பாட்டில் உறுதியாகப் பங்கேற்பதற்குமான வாய்ப்பு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 

அவ்வாறே இதனையும் சொல்ல வேண்டும். அரசியலமைப்பினால் அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசியலமைப்பு என்பது ஒரு விடயம். பிரசைகள் பற்கேற்பு இடம்பெறுவதாயின் பிரசைகள் ஒருங்கிணைக்கப்படுவதும், அரசியல் அறிவைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும்.

இலங்கையில் நுண்நிதிக் கடன் பிரச்சினை.

இலங்கையில் நுண்நிதிக் கடன் பிரச்சினை – பிரஜைகளின் குரல் வெளியீடு.

PDF இற்கு இங்கே பிரவேசிக்கவும் – பிரஜைகளின் குரல் வெளியீடு.

போராட்டத்தின் சமிக்ஞையை புரிந்துகொள்ளல்

போராட்டத்தின் சமிக்ஞையை புரிந்துகொள்ளல்

“பிரஜைகள் குரல்” என்பது இந்த நாட்டின் மக்களின் குரலை சமூக மயப்படுத்தும், பிஜைகளுக்கு முக்கியம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பரந்த கலந்துரையாடலை மேம்படுத்தும் நோக்காகக் கொண்ட வெளியீடாகும். 25 வருடகாலமாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கட்டியெழுப்பிய சமூகசார் கலந்துரையாடலை இச்சந்தர்ப்பத்தில் மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென சிந்தித்தோம். அதற்கமைய இந்த வெளியீடு மும்மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளதுடன், இக் கலந்துரையாடல்களை சமூக ஊடகத்தில் வீடியோப் பதிவுகளாக வெளியிடுவதற்கும் எதிர்பார்க்கின்றோம். அரசியலமைப்பு உருவாக்கம் என்பது நாட்டின் மிக முக்கியமான செயற்பாடாகும். சோல்பரி அரசியலமைப்பு தொடக்கம் 78 வது அரசியலமைப்பு வரையும், அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு உருவாக்க செயல்முறைகளில் இந்த சமூகத்தில் வாழும் மக்களது உண்மையான வாழ்வியல் எதிர்ப்பார்ப்புக்கள் பிரதிநித்துப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகின்றது. 71 ஆண்டு கிளர்ச்சியில் முன்வைக்கப்பட்ட செய்தியை புரிந்துகொண்ட வகையில், 78 ஆண்டு அரசியலமைப்பு அமைந்திருக்கவில்லை.

 

20வது தடவைகள் சீர்திருத்தப்பட்டு இன்றுவரை அமுலிலுள்ள 78வது அரசியலமைப்பு, 40 வருடங்களுக்கு மேலாக அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு கிளர்ச்சிகளால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிரஜைகளாக தமது உரிமைகளை கோரும் வடக்கு மக்களது பிரச்சினைகள் 30 வருட கால யுத்தமாக வளரும் வரை அதற்குறிய நியாயமான தீர்வை வழங்குவதற்கு அரசு தவறியது. யுத்தம் நிறைவடைந்து பத்து வருடத்திற்கும் அதிகமான காலம் கடந்தும் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. 88-89 களில் தெற்கு இளைஞர் கிளர்ச்சிகளின் ஊடாக முன்வைக்கப்பட்ட சமிக்ஞையை புரிந்துகொள்வதற்கும் ஆட்சியாளர்கள் தேர்ச்சி பெறவில்லை. சுதந்திரத்தின் பின்னர் கடந்த 75 வருடகாலமாக சமூகத்தால் முன்வைக்கப்பட்ட பாரதூரமான எவ்வித சமிக்ஞைகளையும் எந்த ஒரு ஆட்சியாளரும் புரிந்துகொள்ளவில்லை என்பது மேலும் தெளிவாகின்றது.

கடந்த நாட்களில் மேலெழுந்த மக்கள் போராட்டம், அண்மைக்கால வரலாற்றின் மிகவும் முக்கிய போராட்டம் ஆகும். இதில் பல சாதகமான அம்சங்களும், சில பாதாகமான அம்சங்களும் காணப்பட்டன. இதன் சிறப்பம்சம் யாதெனில் வன்முறையற்ற மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான போராட்டமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 71 மற்றும் 88-89 இளைஞர் கிளர்ச்சி சிறு ஆயுத கிளர்ச்சியாக அமைந்திருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் குழு 88-89 தலைமுறையினரினதும் பிள்ளைகளாகவும் 71 தலைமுறையினரின் பேரப்பிள்ளைகளாகவும் இருக்கலாம். இவர்களது போராட்ட முறை முற்றிலும் அஹிம்சையானது. அத்தோடு, இன, மத, பகுப்பு, கிராமிய-நகர, ஆண் – பெண் போன்ற எவ்வித பேதங்களுமின்றி அனைவரையும் ஒருங்கிணைக்கும் வலிமையும், அனைவருக்கும் சம அந்தஸ்துக் காணப்பட்டமையும் இப்போராட்டத்தின் சிறப்பம்சமாகும். மேற்குறிப்பிட்டவாரான பல சாதகமான அம்சங்கள் இதனூடாக மேலெழுந்தன.

ஆனபோதும் இந்த போராட்டத்தின் பின்னரும், அதன் சமிக்ஞைகளை புரிந்துகொள்ளாது வழக்கமான முறையில் முன்நோக்கி நகர்வதற்கான முயற்சியை அரசாங்க தர்பினர் மேற்கொள்வது கவலைக்குரிய விடயாமாகும். அமைச்சரவை, அமைச்சர் மற்றும் இறுதியாக ஜனாதிபதி வரை பதவி விலகுவதற்கு காரணமாயிருந்த தற்போதைய போராட்டத்திற்கு வெறுப்புடன் பதில் அளிப்பதை மிகத்தெளிவாக காணமுடிகின்றது.

இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையாகும். இப்பின்னணியில் எமது முயற்சியானது, போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட “முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல்” என்ற விடயம் குறித்து கலந்துரையாடலை ஏற்படுத்துவதாகும். நாட்டின் அரசியலமைப்பு அந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்திற்கும் ஏற்றுக் கொள்ளலுக்கும் ஏற்புடையதாக அமைந்திருக்க வேண்டும். அத்தோடு அரசியலமைப்பை உருவாக்க செயல்முறையும் பிரபுகள் மட்டத்தில், அரசியல் கட்சிகளது பொறுப்பு என மட்டுப்படுத்தாது சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரது பங்கேற்புடன் பரந்த கலந்துரையாடலின் மூலம் மேற்கொள்ள வேண்டியதொன்றாகும். அது ஒருசில நாட்களில் தயாரிக்கக் கூடிய விடயமொன்றல்ல. இதன் போது ஒரு வரைபில்லாது பல வரைபுகள் தயாரிக்கப்படலாம்.

எனினும், இறுதி வரைபு பொதுமக்கள் மத்தியில் பரந்தளவில் கலந்துரையாடப்பட வேண்டும். எமது முயற்சியானது புதிய அரசியலமைப்பு உருவாக்குதலில் மேற்குறிப்பிட்டவாறு கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். அதன் முதல் கட்டமாக, நடைமுறையில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர்கள் மேற்படி விடயம் குறித்து எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பதுகுறித்து விசாரித்துப் பார்த்தோம். மேலும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் அவர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதுகுறித்தும், ஜனநாயகத்தை வலுவூட்டுதல் மற்றும் கட்சி உள்ளக ஜனநாயகம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினோம்.

எதிர்காலத்தில் மேலும் பல தரப்பினருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். விசேடமாக இதுகுறித்து நிபுணர்களது கருத்துக்களை சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதற்கும், கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம். பேராசிரியர் ஜயதேவ உயங்கொட அவர்களது கருத்துக்களை இந்த இதழில் இணைப்பதன் நோக்கம் அதுவே. அச்சு வெளியீடுத் துறை முன்கொடுத்துள்ள சவால்கள் காரணமாக ஆரம்பத்தில் இவ்விதழ் இலத்திரனியல் வெளியீடாக மாத்திரம் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். ஆனபோதும் எதிர்காலத்தில் இதன் பிரதான விடயங்கள் தொடர்பில் திறந்த சமூகக் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவது எமது எதிர்பார்ப்பாகும். இக்கலந்துரையாடலுடன் இணைந்து இச்செயன்முறையை மேலும் மேம்படுத்துவற்கு பல்கலைக்கழக சமூக, தொழில் வாண்மையாளர்கள் மற்றும் இதுகுறித்து ஆர்வம் செலுத்தும் பிரஜைகளையும் அழைக்கிறோம்.

லயனல் குருகே

சிரேஷ்ட ஆய்வாளர்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

இலங்கை அரசியலமைப்பின் இருபத்தொராவது அரசியலமைப்புச் சீர்த்திருத்தம்

இலங்கை அரசியலமைப்பின் இருபத்தொராவது அரசியலமைப்புச் சீர்த்திருத்தம்

அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் பதிவிறக்கம் செய்ய

புதிய அரசியலமைப்பிற்கான சவால்

புதிய அரசியலமைப்பிற்கான சவால்

ஒரு நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பின் அடிப்படை தாற்பரியமாக அமைவது இறையாண்மையாகும், இவ் இறையாண்மை அதிகாரத்தின் ஆதாரம் மக்களே. எனவே, நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்பதும் நாட்டு மக்களின் பரந்த அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிரஜைகளின் போராட்டத்தின் கோரிக்கையானது நாட்டில் பரந்த சமூக மற்றும் அரசியல் ரீதியான சீர்த்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சீர்திருத்தங்களில் பின்பற்ற வேண்டிய சமூக-அரசியல் கொள்கைகள், அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய  ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது ஒரு மைய மற்றும் பிரதானமான தேவை என்பது எமது புரிதலாகும்.

நாட்டின் பொது தேசிய தேவையான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கோரிக்கையினை வலுப்படுத்துல் மற்றும் மக்கள் அபிலாஷைகளை பரந்த மற்றும் ஆழமாக தெளிவுபடுத்திக் கொள்வதற்கான தரமான பங்களிப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட “பிரஜைகளின் குரல்” என்ற பெயரில் முதலில் மக்கள் பிரதிநிதிகளின் குரலுக்கு செவிசாய்க்கும் முயற்சியாக இத்திட்டத்தினை உங்களிடம் கொண்டு வருகிறோம்.

புதிய அரசியலமைப்பிற்கான சவால் – PDF இற்கு இங்கே பிரவேசிக்கவும்

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

கண்டி ஹந்தான சுற்றாடல் வலயத்தில் இடம்பெறும் அனுமதியற்ற கட்டிட நிர்மான நடவடிக்கைகள் குறித்து திவயின செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்ட செய்தித் தொகுப்பு தொடர்பாக பாராளுமன்ற அமைச்சர் அவரது மனைவி ஆகியோரால் ஊடகவியலாளர் சமந்தி வீரசேக்கரவிற்கு தொலைபேசியின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி ஹந்தான பிரதேசம் சுற்றாடல் பாதுகாப்பு வலயமாகும். கண்டி நகருக்கு தேவையான நீரை வழங்கும் நீர் மூலங்கள் பலவற்றைக் கொண்ட உயிர்பல்வகைமை செறிந்த இப் பிரதேசத்தில் அரசியல்வாதிகளும் அவர்களது நலன்விரும்பிகளும் செல்வந்தர்களும் முறையற்ற விதத்தில் காணிகளை கையகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஹந்தான பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் திரு. அமித் சேனாநாயக்கவினால் கண்டி பொலிஸ் நிலையத்திலும் ஹந்தான முகாமைத்துவ குழுவிற்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 300 அடிக்கு மேற்பட்ட உயர் நிலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களின் மனைவிக்கு சொந்தமானதாக கூறப்படும் காணியொன்று உள்ளது. குறித்த காணியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக அமித் சேனாநாயக்க கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டினால் தற்போது கண்டி நீதிமன்றத்தில் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றது. இந்த சுற்றாடல் வலயத்தில் இடம்பெறுகின்ற அனுமதியற்ற கட்டிட நிர்மானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர் சமந்தி வீரசேக்கர 2021 ஜனவரி மாதம் 03ஆம் திகதி திவயின செய்தித்தாளில் விசேட கடிதத் தொகுப்பொன்றை பிரசுரித்திருந்தார்.

”குறித்த கடிதம் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு அச்சுறுத்தும் தொனியில் கதைத்து இத்தகைய கடிதத் தொகுப்பை பிரசுரிப்பதற்கு ஏதுவாக என்னிடமுள்ள ஆதாரங்கள் என்ன என வினவினார்கள். அவற்றை அவர்களிடம் தருமாறு தெரிவித்ததுடன் தொடர்ந்தும் என்னிடம் பேசுவதற்கு இல்லை எனத் தெரிவித்து அமைச்சர் கிரியெல்லவின் மனைவி தொலைபேசியை பாதுகாப்பு அதிகாரியிடம் கையளித்தார். அமைச்சர் கிரியெல்ல தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய தகவல்களை விசாரித்து இருக்கிறார்.” என சம்பவத்திற்கு முகங்கொடுத்த பெண் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் இவ் விடயம் தொடர்பில் தமது செய்தி நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் பொலிஸ் அல்லது வேறு தரப்பினருக்கு முறைப்பாடு அளிக்கவில்லை. சமந்தி வீரசேக்கர திவயின செய்திப் பத்திரிகையின் கண்டி மாவட்ட செய்தித் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

 

ஆறு தெருக்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறாமையினால் பிரதேசங்கள் பலவற்றிற்கு பாதிப்பு

ஆறு தெருக்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறாமையினால் பிரதேசங்கள் பலவற்றிற்கு பாதிப்பு

மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கம்புறுபிட்டிய பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள 06 கிராமிய வீதிகளுக்கு காபட் இட்டு செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவை இடைநடுவே கைவிடப்பட்டுள்ளமையினால் குறித்த வீதிகளின் ஊடாக பயணிக்கும் பிரதேச மக்கள் சுமார் ஒன்றரை வருட காலமாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. குறித்த ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட நிறுவனம் அதனை நிறைவு செய்வதற்கு போதிய நிதி வசதி இல்லா எனக் குறிப்பிட்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை இடை நடுவே இடைநிறுத்தியுள்ளது.

01.பொல்கஹமுல்ல – பெரகஹமுல்ல – நாரந்தெனிய வீதி 02. உள்ளல – மாஸ்முல்ல வீதி 03. லேனபட்டுவ – பிபிளவெல வீதி 04. பலொல்பிட்டிய – ஹதமுன வீதி 05. நாரந்தெனிய – பொரளுகெட்டிய வீதி 06. பரகஹதொட – பிபிலவெல போன்ற வீதிகளே இவ்வாறு 2020.02.10ஆம் திகதி மற்றும் அதற்கு அண்மித்த தினங்களில் காபட் இட்டு அபிவிருத்தி செய்தல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யட்டியன, உள்ளல, மாப்பலான, மாஸ்முல்ல, பிபுலவெல, விட்டியல, கம்உதாவ, மிரிஸ்வத்த, அத்துரலிய, லேனபட்டுவ, சப்புகொட, நாரந்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வீதிகளின் ஊடாக நாளாந்தம் பயணம் செய்வதுடன் அபிவிருத்தி நடவடிக்கைக்காக குறித்த வீதிகள் இடையிடையே உடைக்கப்பட்டுள்ளமை, வாய்க்கால்களை அமைப்பதற்காக தடிகள் அல்லது வேறு தூண்கள் நடப்பட்டுள்ளமை மற்றும் வீதிகளில் கற்கள் நிரப்பப்பட்டுள்ளமையினால் இந்த வீதிகளை உபயோகிக்கும் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

2020ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை செப்பனிடுவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வைபவ ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒப்பந்த நிறுவனம் தங்கல்லை நகரில் அமைந்துள்ளது. இந்த வீதிகளுள் ஒரு பிரதான வீதியான பலொல்பிட்டிய – ஹதமுன வீதி அக்குரெஸ்ஸவிலிருந்து தெற்கு அதிவேக வீதியின் இங்குருபத்வல நுழைவாயிலை இலகுவில் அடையக்கூடிய மாற்று வழியாகும். இதற்கு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ அவர்களே அடிக்கல் நாட்டியுள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களாக இந்த நிலைமையினால் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசியல்வாதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் குறித்த ஒப்பந்த நிறுவனமானது கறுப்பு பட்டியலில் இடப்பட்டு வேறு ஒப்பந்த நிறுவனத்திற்கு குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆயினும் ஏதோவொரு காரணத்தினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாது காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது.

 

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர்கள் 32 பேருக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர்கள் 32 பேருக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிவாரண சேவையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்ற மற்றும் ஒப்பந்த சேவையிலிருந்து நிரந்தர நியமனம் பெற்ற பணியாளர்களுக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்குவதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் அவர்கள் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு நிரந்தர நியமனம் பெற்றவர்கள் 18 பேரும் ஒப்பந்த நியமனம் பெற்ற 12 பேரும் 2021.06.23ஆம் திகதி முதல் தற்போது வரை சம்பளம் இன்றி சேவையாற்ற நேர்ந்துள்ளது. உரிமை மீறல் மற்றும் ஒப்பந்த மீறலுக்கு உள்ளாகியுள்ள பணியாளர்கள் 30 பேர் வரையில் காணப்படுவதுடன், அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொழும்பு தலைமை அலுவலகம், ரஜரட்ட சேவை, றுகுணு சேவை மற்றும் கதுரட்ட சேவை போன்ற நிறுவனங்களில் சேவையாற்றுகின்றனர்.

இவர்கள் அனைவரும் திருமணமான பணியாளர்கள் என்பதுடன் அனைவரும் பாடசாலை கல்வியை கற்கும் பிள்ளைகளை உடைய பெற்றோர்கள் ஆவர். தற்போது நாட்டில் நிலவும் அசௌகரிய நிலைமைக்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் கிடைக்கப் பெறாது நிர்க்கதியாகியுள்ள இந்த பணியாளர்கள் இவ்விடயம் தொடர்பில் நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவர்களால் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய உரிமை மீறல் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள ரஜரட்ட சேவை பணியாளர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வனைத்து நியமனங்களும் கடந்த காலத்தில் கூட்டுத்தாபன நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு குறித்த நியமனங்களை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குறித்த பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு இவ்விடயம் குறித்து எழுத்து மூலமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

அபாயா அணிந்து வந்த காரணத்தால் பாடசாலையை இழந்த பாத்திமா பக்மிதா ரமீஷ்

அபாயா அணிந்து வந்த காரணத்தால் பாடசாலையை இழந்த பாத்திமா பக்மிதா ரமீஷ்

கல்வியியல் கல்லூரி ஆசிரியையான பாத்திமா பஸ்மிதா திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு 2013 ஆம் ஆண்டு வருகை தருகிறார். அதற்கு முன் அவர் மூதூர் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பணியாற்றினார். ஆசிரியர் பணிக்கு இதுவரை குறித்த ஒரு சீருடை நிர்ணயம் செய்யாத நிலையில் பல முஸ்லிம் பாடசாலை ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது வழமை.

பாத்திமா பஸ்மிதா ஆசிரியை 2013 ஆம் ஆண்டில் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முதல் தடவையாக வரும் போதும் அவர் அபாயா அணிந்து வந்தார். எனினும், திரு பாத்திமா பஸ்மிதாவுக்கு அந்நாள் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றிய திருமதி சுலோசனா தமது பாடசாலையின் ஆசிரியைகள் ஆபாயா அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை எனவும், அவருக்கு அதில் ஏதேனும் சிரமம் இருப்பின், வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் தெரிவித்தார்.

திருமதி பாத்திமா பஸ்மிதா இரண்டு வாரங்களாக அவ்வாறு அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய அன்றிலிருந்து சேலையையும், தலையை மூடியவாறு ஸ்காப்பும் அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை கிண்ணியாவைச் சேர்ந்த மற்றுமொரு முஸ்லிம் இன ஆசிரியை ஒருவர் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வருகை தந்ததுடன், அவர் அதிபரின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்தி தொடர்ச்சியாக அபாயா அணிந்து பாடசாலைக்கு வருகை தந்ததாகவும், அதன் போது அவர் கறுப்பு நிற அபாயாவை அணிந்ததாகவும், பாத்திமா பஷ்மிதா ஆசிரியை கூறினார். எனினும், சுலோசனா அதிபரின் உத்தரவைப’ புறம் தள்ளி அபாயா அணிந்து வந்த அந்த ஆசிரியை தொடர்பில் ஏதோ ஒரு காரணத்தால் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாத்திமா பஷ்மிதா ஆசிரியை கூறினார்.

இதனை சாட்டாகக் கொண்டு, தானும் மீண்டும் சேலையிலிருந்து அபாயாவுக்கு மாறியதாக திருமதி பாத்திமா பஷ்மிதா கூறினார். அதிபரின் உத்தரவைப் பொருட்படுத்தாது அபாயா அணிந்து வந்த கிண்ணியா பிரதேச ஆசிரியை ஒரு மாத காலம் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றி பின்னர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றதுடன், திருமதி பாத்திமா பஸ்மிதா உள்ளிட்ட மேலும் மூன்று ஆசிரியைகள் இக் கல்லூரியிலேயே கடமையாற்றினர். அவர்கள் அங்கு கறுப்பு நிற அபாயா ஆடையை தவிர்த்து வேறு நிறங்களாலான அபாயா ஆடைகளை அணிந்து தலையை ஸ்காப் ஒன்றால் மூடினார்கள்.
எனினும், பாடசாலையால் அபாயா ஆடை குறித்தான எதிர்ப்பு தொடர்ச்சியாக ஏற்பட்டமையால், அவர்கள் இந்தப் பிரச்சனையை கல்வி அமைச்சிடம் முன்வைக்க நடவடிக்கை மேற் கொண்டனர். அங்கு அதிகாரிகள் உரிய நான்கு ஆசிரியைகளுக்கு அபாயா ஆடை தொடர்பான தீர்வை வழங்கும் வரை அவர்களை அருகில் இருக்கும் சஹிரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு தற்காலிகமாக இணைப்பு செய்வதாகத் தெரிவித்தனர். அதற்கமைய 2018.04.27 ஆம் திகதி இவர்களை சஹிரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு இணைப்பு செய்வதற்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை மேற் கொண்டது. கல்வி அமைச்சு இந்தப் பிரச்சனை குறித்து கவனத்தைச் செலுத்தாது, உரிய ஆசிரியையின் தற்காலிக இடமாற்றத்தை தொடர்ச்சியாக இற்றைப்படுத்த நடவடிக்கை மேற் கொண்டதாக திருமதி பாத்திமா பஷ்மிதா தெரிவித்தார். இதனால் அவர்கள் இந்தப் பிரச்சனையை தமது மனித உரிமைகள் மீறலாகக் கருதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய நேர்ந்தது.

முதலில் இவர்கள் திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பாக முறைப்பாடுகளை செய்த போதிலும், பின்னர் கொழும்பில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்துக்கு முன்வைத்தனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தப் பிரச்சனை தொடர்பில் சகல தரப்பினருடனும் ஏழு தடவைகள் மேற் கொண்ட விசாரணைகளின் இறுதியில் உரிய ஆசிரியைகளுக்கு பாடசாலை அதிகாரிகளால் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், பாடசாலை அதிகாரிகள் அதனை உடனடியாக சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2019.02.19 ஆம் திகதி பரிந்துரை வழங்கியது.

தமது கலாச்சாரத்தின் ஒர் அங்கமான அபாயா ஆடையை பாடசாலைக்கு அணிந்து வருவதற்கு பாடசாலை அதிகாரிகள் தன்னிச்சையாக இடமளிக்காமை, அது தொடர்பான கல்வி அதிகாரிகளின் மௌனம், மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைககுழுவின் பரிந்துரைகளை பாடசாலை அதிகாரிகள் கடைபிடிக்காமை போன்ற விடயங்களின் மீது திருமதி பாத்திமா பஷ்மிதா தனது சட்டத்தரணிகளின் மூலமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவை முன்வைத்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த ரீட் மனுவை விசாரணை செய்யும் போது முறைப்பாட்டாளரும், கல்வி அமைச்சும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு விருப்பு தெரிவித்தது. அந்த இணக்கத்துக்கு அமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அவ்வாறே செயற்படுத்துவதற்கும், உரிய ஆசிரியைகளின் நிலுவை சம்பள அதிகரிப்புடன், மீண்டும் அதே கல்லூரியில் கடமையாற்றவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக திருமதி பாத்திமா பஷ்மிதாவின் கணவரான திரு அப்துல் ரஹீம் ரமீஷ் தெரிவித்தார்.

இருப்பினும், மீண்டும் ஒரு தடவை பாத்திமா பஷ்மிதா ஆசிரியை கடந்த 2022.02.02 ஆம் திகதி சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு இணைக்கப்பட்டமை, அவர் அபாயா அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்தமை, அதனை எதிர்த்து பாடசாலையில் குழப்ப நிலை உருவானமை ஆகிய காரணங்களால் அவர் மீண்டும் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்பு செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. எனினும், திரு பாத்திமா பஷ்மிதா மனித உரிமைகள் மீறிப்பட்டதாக நீதிமன்றமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தீர்மானித்திருந்த போதிலும் அதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகளின் நடத்தைக்கு அவர் தொடர்ந்தும் சவால் விடுத்து வருகிறார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமை ஊடக சுதந்திர மீறலாகும்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமை ஊடக சுதந்திர மீறலாகும்.

மாதாந்த கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமை ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் தொழில் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமையை மீறும் செயலாகும் என கண்டி மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருவதுடன், அதன் இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார மற்றும் ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் செயற்படுகின்றனர். கண்டி மாவட்ட பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வர்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும். பொது நிதியை அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தல், அதன் முன்னேற்றம், மோசடி, ஊழல் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் இந்த சந்திப்பு, ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கான முக்கிய ஆதாரமாக அமைவதால் அதனை மேற்பார்வை செய்வது வெகுசன ஊடகங்களின் செயற்பணியாக கருதப்படுகின்றது. ஆயினும் தற்போது இந்த சந்திப்பு தற்போது பத்திரிகையாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவப்பட்ட போது அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறித்த கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதனால் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.

இந்தப் பின்னணியில் குழுக் கூட்டத்தின் இறுதியில் அரசியல்வாதிகள் தமக்கு தேவையான சில கருத்துக்களை ஊடகவியலாளர்களுக்கு வழ்குவதுடன் அவை ஒருபோதும் மக்களுக்கு தேவையான விடயங்கள் அல்ல.

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்களின் ஊடக பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் கண்டி மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடகவியலாளர்கள், வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுமக்களுக்கு செய்திகளை கொண்டு செல்பவர்கள் அல்ல என்பதோடு, மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சேவை செய்பவர்கள் ஆவர். எனவே உள்நோக்கத்துடன் பொதுமக்களுக்கு தகவல்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளமை இதனுடாக தெளிவாகின்றது.

மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்களே தேர்ந்தெடுக்கின்றனர். அரச ஊழியர்களுக்கான செலவு பொது நிதியின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. குறிப்பாக ஒப்பந்தங்களை வழங்கும் நடவடிக்கைகளின் போது இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவையனைத்தையும் தடை செய்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையே இதனூடாக பறிக்கப்பட்டுள்ளது.

நிஹால் ஜயவர்தன, கண்டி

 

கல்லராவ முகத்துவாரத்தை மூடுதல் அல்லது பெண் கடலை மலடாக்குதல்.

கல்லராவ முகத்துவாரத்தை மூடுதல் அல்லது பெண் கடலை மலடாக்குதல்.

கல்லராவ திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மீன் வளங்கள் நிறைந்த மீனவக் கிராமமாகும். கல்லராவவின் ஊடாகவே யாங் ஆறு கடலுடன் சேருகின்றது. யாங் ஆற்றின் காரணத்தால் கல்லராவ கடலில் வளமான மீன் விளைச்சல் கிடைக்கின்றதென்பது மீனவர்களின் நம்பிக்கையாகும். கல்லராவ கடல் மீனவர்களிடையே பெண் கடல் எனும் பெயரால் பிரசித்தி பெற்றது. ஆழ்கடல் மீன்கள் தமது இனப்பெருக்கத்துக்காக கல்லராவ முகத்துவாரத்துக்கு வருவதே அதற்கான காரணமாகும். கல்லராவ சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஆழ்கடல் கொந்தளிக்கும் காலங்களில் யாங் ஆறு கடலுடன் கலக்கும் கல்லராவ களப்புவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இதன் காரணமாக கல்லராவ மீனவர்கள் யாரிடமும் கையெந்தாத மீனவர்கள் எனப் பெயர் பெற்றனர்.

எனினும் 2011 ஆம் ஆண்டு இந்தக் களப்பின் முகத்துவாரத்துக்கு அருகில் காணியை விலைக்கு வாங்கிய குறித்த ஒரு நிறுவனம் இந்த இயற்கையாக அமைந்த முகத்துவாரத்தை மணல் மூட்டைகளை இட்டு அடைத்து யாங் ஆறு பயணிக்கும் வழியை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதற்காக கல்லராவ கிராமவாசிகளை நாளாந்த கூலி வேலையில் அமர்த்தியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சென்டினல் ரியலட் எனும் இந்தக் கம்பனி திரு மிலிந்த மொரகொடவுக்குச் சொந்தமான ஹோட்டல் கம்பனியாவதாக கல்லராவ கிராமவாசிகள் கூறுகின்றனர்.

தற்போது கல்லராவ முகத்துவாரப் பகுதி முதலில் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் கடலுடன் இணைகிறது. அத்துடன் முன்னையவாறு முகத்துவாரம் கடலுக்கு நேராக அமையாததால் முறையானவாறு ஆற்றின் நீரோட்டம் ஓடிச் செல்வதில்லை. இக் காரணத்தால் கடலிலிருந்து முட்டை இடுவதற்கு களப்பை நோக்கி வரும் மீன்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையால் களப்பில் மீன்கள் பெருகும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடல் கொந்தளிப்புக் காலங்களில் களப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளதுடன், தற்போது கிராமத்தில் வாழ்ந்து வந்த பல சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் மீன் வலை முதலாளிகளின் தொழிலாளர்களாக ஆகியுள்ளனர். தமக்குச் சொந்தமாக இருந்த கல்லராவ களப்புவின் முகத்துவாரத்தை மீண்டும் முன்னரைப் போலவே அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் அதில் தலையீடுவதில் நாட்டம் காட்டாததாக கல்லராவ புனித அந்தோனி சிறு மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி சீ. மானெல் பொடிநேரிஸ் கூறினார்.

இது தொடர்பாக உரிய சங்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட கோரிக்கைகளின் காரணமாக இதற்கு முன் கல்லராவ களப்பின் முகத்துவாரப் பகுதி அந்த இடத்தில் கடலுடன் இணைந்தமைக்கான சத்தியப் பிரமாணத்தை முன்வைக்குமாறும், இதற்கு முன்னர் இந்த இடத்தில் யாங் ஆற்றின் முகத்துவாரப் பகுதி பாய்ந்து சென்றதற்கான ஆதாரங்கள் இருப்பின் அதனை முன்வைக்குமாறும் கல்லராவ மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் திருகோணமலை அலுவலகம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய கடந்த மார்ச்சு 14 ஆம் திகதி கல்லராவ புனித அந்தோனி சிறு மீன்பிடித் தொழில் மீனவச் சங்கம் உரிய நிறுவனங்களுக்கு சத்தியப் பிரமாணங்களையும், ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளது. கல்லராவ சிறு மீன்பிடித் தொழில் மீனவர்கள் இதற்கு 10 வருடங்களுக்கு முன் தமது கிராமத்துக்கு அருகில் கடலுடன் கலந்த யாங் ஆற்றை முன்னரைப் போலவே கல்லராவ களப்பின் முகத்துவாரப் பகுதி இயற்கையாகப் பாய்ந்து சென்றவாறு அமைத்துத் தருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விவசாயக் காணிகளை மீளப் பெற்றுத்தாருங்கள்!

பறிமுதல் செய்யப்பட்ட விவசாயக் காணிகளை மீளப் பெற்றுத்தாருங்கள்!

வனஇலாகா திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி பறிமுதல் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சத்தியநாதன் யுதர்சனன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு, சித்திhண்டி 02, பிரதான வீதி, இல 51ஃயு என்ற முகவரியைச் சேர்ந்த இவர், கோறளைப்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேத்தைச் சேர்ந்த பத்து விவசாயிகளின் காணிகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டிருக்கின்றார்.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வனஇலாகா அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு வனநில திணைக்கள அதிகாரிகள், வனத்துறை, கோட்ட வன அலுவலர் ஆகியோருக்கு எதிராக இந்த மனித உரிமை மீறல் முறைப்பாடு உள்ளது. அந்த முறைப்பாட்டில் அவர் அளித்துள்ள விபரம் பின்வருமாறு:

கோறளைப்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேசத்தில் கி;ட்டத்தட்ட 30 வருடகாலமாக குடியிருந்த மக்களிடையே ஆறரை ஏக்கர் பரப்பினை உடைய 10 விவசாயிகளின் தோட்டக்காணிகளே இவ்வாறு வன இலாகா அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகள் அழிக்கப்பட்டு அவர்களின் காணிக்குள் தேக்குமர செய்கை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இக்காணி உடமையாளர்கள் சோளம், கச்சான், மரவள்ளி பயிர்ச்செய்கைகளை செய்ய முடியாதவாற பெரிதும் பாதி;கக்பட்டுள்ளனர் என்று முறைப்பாட்டில் விபரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வன இலாகா, பிரதேச செயலாளர், மாவட்ட அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே முறையிடப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறையிடப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்த செயற்பாடு ஒட்டுமொத்தமாக அரசியற்கொள்கையுடன் சம்பந்தப்பட்டது என்று குறிப்பி;டும் முறைப்பாட்டாளர் காணியினை மீட்டுத்தர வேண்டும் என்றும் காணிகளுக்காக உறுதியினை பெற்றுத்தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முறைப்பாட்டாளர் இந்த முறைப்பாட்டை கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி, 2022 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

– மட்டக்களப்பு சத்தியநாதன் யுதர்சனன்

முகநூலில் பிரபாகரனின் புகைப்படத்தினை பதிவு செய்ததால் கைது!

முகநூலில் பிரபாகரனின் புகைப்படத்தினை பதிவு செய்ததால் கைது!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்த குற்றச்சாட்டில் பொலிஸார் வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாச என்பவரை கைது செய்துள்ளனர் என்ற முறைப்பாடு ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகரை பொலிசாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு ஊடகவியலாளர் தேவஅதிரன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கைது சம்பவம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெற்றுள்ளது. இனம் மற்றும் அரசியற்கொள்கை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிமனித கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் பாதுகாப்பு தரப்பினரால் பாரியளவில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மாவீரர் தினம் அனுட்டிக்கப்படும் நவம்பர் மாதம் இவ்வாறான கைதுகள் பரவலாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இணையத்தங்களில் சமூக ஊடகங்களில் இவ்வாறான தனிமனித உரிமைகளை மீறும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் சமூக ஊடகங்களைக் குறிவைத்து செயற்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்றே கூற வேண்டியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக சமூக ஊடக செயற்பாடுகள் பாதுகாப்பு தரப்பினரால் கண்காணிக்கப்படுவது எந்தளவுக்கு இந்நாட்டில் சுதந்திரம் உள்ளது என்பதனை கேள்விக்குட்படுத்துகின்றது.

அரசினால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகள் என்று காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் இவ்வாறு அச்சுறுத்தலாக்கப்படும் செயற்பாடுகளும், அவர்களை கைது செய்யும் செயற்பாடுகளும் ஒட்டுமொத்தமாக மனித உரிமை மீறல்களாகும். அதுவும் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான அட்டூழியங்கள் நிறுத்தப்படுவது அவசியமாகும்.

-ஊடகவியலாளர் தேவஅதிரன் முறைப்பாடு

உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுக்களை தாய்மொழியில் தாருங்கள்!

உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுக்களை தாய்மொழியில் தாருங்கள்!

தாய் மொழியில் தொடர்பாடல் நடைபெறாததாலும் பற்றுச்சீட்டுக்கள் தமிழ் மொழியில் வழங்கப்படாமையினாலும் பெரும் சிரமத்திற்குள்ளாவதாகவும், இதனால் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுவதாகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி டெனிஸ் பிரன்சன் தனது சகோதரியின் சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

கடந்த மார்ச் 14ம் திகதி, 2022 அன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸ் பிரிவு மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ள இவர், மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, சாஸ்திரியார் வீதி என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்டவர்.

கடந்த பெப்ரவரி மாதம் 10ம் திகதி தனது சகோதரி எதிர்கொண்ட சம்பவம் தொடர்பிலும், அரச வங்கியான மக்கள் வங்கியில் ஏற்பட்ட சிரமம் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள ரவி டெனிஸ், தனது முறைப்பாட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பின் காரணமாக பெரும் பிரச்சினைகளை வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள விடயம் பின்வருமாறு:
“மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் போது அதிவேகமாக வந்ததாகவும், தொலைபேசியில் கதைத்துக் கொண்டே வாகனம் ஒட்டியதாகவும் கூறி குற்றப்பதிவுச் சீட்டு ஒன்றை கையளிக்கப்பட்டது. ஆனால் அது சிங்கள மொழியில் மட்டும் எழுதப்பட்டிருந்ததாலும், சிங்கள மொழியில் குற்றம் பற்றி விளக்கப்படுத்தியதாலும் சரியான விளக்கம் இன்றி, எதற்கான தண்டப்பணம், எவ்வளவு தண்டப்பணம் என அறியாமலேயே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இங்கு மொழி சுதந்திரம் முற்றாகப் பாதிக்கப்பட்டதை உணரும்படி செய்தது.

அதேபோல மக்கள் வங்கி கிளையில் அடகு வைக்கும் பிரிவில் பணி புரியும் உத்தியோகத்தர் சிங்கள மொழியில் பேசக்கூடிய நபராக இருந்தமையினால் அந்த தொடர்பாடலிலும் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எமது சேவைகளை எமக்குரித்தான சொந்த மொழியில் பெற முடியாத நிலை காணப்பட்டது.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக வீதியிலும், வங்கியிலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், கண்கண்ட சாட்சிகளாக நண்பர்களையும், ஆவண சாட்சியாக தண்டனை குற்றப்பதிவுச் சீட்டு என்பனவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொழி உரிமை தொடர்பான இந்த பிரச்சினையை அனைவரும் சாதாரண விடயமாகவே எண்ணி செயற்படுகின்றனர். இதனால் பெரும் சிரமங்களின் மத்தியில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அர சேவைகளைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவைகளைப் பெறும் போது அது தொடர்பான எந்தவொரு படிவமோ, பற்றுச்சீட்டோ தமது தாய் மொழியில் பெறக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் போது அதனூடாக மக்கள் எந்தவிதமான சிரமங்களும் இன்றி சிறப்பான சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அரசு தமிழ் மொழி அமுலாக்கத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாடு முழுவதும் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதுடன், உரிய சேவைகளைப் பெற முடியாதுள்ளனர். இதனை உணர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், ஆகக்குறைந்த பட்சம் மக்களுக்கு வழங்கப்படும் படிவங்களையும், பற்றுச்சீட்டுக்களையும், ஆவணங்களையும் தாய்மொழிகளில் வழங்கவும் நடவடிக்கை எடுகு;கப்பட வேண்டும் என்பதே இந்த முறைப்பாட்டினூடாக அவர் முன்வைக்கும் பிரதான கோரிக்கையாகும்.
இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்று தனது முறைப்பாட்டினூடாக அவர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

– மட்டக்களப்பு ரவி டெனிஸ்

இனம் என்ற பாகுபாட்டின் காரணமாக அத்துமீறப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

இனம் என்ற பாகுபாட்டின் காரணமாக அத்துமீறப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

மாடுகளுக்கான மேய்ச்சல் தரையை மீண்டும் பெற்றுத்தருமாறு மட்டக்களப்பை சேர்ந்த டிலக்ஷலா துரைரத்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவரின் சார்பில் இவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். ஈரக்குளம், சித்தாண்டி என்ற முகவரியைச்சேர்ந்த இவர், மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணை பகுதியில் நிகழுகின்ற மனித உரிமை மீறல் பற்றி மனித

உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் பின்வருமாறு விபரித்துள்ளார்:
“மேற்குறிப்பிட்ட குறித்த பகுதியானது, பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாக உள்ளது. இங்கு தொடர்ச்சியாக அத்துமீறி பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அப்பகுதியில் எந்தவிதமான அத்துமீறல்களும் முன்னெடுக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது. எனினும் மீண்டும் அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று இவர் முறையிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இந்த அத்துமீறல் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கண்கண்ட சாட்சியங்களும் உள்ளதாகவும், ஈரக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அந்த சாட்சியங்களுள் ஒருவர் என்று தனது முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனம் என்ற காரணத்தினாலும், நிர்வாகக் குறைபாடுகள் காரணமாகவும் இந்த மனித உரிமை மீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, 2022ம் ஆண்டு அவர் முன்வைத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் அவ்விடத்தில் எந்தவிதமான அத்துமீறல்களும் நிகழ்த்தப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது கண்டிக்கத்தக்கதாகும். இது நீதிமன்ற ஆணையை மீறும் செயலாக உள்ளதுடன், பாதிக்கப்படுபவர்கள் மீது மேலும் அடக்குமுறையை திணிக்கும் செயலாக உள்ளது.

எனவே இவ்விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விரைவாக தலையிட்டு நியயாத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு இனம் ஒரு காரணம் என்று முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருப்பதனூடாக ஒரு இனத்திற்கு எதிரான அடக்குமுறையாகவும், அத்தமீறலாகவே இந்த சம்பவத்தைப் பார்க்க Nவுண்டியுள்ளது. இனம் என்ற காரணத்திற்காக நாட்டில் நிகழும் அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் நிச்சயம் மனித உரிமை மீறலாகும். இந்தவகையில் இந்த மேய்ச்சல் நிலம் தொடர்பான சிக்கலில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று முறைப்பாட்டாளர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

– மட்டக்களப்பு டிலக்ஷலா

நினைவேந்தல்களை காரணம் காட்டி நடத்தப்படும் கைதுகளை நிறுத்துங்கள்!

நினைவேந்தல்களை காரணம் காட்டி நடத்தப்படும் கைதுகளை நிறுத்துங்கள்!

மரண நாளை நினைவு கூற அனுமதி அளிக்குமாறு ஊடகவியலாளர் தேவஅதிரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் தேவஅதிரன் தனது சக ஊடகவியலாளர் விமலசேன லவ்குமாருக்காக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு, கல்குடா பொலிஸ் நிலையம் ஆகிய அரச நிறுவனங்களுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நடைபெற்ற நினைவேந்தல் செயற்பாடுகளை காரணம் காட்டி தனது சக ஊடகவியலாளரின் மனித உரிமைகள் பாதுகாப்பு தரப்பினரால் மீறப்பட்டுள்ளதாக தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள தேவஅதிரன், இனம், அரசியற்கொள்கை, மொழி ஆகிய பாகுபாடுகள் காரணமாக இந்த மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனித உரிமை மீறல் வாழைச்சேனை- நாகவத்தை பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவவம் குறித்து முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“கடந்த 2021 மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து நிபந்தனைகளுடனான பிணையில் சக ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்தில் இவர் கையொப்பம் இட்டு வருகின்றார்”.
இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

இம்மனித உரிமை மீறல் சம்பவத்தை முறையிடுவதனூடாக நீதியையும், இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டையும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கும், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போரில் இறந்தவர்களை நினைவுகூருதல் தொடர்பான சம்பவங்களில் பலர் கைது செய்யப்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சம்பவங்களை காரணம் காட்டி வடக்கில் பாதுகாப்பு தரப்பு இந்த மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகின்றது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதனை தடுக்கும் இவ்வாறான அடக்குமுறைகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.

போரில் இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கருதப்படும் இந்த சிந்தனை தொடர்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு அனைவரின் கோரிக்கையாகும். தெட்டத்தெளிவாக இந்த செயற்பாடு இனம், மொழி சார்ந்த ஒரு அடக்குமுறையாகும். போரில் இறந்த படையினரை அரச மரியாதையுடன் விசேட வைபவங்களுடன் நினைவுகூரும் நாட்டில், தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக போரில் இறந்தவர்களை நினைவுகூர மறுக்கப்படுதல் மிகவும் விசனத்திற்குரியதாகும்.

– ஊடகவியலாளர் தேவஅதிரன் கோரிக்கை

வாகன தரிப்பிட அனுமதிச்சீட்டு வழங்குபவரால் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளது!

வாகன தரிப்பிட அனுமதிச்சீட்டு வழங்குபவரால் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளது!

வாகன தரிப்பிட அனுமதிச் சீட்டு தொடர்பான மோசடி குறித்து செய்தி சேகரிக்க சென்ற வேளை தனக்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெற்றதாக திருகோணமலை ஊடகவியலாளர் அலியார் முகமது ஹீத் (46) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக கடந்த 2021-05-25 அன்று இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாகன தரிப்பிட அனுமதிச் சீட்டு வழங்குனருக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் இவ்வாறு முறையிட்டுள்ளார்:
“திருகோணமலை பொது வைத்தியசாலை முன்பாக இருக்கும் வாகன தரிப்பிடத்திற்கு அனுமதிச் சீட்டு வழங்கும் நடவடிக்கையை சட்டமீறலாக செய்தி சேகரிக்க சென்ற போது சீட்டு வழங்குபவரால் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

தற்போது பொது வைத்தியசாலைக்கு செல்பவர்களையும் இவர் தகாத வார்த்தைகளால் பேசுகின்றார். கொரோனா பயணத்தடை காலப்பகுதியில் திருகோணமலை பொதுவைத்தியசாலை வாகன தரிப்பிட அனுமதிச்சீட்டு வழங்குபவர் குறித்த காலப்பகுதியில் தனக்கு வருமானம் இன்மையால் சீட்டு வழங்குதல் மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு வருமானம் செலுத்த முடியும் என்று தெரியப்படுத்தியுள்ளார். பொதுகட்டிட அல்லது பிரதேச வாகனதரிப்பிட கட்டணம் அறிவிக்கூடாது என்ற அரசாங்கத்தின் சட்டமும் மீறப்பட்டுள்ளது”.

இந்த சம்பவத்தினால் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

– ஊடகவியலாளர் அலியார் முகமது ஹீத் முறைப்பாடு

முகநூலில் மாவீரர் தொடர்பான பதிவுக்காக இரு ஊடகவியலாளர்கள் பொலிசாரால் கைது!

முகநூலில் மாவீரர் தொடர்பான பதிவுக்காக இரு ஊடகவியலாளர்கள் பொலிசாரால் கைது!

முகநூலில் மாவீரர் நாள் தொடர்பாக பதிவுகளை இட்டதற்காக சக ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையினால் அவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் தேவ அதிரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணை இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்றும், இவர் விளக்கமறியலில் உள்ளார் என்;றும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. மற்றைய சக ஊடகவியலாளர் கிண்ணையடி வாழைச்சேனையை சேர்ந்தவர் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் விடுலைப்புலிகள், புலிகளின் தலைவர் போன்றோரது தகவல்களைப் பதிவிட்டமை, விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் செய்ய சமூக ஊடகங்களில் பதிவிட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிரன் தன் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இனம் மற்றும் மொழி வேறுபாடு காரணமாக இந்த முறைப்பாடு இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக இந்த முறைபாட்டை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

– ஊடகவியலாளர் தேவ அதிரன்

அரசியற்கட்சி உறுப்பினரால் மனித உரிமை மீறல்!

அரசியற்கட்சி உறுப்பினரால் மனித உரிமை மீறல்!

வந்தாறுமூலை பொதுச்சந்தையில் அரசியற்கட்சியை சார்ந்த ஒருவரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு தனது சக ஊடகவியலாளரும், சகோதரனுமாகிய எல்.தேவப்பிரதீபன் சார்பில் அவரது சகோதரரால் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தேவ அதிரன் இந்த முறைப்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார் என்பவரால் நிகழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பற்றி செய்தி சேகரிக்க சென்ற வேளை ஐ.பி.சி தமிழ் செய்தியாளரான எனது சகோதரர் அங்கு வந்த அரசியற்கட்சியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார் என்பரால் தாக்கப்பட்டார். இதனால் 3 தினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியற்கொள்கை முரண்பாட்டினால் ஆர்ப்பாட்டத்தினை குழப்பும் நோக்கத்துடன் இந்த செயற்பாடு இடம்பெற்றதாக அதிரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்தம அநீதிக்காக நிதி இழப்பீட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

-ஊடகவியலாளர் தேவ அதிரன்

அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீண்டும் ஊடகவியலாளர்களை அனுமதியுங்கள்!

அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீண்டும் ஊடகவியலாளர்களை அனுமதியுங்கள்!

மாவட்;ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு (னுனுடுஊ) கூட்டங்களுக்கு செய்தி சேகரிப்பதற்காக மீண்டும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் இலட்சுமணன் தேவஅதிரன் (42) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு செய்தி சேகரிப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதி தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரான இவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு, கல்லடி, பழைய கல்முனை வீதி 6ஃ8 என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

இந்த முறைப்பாட்டை அவர், பிரதேச செயலகம், அரசாங்கம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு எதிராக முன்வைத்துள்ளார். அரசாங்க சுற்றறிக்கை வெளியான 2021ம் ஆண்டை அவர் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆண்டாக குறிப்பிட்டுள்ளார். நிர்வாகக் குறைபாடுகளே இதற்கு காரணம் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதன்மூலம் மக்களுடைய கோரிக்கைகள் வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தனது முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் தேவ அதிரன் வேண்டுகோள்

சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்க பாதுகாப்பு தரப்பு முயற்சி!

சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்க பாதுகாப்பு தரப்பு முயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து துன்புறுத்துகின்றனர் என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் (52) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
மட்டக்களப்பு, திராய்மடு, 4ம் குறுக்கு, இல 141ஃ03 என்ற முகவரியைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி, பொலிஸ் திணைக்கள மட்டக்களப்பு பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
“கடந்த ஓராண்டு காலமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மூன்று தடவைகளும், குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு தடவைகளும், பொலிசாரினால் (மட்டக்களப்பு மற்றும் திருக்கோயில்) இரு தடவைகளும் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். இந்த நாட்டு சட்டத்திற்கு புறம்பாக நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. ஆனாலும் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புப்படுத்தி என் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. எனது வீடு மற்றும் அவர்களது அலுவலகங்களில் மனித உரிமை மீறல் நடைபெற்றது. இது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும், அரசியற் கொள்கை மற்றும் இனம் என்ற காரணத்தினால் இந்த துன்புறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனித உரிமை மீறலுக்கு கண்கண்ட சாட்சியங்களும், ஆவண சாட்சியங்களும் உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் எனக்கு நியாயமான நீதி வேண்டும். பொய்யான இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் என்று அவர் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் நலன்களுக்காக இயங்கி வரும் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர் என்ற வகையில் தான் எதிர்கொள்ளும் இவ்வாறான துன்புறுத்தல் அடக்குமுறைகளினூடாக எனது செயற்பாடுகளை முடக்கிவிட பாதுகாப்பு தரப்பு முயற்சிப்பதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு துறையின் இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் காரணமாக தான் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், தனது செயற்பாடுகளை இவ்வாறான செயற்பாடுகள் ஸ்தம்பிக்க செய்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

– சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் தெரிவிப்பு

பெண்கள் மீதான தவறான நடத்தைகள்; நிறுத்தப்பட வேண்டும்!

பெண்கள் மீதான தவறான நடத்தைகள்; நிறுத்தப்பட வேண்டும்!

நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பெண்கள் மீதான தவறான நடத்தை தொடர்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த சி. உபதாரணி (22) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிரான், பாடசாலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அவர் தான் பணிபுரியும் புலனாய்வு நிறுவனத்தின் புலனாய்வு அதிகாரிக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

சுதந்திரமாக வேலை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும், வழிமறித்து அச்சுறுத்தல் நடப்பதாகவும், தனது பணிக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இந்த மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் இந்த முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளும், துன்புறுத்தல்களும் களையப்பட வேண்டும். பெண்களை மதிக்கும் சமூகம் உருவாக வேண்டும். எந்த பிரச்சினையாயினும் வன்முறையின்றி அப்பிரச்சினை தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

– உபதாரணி

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

வவுணதீவு மக்கள் வங்கி முகாமையாளர் பகிடிவதைக்குட்படுத்துவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த இராஜேஸ்வரன் ஜசோ (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

வவுணதீவு மக்கள் வங்கி முகாமையாளருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வங்கிக்கு செல்லும் போது பகிடிவதையான பேச்சுகளுக்குட்படுத்துதல் உட்பட அவதூறான வார்த்தைப் பிரயோகங்களும் அவரால் மேற்கொள்ளப்படுவதாக ஜசோ குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணத்திற்காக இவர் இவ்வாறு நடந்துகொள்வதாவும், இதனால் சுதந்திரமாக ஒரு வேலையை வங்கியில் மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈச்சந்தீவு, நாவற்காடு என்ற முகவரியைச் சேர்ந்த இவர், சாட்சிகள் இருந்தும் அச்சம் காரணமாக ஒருவரும் விடயங்களை பகிரங்கப்படுத்த முன்வருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மாற வேண்டும் என்றும், சுதந்திரமாக ஒரு வேலையை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு சூழலை இலகுப்படுத்தி தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு ஜசோ முறைப்பாடு.

பொதுச்சேவையின் போது ஆண்களால் தொல்லை. பாதுகாப்பு தாருங்கள்!

பொதுச்சேவையின் போது ஆண்களால் தொல்லை. பாதுகாப்பு தாருங்கள்!

பொதுசேவை செய்யும் பெண் என்பதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றேன் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த அருளானந்தம் கங்கா (29) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

கரவெட்டி நாவற்காடு என்ற முகவரியைச் சேர்ந்த கங்கா, போக்குவரத்து செய்யும இடங்கள் எல்லாம் ஆண்களால் தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது:
நான் வேலை செய்கின்ற சமூகத்தில் எனக்கு பல பிரச்சி;னைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக தொலைபேசி அழைப்புகள் மூலமாக பல தகாத வார்த்தைகளை பேசுதல் மற்றும் சமூகத்திற்குள் செல்லும் போது அங்குள்ள சில ஆண்களால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி சமூகத்தில் பெண் தனியாக சென்று வர பாதுகாப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தனக்கு உரிய முறையிலான பாதுகாப்பை வழங்குமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கேட்டுள்ளார். மனித உரிமை நிகழ்ந்த திகதியாக 2022.02.10 என்ற திகதியை அவர் குறிப்பிட்டுள்ளார்.

– மட்டக்களப்பு கங்கா

வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள்!

வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள்!

வீட்டுத்திட்டத்தின் காரணமாக தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக லக்ஸ்மன் பவானந்தினி (35) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மண்டபத்தடி, கண்ணன்குடாவை சேர்ந்த இவர், வீடமைப்பு அதிகாரசபைக்கு எதிராகவும், மண்டபத்தடி கிராம உத்தியோகத்தர் திவ்வியாவுக்கு எதிராகவும் இந்;த முறைப்பாட்டை செய்துள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நான் திருமணம் புரிந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையில் வீடு இல்லாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளேன். வீட்டுத்திட்டம் என்று கூறி 2018ல் (செமட்ட சரண) தரப்பட்ட உதவியில் அதற்கான பணம் செலுத்தப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் வீடு எமக்கு தரப்படவில்லை. ஆனால் வேறு நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். கடன் வாங்கி அரைவாசி கட்டப்பட்ட நிலையில் இதற்கான ஆவணம் கூட இல்லாத நிலை உள்ளது. என்னோடு 17 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்று அவர் தனது பிரச்சினையை தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் உள்ள வீட்டுத்திட்டத்திற்கான நிதியைப் பெற்றுத்தர வேண்டும். வீதிகளை புனரமைப்பு செய்ய வேண்டும். வீடுகளுக்கான ஆவணம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

– மட்டக்களப்பு பவானந்தினி வேண்டுகோள்

தங்கையின் திருமண நாளில் பொலிசாரால் அலைக்கழிக்கப்பட்டோம்!

தங்கையின் திருமண நாளில் பொலிசாரால் அலைக்கழிக்கப்பட்டோம்!

தங்கையின் திருமண நாளில் வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு சங்கடத்தை எதிர்நோக்கினோம் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த ல.பவானந்தினி (35) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மண்டபத்தடி, கண்ணன்குடாவை சேர்ந்த இவர் தனது முறைப்பாட்டை வவுணதீவு பொலிசாருக்கு எதிராக முன்வைத்துள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளதாவது:

“2020.11.26 அன்று எனது தங்கையின் திருமணம் நடைபெற்றது. அதற்காக கூடாரம் அமைக்கப்பட்டது. ஆனால் மாவீரர் நாளுக்காக கூடாரம் அமைக்கின்றோம் என்று கருதி எங்களை பொலிசார் அழைத்து விசாரித்தனர். மறுநாள் நாங்கள் கிராம உத்தியோகத்தர், சுகாதார உத்தியோகத்தர் போன்றவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்ட பின்னர் பொலிசார் எங்களை விடுவித்தனர்”. என்று அவர் விபரித்துள்ளார்.

இதுபோன்ற சங்கடமான நிலை ஏற்படாமல் இருந்தால் போதுமானது என்றும் இதற்கான வழிவகைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு பவானந்தினி

பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் சமுர்த்தி முகாமையாளர்!

பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் சமுர்த்தி முகாமையாளர்!

வவுணதீவு சமுர்த்தி முகாமையாளர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் என்று மட்டக்களப்பு வவுணதீவை சேர்ந்த அ. இதயவதனி (31) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

வவுணதீவு, 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் இவர், வவுணதீவு சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
சமுர்த்தி முகாமையாளர் தனக்கு நெருங்கிய உறவினர்களுக்கு சமுர்த்தி சம்பந்தமாக முன்னுரிமை அளிப்பது கவலைக்குரிய விடயம். இதனால் எம்மைப்போன்ற பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுக்களுக்கு வரும் சமுர்த்தி பணத்தை 8 மாதம், 4 மாதம் என்று பிரித்துக் கொடுக்கின்றனர். அதுவும் சகல தொகையும் வழங்கப்படுவதில்லை. அரைவாசியே வழங்குகின்றனர். கொடுப்பனவை எடுத்துக் கொண்டு செல்லும் மக்கள் எவரும் இது பற்றி அச்சம் காரணமாக எதுவும் கேட்பதும் இல்லை. இதற்கு தீர்வை தரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று இதயவதனி முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

பொதுமக்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். அவர்களுக்கான நிவாரண பணம் ஒவ்வொரு மாதமும் சரியான முறையில் கிடைக்க வேண்டும். என்றும் அவர் முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு இதயவதனி முறைப்பாடு

இன பாகுபாடு காரணமாக முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை!

இன பாகுபாடு காரணமாக முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை!

இனரீதியிலான பாகுபாடு காரணமாக மட்டக்களப்பு மாவட்;டத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஏ.எச்.அப்துல் ஹ{சைன் (54) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஏறாவூர், காயர் வீதியைச் சேர்ந்த இவர், மாவட்ட செயலகத்திற்கு எதிராகவும், மாவட்ட செயலாளருக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். இந்த மனித உரிமை மீறல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அவர் அந்த முறைப்பாட்டில் கூறியுள்ளார். இதற்கான ஆவண சாட்சியங்களாக செய்திகள், படங்கள் மற்றும் பிரதேச செயலக ஊடகப்பிரிவின் ஆவணங்கள் என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாரபட்சமான செயற்பாடு தொடர்பில் 2021ம் ஆண்டு ஜுன் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டதாகவும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும், ஆனால் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனரீதியிலான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் இந்த முறைப்பாட்டினூடாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

– ஊடகவியலாளர் அப்துல் ஹ{சைன் குற்றச்சாட்டு

இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

இராணுவப்புலனாய்வார்கள் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த க. சதாசிவம் (80) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

புலனாய்வாளர்களின் இந்த செயலால் தன்னால் சுதந்திரமாக இயங்க இயலாமல் உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
மட்டக்களப்பு, தாமரைக்கேணி வீதி இல 9ஐச் சேர்ந்த இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த துன்புறுத்தலை தான் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:

“மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் இராணுவப்புலனாய்வாளர்கள் என்னைப் பின்தொடர்;ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள். இதனால் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதுடன், எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். சுதந்திரமாக நடமாடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது”. என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இனியும் இந்த துன்புறுத்தல் தொடரக் கூடாது என்றும், இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு சதாசிவம்

மக்களை மதிக்காத பொலிஸ் நிலையங்களும், அதிகாரிகளும்!

மக்களை மதிக்காத பொலிஸ் நிலையங்களும், அதிகாரிகளும்!

இன மொழி மற்றும் பால் வேறுபாட்டின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் மக்கள் பாரபட்சத்திற்குள்ளாவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த பொ.மேகலநாதன் (37) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு சென்றால் மக்களை சரியான முறையில் நடத்துவதில்லை. தமிழ் மொழியில் பேசுவதில்லை. மக்களை தகாதமுறையில் நடத்துகின்றனர். தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். மக்களை காக்க வைக்கின்றனர். ஆண் பெண் வேறுபாட்டின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, பாலையடித்தோணி, ஜீவபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாக இந்த மனித உரிமைகள் மீறல் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக உரிமை கிடைக்க வேண்டும். மக்களுக்கான நீதி சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்று அவர் தனது முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேகலநாதன் குற்றச்சாட்டு

தொடரும் அச்சுறுத்தல்களாலும், மிரட்டல்களாலும் ஊடகப்பணிகளை சுயாதீனமாக முன்னெடுக்க முடியவில்லை.

தொடரும் அச்சுறுத்தல்களாலும், மிரட்டல்களாலும் ஊடகப்பணிகளை
சுயாதீனமாக முன்னெடுக்க முடியவில்லை.

பக்கச்சார்பற்ற செய்திகளை வெளியிடுவதால் தொடர்;ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாவதாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் வ. சக்திவேல் (40) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

வெவ்வேறு முறைப்பாடுகளாக நான்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள அவர், ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செயற்பட வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு, களுதாவளை, வன்னியர் வீதி என்ற முகவரியைச் சேர்ந்த இந்த ஊடகவியலாளர் தனது முதல் முறைப்பாட்டில் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டமையைக் குறிப்பிட்டுள்ளார்.

“குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தொடர்பில் நான் செய்தி வெளியிட்டதாகவும், அவர் தொடர்பில் நான் ஏனையவர்களிடம் விசாரிப்பதாகவும் என்னை அச்சுறுத்தும் வகையில் கதைத்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறைப்பாட்டை அவர், முன்னாள் அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ{க்கு எதிராக முன்வைத்துள்ளார். குறித்த அரசாங்க அதிபருக்கு எதிராக இணையத்தளங்களில் தவறான செய்தி வெளிவந்த காரணத்தால் அச்செய்தி என்னால் வெளியிடப்பட்டது என அரசாங்க அதிபர் மட்டக்களப்பு தலைமைப் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். இதனால் பொலிசார் என்னை விசாரணை செய்தனர் என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த சம்பவம் 2016ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

தனது மூன்றாவது முறைப்பாட்டில், “எனக்கு எதிராக எனது புகைப்படத்தை அச்சிட்டு மட்டு ஊடக மையத்தில் துண்டுபிரசுரம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனித உரிமை மீறல் 2020.11.20 அன்று நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தனது நான்காவது முறைப்பாடு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“கடந்த 2020.01.23 அன்று மட்டக்களப்பு மத்திய பேரூந்து நிலையத்தின் மேலுள்ள மட்டு ஊடக மையத்தின் காரியாலயத்தில் நான் உட்பட 7 ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை பிரசுரித்து துண்டுபிரசுரம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது”.
இந்த மிரட்டலை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதை அறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இந்த முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது ஊடகப் பணியை மேற்கொள்ள முடியாது தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்களை தாம் எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் போது இவ்வாறான பிரச்சினைகளை தொடர்;ச்சியாக எதிர்கொண்டு வருதனைக் கருத்திற்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை அளிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஊடக அமைப்புகளும், பாதுகாப்பு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

– மட்டக்களப்பு ஊடகவியலாளர் வ.சக்திவேல் விசனம்

இன வேறுபாட்டை கருத்திற்கொள்ளாது நீர் வசதியைப் பெற்றுத் தாருங்கள்!

 

இன வேறுபாட்டை கருத்திற்கொள்ளாது நீர் வசதியைப் பெற்றுத் தாருங்கள்!

அடிப்படை தேவைகளுள் ஒன்றான நீர் விநியோகம் வழங்கப்படாததால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பைச் சேர்ந்த பி.டெலினா (18) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

மட்டக்களப்பு றனமடு பிரதேச மக்கள் சார்பாக இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்புக்கு எதிராக இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, தாண்டவெளி, எல்லைவீதி தெற்கு, இலக்கம் 15 என்ற முகவரியைச் சேர்ந்த இவர், அடிப்படை தேவையான நீர் இன்றி மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“நீர் மனிதனுக்கு அவசியமான ஒன்று. நீர் வசதியை பெற்றுக்கொள்வது அனைவருக்கும் உள்ள உரிமையாகும். அதனைப் பெற்றுக்கொள்ள உள்ள உரிமையை எவராலும் பறித்துக் கொள்ள முடியாது. அருகில் உள்ள சிங்கள மக்களுக்கு நீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் உள்ள எமது கிராமங்களுக்கு வழங்கப்படாதளவுக்கு பாரபட்சமும் இன வேறுபாடும் தலைத்தூக்கியுள்ளது.”.

றனமடு மக்களுக்கு விரைவாக நீர் வசதியைப் பெற்றுக்கொடுத்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க இலங்கை மனித உரிமைகள் தலையீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் மழைக்காலத்தில் நீர் தேங்கி நிற்பதால் வீதியில் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கின்றது. இதனால் நீர் தேங்கியிருக்கும் இடங்களில் நீரை வடித்து ஓடுவதற்கு வழி செய்யுமாறும் அதற்கு மட்டக்களப்பு மாநகர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றுமொரு முறைப்பாட்டையும் அவர் செய்துள்ளார். மழைக்காலம் முடிந்த பின் சுமார் 4 மாதங்கள் இந்த பிரச்சினை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

– மட்டக்களப்பு டெலினா கோரிக்கை

அதிபரின் செயற்பாட்டினால் மன உளைச்சலுக்குள்ளாகும் சகோதரன் பற்றி முறையிடும்

அதிபரின் செயற்பாட்டினால் மன உளைச்சலுக்குள்ளாகும் சகோதரன்
பற்றி முறையிடும்

அதிபரின் செயற்பாடுகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தனது சகோதரன் சார்பில் ஆர்.ரவீந்திரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சித்தாண்டி மகா வித்தியாலய அதிபருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

“எனது சகோதரனை குறிவைத்து அதிபர் எப்பொழுதும் பல வேலைகளை சொல்வதும், அவர் மீது வீ;ண்பழி சுமத்துவதுமாக இருக்கின்றார் இதனால் எனது சகோதரன் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்”. என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இது பற்றி முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தனிப்பட்ட பழிவாங்கல் உணர்வு, நிர்வாகக் குறைபாடு, அரசியற்கொள்கை ஆகிய காரணங்களினால் இந்த அநீதி எனது சகோதரனுக்கு நிகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாட்டாளர் மட்டக்களப்பு, தாமரைக்கேணி, 30ஃ3 என்ற முகவரியில் வசிக்கின்றார்.

மட்டக்களப்பு ரவீந்திரன்!

 

தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின்றது!

தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின்றது!

தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த இடையூறு விளைவிக்கப்படுவதாக திருகோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் க. சூரியகுமாரி (45) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சீனக்குடா, தமிழ் பாடசாலை வீதி, 39ஃ8 என்ற முகவரியைச் சேர்ந்த அவர், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி தென்னைமரவாடி கிராமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச சபை உட்பட குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அவர் இந்த முறைப்பாட்டில் கூறியுள்ளதாவது,
“குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னைமரவாடி கிராமம் பற்றிய தகவல் ஒன்றைப் பெறுவதற்காக சென்ற வேளை தகவல்களை மக்களிடம் பெற முடியாமல் தடுக்கப்பட்டேன். அங்கு பொலிசாரின் பிரசன்னம் காரணமாக எனது பணியை செய்ய முடியவில்லை. அவர்கள் பல தடைகளை விதித்தும் இடையூறுகளை செய்தும் எனது ஊடகப் பணிக்கு இடைஞ்சல் செய்தனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனம் மற்றும் மொழி பாரபட்சம் காரணமாக தகவல்களைப் பெறுவதிலிருந்து தான் தடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டில், ஊடகத்துறை பாதுகாப்பு என்பது இக்காலகட்டத்தில் மிகவும் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் திட்டமிட்டு அதிகாரத்தரப்பினரால் இடையூறு விளைவிக்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்தும் போது அதற்கு எதிராக பல நடவடிக்கைகள் அதிகார தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றது. இது மக்களுக்கு எதிரான ஓர் செயற்பாடாக அமைவதுடன், மனித உரிமைகளை மீறும் செயலாகவும் அமைகின்றது என்று கூறினார்.

– ஊடகவியலாளர் சூரியகுமாரி விசனம்

செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக பொலிசார் வழக்குப் பதிவு ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்கின்றார் ஊடகவியலாளர் அலியார் முகமது!

செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக பொலிசார் வழக்குப் பதிவு
ஊடக சுதந்திரத்தை மீறும் செயல்.

மதகுருவின் போலியான டிக்டொக் வீடியோ பற்றிய செய்தியின் காரணமாக பொலிசார் வழக்குத் தாக்கல் செய்தனர் என திருகோணமலை ஊடகவியலாளர் அலியார் முகமது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

திருகோணமலை சாரதா வீதி, 26/1 என்ற முகவரியைச் சேர்ந்த இவர் பிரதான ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராக பணியாற்றி வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தயான் அவர்களுக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார்.

கொரோனா கால பயணத்தடை காலத்தில் பொருட்கள் விநியோகம் செய்வதாக பொய்யான வீடியோ எடுத்து அதை டிக்டொக் ஊடாக வெளியிட்டது தொடர்பாகவும், மதகுரு கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் செய்தி வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்னை விசாரணைக்கு அழைத்து பின்னர் எனக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு திகதி 25.05.2022 என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரிமை மீறல் 05.02.2021 அன்று இடம்பெற்றதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். ஹிரு, தெரண, சுவர்ணவாகினி ஆகியவற்றில் வெளியான செய்திகளை அவர் ஆவண சாட்சியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் அலியார் முகமது!

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

கிண்ணியா படகு விபத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற வேளை இனந்தெரியாத இளைஞர் குழுவால் தாக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர் ஏ.எல்.றிபாய்தீன் (60) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.

திருகோணமலை, லவ்லேன், இல 1 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும், பிரதேச செயலகத்திற்கு எதிராகவும், திருகோணமலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், கிண்ணியா பிரதேச செயலாளர் ஆகியோருக்கு எதிராகவும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்.
அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:

“22-11-2021 அன்று கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்து சம்பவத்தின் போது பிராந்திய செய்தியாளரான நான் ஜமாலியா பள்ளிவாசல் தலைவருடன் வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டு வாகனத்திலிருந்துவாறு சம்பவ நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது இனம் தெரியாத இளைஞர் குழு எனது பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், எனது கழுத்தை நெரித்து தொலைபேசியை பறித்தெடுக்க முயற்சித்தனர். இந்த சம்பவம் பொலிசார் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் எனது வாகனத்தை சரமாரியாக தாக்கினர். அடையாள அட்டையைக் காண்பித்ததும் என்னை விட்டுவிட்டனர்”. என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகக் குறைபாடும், அரசியற் கொள்கையும் இதற்கு காரணம் என்று இந்த முறைப்பாட்டில் றிபாய்தீன் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பில் ஒளிப்பதிவும், கண்கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாட்டினூடாக ஊடக செயற்பாட்டிற்கான சுதந்திரம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் றிபாய்தீன் கோரிக்கை

பொலிஸ் அறிக்கைகளை தமிழ், சிங்கள இருமொழிகளிலும் தாருங்கள்!

பொலிஸ் அறிக்கைகளை தமிழ், சிங்கள இருமொழிகளிலும் தாருங்கள்!

பொலிஸ் முறைப்பாடுகளின் போது பொலிஸ் அறிக்கைகள் சிங்கள மொழி மூலம் வழங்கப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக திருகோணமலை லிங்க நகரைச் சேர்ந்த ப.லோஜினி (42) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

லிங்க நகர், முதலாம் ஒழுங்கை, 14ஃ14ல் வசிக்கும் இவர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும், திருகோணமலை தலைமைப் பொலிஸ், நிலாவெளி, சீனக்குடா, உப்புவெளி ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் தினந்தோறும் நடைபெறுவதாகவும், நிர்வாகக் குறைபாடுகள் காரணமாகவும், மொழிப் பிரச்சினை காரணமாகவும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டை நிரூபணம் செய்வதற்கான ஆவணங்களாக பொலிஸ் அறிக்கைகளைக் குறிப்பிடும் அவர், முறைப்பாடுகள் செய்பவர்களின் மொழிக்கே அறிக்கைகள் வழங்கப்பட ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும், சிறந்த நிர்வாக முறையின் ஓர் அம்சமாக இரு மொழிகளிலும் அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு பரீட்சயமான மொழியில் பொலிஸ் அறிக்கைகளையோ, அரச ஆவணங்களையோ பெறுவது சகலரின் உரிமையாகும். இந்த உரிமைகள் இன்னும் மீறப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

– லிங்கநகர் லோஜினி வேண்டுகோள்

மணல் அகழ்வு குறித்தான செய்தி அறிக்கையிடலின் காரணமாக அச்சுறுத்தப்பட்டேன்!

மணல் அகழ்வு குறித்தான செய்தி அறிக்கையிடலின்
காரணமாக அச்சுறுத்தப்பட்டேன்!

திருகோணமலையில் அதிகரித்துவரும் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்தான செய்தி அறிக்கையிடல் காரணமாக அச்சுறுத்தலுக்குள்ளானதாக திருகோணமலையைச் சேர்ந்த அ. அச்சுதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதி, இலக்கம் 56ஐ வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் அச்சுதன் (42), 2019ம் ஆண்டு நிகழ்ந்த இந்த மனித உரிமை மீறல் தொலைபேசியினூடாக நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாகவும், உத்தியோகபூர்வமாகவும் மணல் அகழ்வு செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனை செய்தியாக அறிக்கையிட்ட போது மண் ஏற்றுபவர்களின் அச்சுறுத்தலுக்குள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பின்றி நடுநிலை ஊடகவியலாளராக தாம் ஊடகப்பணிகளில் ஈடுபடுவதே இந்த அச்சுறுத்தலுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூறும் அவர், சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.
மண் ஏற்றுமதியாளர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகார பலமும், பணபலமும் கொண்டவர்களாக உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் மௌனம் காக்கின்றனர் என்று அவர் கூறினார்.

இவ்வாறான ஊடகச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக பணிகளை முன்னெடுக்கும் சூழல் உருவாக வேண்டும் என்று முறைப்பாட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.

-ஊடகவியலாளர் அச்சுதன் முறைப்பாடு

ஏனைய சமூகத்தவர்களை சிரமத்திற்குள்ளாக்கும் சிங்கள மொழியில் மட்டும் அமைந்த விண்ணப்பப்படிவம்!

ஏனைய சமூகத்தவர்களை சிரமத்திற்குள்ளாக்கும் சிங்கள மொழியில் மட்டும் அமைந்த விண்ணப்பப்படிவம்!

பொலிசார் விநியோகித்த விண்ணப்பப்படிவம் சிங்கள மொழியில் இருப்பதால் சிறுபான்மை மக்கள் சிரமத்திற்குள்ளாவதாக திருகோணமலையை சேர்ந்த முகம்மது அஸ்வர் (45) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திருகோணமலை, தக்கியா வீதி, 36/14 என்ற முகவரியைச் சேர்ந்த இவர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும், பொலிஸ் மா அதிபருக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

குடும்ப விபரங்களை புதிதாக திரட்டுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவம் முற்றிலும் சிங்கள மொழியில் மட்டுமே உள்ளதனால், சிங்கள மொழி அறியாத தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த விண்ணப்பத்தை நிரப்புவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நாடு முழுவதும் இந்த படிவம் இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

சிங்கள மொழி தெரியாத மற்றைய சமூக மக்களைக் கருத்திற்கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த செயற்பாட்டிற்கு காரணம் நிர்வாகக் குறைபாடு என்று முறைப்பாட்டில் தெரிவித்துள்ள அவர், இந்த அநீதிக்கு ஆவண சாட்சியும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

– திருகோணமலை முகம்மது அஸ்வர்

 

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உப்புவெளி பொலிசார்!

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உப்புவெளி பொலிசார்!

செய்தி ஒன்று தொடர்பில் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளியாக இணைக்கப்பட்டதனால் எனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் அலியார் முகமட் ஹீத் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகவே அவர் இந்த முறைப்பாடடை செய்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டங்களுக்கு உட்பட்டும், 1978ம் ஆண்டு குடியரசு யாப்பின் 14வது பிரிவின் கீழுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம் உடைய ஊடகவியலாளராகிய என்னை பொலிசார் இவ்வாறு வழக்கு ஒன்றில் குற்றவியல் சட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டமை ஊடக சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பதாக அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை, சாரதா வீதி, 26/1 என்ற முகவரியில் வசிக்கும் இவர், இலங்கை அரசாங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள ஹிரு செய்திகள், ஸ்வர்ணவாஹினி, தெரண, சுப்ரீம் டி.வி ஆகிய ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டு ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றார்.

இந்த முறைப்பாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“திருகோணமலை உப்புவெளி பொலிசாரினால் கடந்த 2021- 08- 05 அன்று வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில், கடந்த ஆனி மாதம் இடம்பெற்ற செய்தி அறிக்கையிடல் ஒன்று தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் குற்றவியல் சட்டத்திற்கு ஒவ்வாத வகையில் பொலிசாரால் வழக்கு (BR/629/01/PC/21) ஒன்றில் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளேன்.

அத்துடன் இது போன்றே குறித்த வழக்கில் கடந்த 25-08-2-2021ம் திகதி திருக்கோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் சி.ஹயக்கிரிவன் அவர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.”.

இது தொடர்பில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, ஊடக சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடிய இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் அலியார் முகமத் ஹீத்

 

பொதுமக்களை அசௌகரியப்படுத்தும் பற்றுச்சீட்டு விநியோக தாமதம்!

பொதுமக்களை அசௌகரியப்படுத்தும் பற்றுச்சீட்டு விநியோக தாமதம்!

கனிய வள திணைக்களம் மண் விற்பனை தொடர்பான பற்றுச்சீட்டை தாமதமாக வழங்குவதனால் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக திருகோணமலையைச் சேர்ந்த விதூஷன் (32) முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

திருமலை. சிவன் வீதியைச் சேர்ந்த இவர், பொதுமக்கள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார். மாவட்ட செயலகத்திற்கு எதிராகவும், கனிய வள திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.

மாவட்ட கனிய வள திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் யாட் மண் விற்பனை செய்வதற்கான பற்றுச்சீட்டினை வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் மாவட்டத்தில் உள்ள யாட் உரிமையாளர்கள் அவர்களுடைய தொழிலை உரிய முறையில் செய்வதற்கு திணைக்களம் தடையாள உள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வருட ஆரம்பத்திலிருந்து இடம்பெறுவதாகவும், நிர்வாகம் மற்றும் அரசியற்கொள்கை காரணமாக இந்த அநீதி இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உரிய காலத்தில் உரிய முறையில் இந்த பற்றுச்சீட்டினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதனால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் பெருமளவில் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

– திருமலை விதூஷன்

மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றேன்!

மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றேன்!

மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு தரப்பின் அடக்குமுறைக்குள்ளாவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த பாரதிதாசன் (64) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு இணையம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவராக 2019- 2021 காலப்பகுதிகளில் கடமையாற்றிய போது முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்தனர் என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, அதிகார் வீதி, 15/4 என்ற முகவரியில் வசிக்கும் இவர், மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர், புலனாய்வு பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை வைத்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தற்போதும் அவ்வாறே தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 06ம் திகதி மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், மனித உரிமைகள் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபடுவதே பாதுகாப்பு தரப்பின் இந்த செயற்பாடுகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார்.

தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுதல், தொடர் விசாரணைகள் என்று பலவிதமான அழுத்தங்கள் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றமை தங்கள் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறு என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அடக்கி ஒடுக்குவதனூடாக மனித உரிமை மீறல்கள் அம்பலமாவதை தடுக்க முடியும் என்று பாதுகாப்பு தரப்பு கருதுகின்றது. இது மனித உரிமைகளை மதிப்பதாக சர்வதேசத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இலங்கைக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளில் புலனாய்வுப் பிரிவினரின் தலையீடு இல்லாதிருப்பதனை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதி செய்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த முறைப்பாட்டினூடாக அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

– மட்டக்களப்பு மனித உரிமை செயற்பாட்டாளர் பாரதிதாசன்

இடைநடுவில் நிறுத்தப்பட்ட கற்கைநெறியை பூர்த்தி செய்ய சந்தர்ப்பம் தாருங்கள்!

இடைநடுவில் நிறுத்தப்பட்ட கற்கைநெறியை பூர்த்தி செய்ய சந்தர்ப்பம் தாருங்கள்!

சமுத்திரவியல் பல்கலைக்கழக வளாக ஏற்பாட்டியல் முகாமைத்துவம் சம்பந்தமான டிப்ளோமா கற்கைநெறியை தொடர்ந்த போது நிகழ்ந்த ஓர் சம்பவத்தினால் கற்கைநெறியை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு தனது மனித உரிமைகள் மீறப்பட்டதாக சோ. கங்காசுதர் (32) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணி என்ற முகவரியைச் சேர்ந்த அவர், சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு வளாகம் – இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் கற்கை நெறி இணைப்பாளர் அருள் அவர்களுக்கும் எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார்.

அவர் இந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,
“2016ம் ஆண்டு சமுத்திரவியல் பல்கலைக்கழக மட்டக்களப்ப வளாகத்தில் ஏற்பாட்டியல் முகாமைத்துவம் சம்பந்தமான டிப்ளோமா கற்கை நெறியை வார இறுதி நாட்களில் பயின்று கொண்டிருந்தேன். எமது கற்கை நெறிக்கு வளவாளராக வந்த நபர் கணித மற்றும் ஆங்கில பாடங்களுடன் தொடர்புப்படுத்தி பயிற்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு கணித பாடத்தில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் கூறும் போது அதற்கு தமிழில் விளக்கம் கூறாமல் கற்பித்ததினால் மேற்படி ஆசிரியர் தொடர்பில் மதிப்பீட்டு ஆய்வு குழுவுக்கு முறைப்பாடு செய்தேன். நான் முறைப்பாடு செய்து சில நிமிடங்களில் கொழும்பில் இருந்து வந்திருந்த சமுத்திரவியல் பல்கலைக்கழக பணிப்பாளர் என்னை மிரட்டி அச்சுறுத்தி நான் தெரிவித்த விடயங்களை வாபஸ் பெறுமாறும் அவ்வாறு செய்ய தவறினால் எனது டிப்ளோமாவை தொடர முடியாது விலக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தினார்” என்று முறைப்பாட்டில் பதிவாகியுள்ளது.

மனித உரிமை மீறல் இடம்பெற்ற இடமாக சமுத்திரவியல் பல்கலைக்கழக வளாகத்iதைக் குறிப்பிட்டுள்ள அவர், நிர்வாகக் குறைபாடே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்கண்ட சாட்சிகளாக சக மாணவர்கள், விசாரணைக்குழுவினர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நிர்வாகியால் மேற்படி அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டதனால் தனது டிப்ளோமா கற்கை நெறியை பாதியில் நிறுத்த வேண்டிய துரதிருஷ்ட நிலை ஏற்பட்டதாகவும், வகுப்பில் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் உயர்நிர்வாகியே இவ்வாறு அநீதி இழைத்ததால் தன்னால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு தீர்;வாக மேற்படி இடைநடுவில் கைவிடப்பட்ட கற்கை நெறியை தொடர்;ந்து பூரணமாக நிறைவு செய்து டிப்ளோமாவை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அமைத்துத் தருமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

– மட்டக்களப்பைச் சேர்ந்த கங்காசுதர்.

 

தகுதியற்ற நிர்வாகத்தினால் தொல்லை!

தகுதியற்ற நிர்வாகத்தினால் தொல்லை!

நிர்வாகம் தெரியாத தகுதியற்ற மேலதிகாரியின் நிர்வாகத்தினால் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் பு. கிருஷிகா முறைப்பாடு ஒன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளார்.

23 வயதான கிருஷிகா மட்டக்களப்புஇ நாவற்குடாஇ கணக்குப்பிள்ளை வீதி என்ற முகவரியில் வசித்து வருகின்றார். இவர் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் பணியாற்றி வருகின்றார்.

அதே நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி எஸ்.தரணிகாவுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:
சம்பந்தப்பட்ட அதிகாரி தனது பணியில் இருந்துகொண்டு பணியாளர்களை மதிப்பதில்லை. சுதந்திரமாக வேலை செய்ய விடுவதில்லை. சக வேலையாட்களோடு பேசும் விதம் முற்றிலும் முரணானது. எல்லா விடயத்திலும் தேவையற்ற இறுக்கத்தை விதிப்பது மற்றும் சுருக்கமாகக் கூறினால் பணியாளர்களை ஆடு மாடு போன்று நடத்துவது என்று அவரின் செயற்பாடு உள்ளது. இந்த விடயங்களை உறுதிப்படுத்த அலுவலக பணியாளர்களோடு உரையாடுங்கள். பல மனவருத்தங்களோடு தான் அங்கு அவர்கள் பணிபுரிகின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை இந்த மனித உரிமை மீறல் நடப்பதாகவும்இ ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்தில் இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறலுக்கான காரணம் நிர்வாகம் எப்படி மேற்கொள்வது என்ற அறியாமையும்இ தெளிவின்மையும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பணிபுரிபவர்கள் அனைவரும் வேலை பறிபோய் விடும் அச்சத்தில் அமைதியாக உள்ளனர். குடும்ப சூழ்நிலையும் இதற்கு காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிர்வாகியிடம் எதிர்த்து பேசினால் வேலை பறிபோய் விடும் என்ற அச்ச உணர்வு அனைவரையும் ஆட்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறைப்பாட்டை முன்வைப்பதனூடாக சுதந்திரமாக வேலை பார்க்கக் கூடிய சூழலை அமைத்துக் கொடுக்கும் படி தாழ்மையோடு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

– ஊடகவியலாளர் கிருஷிகா

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்!

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்!

இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது அம்மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று மாங்குளத்தைச் சேர்ந்த சண்முகம் தவசீலன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மாங்குளம் பனிச்சங்குளம் முகவரியில் வசிக்கும் இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராகவும், முல்லைத்தீவு பாதுகாப்புப்படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேறிய போது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு இராணுவம் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 12 வருடங்கள் கடந்த நிலையில் இராணுவத்தினர் அவர்களது நிலத்தை இன்னும் விடுவிக்காமல் இருப்பது அந்த மக்களின் மனித உரிமைகளை மிக மோசமாக மீறும் செயலாகும் என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் நடைபெற்ற இடமாக கோப்பாபுலவை குறிப்பிட்டுள்ள அவர், 2009ம் ஆண்டு மனித உரிமை மீறல் நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தும் பலன் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், முல்லைத்தீவு நீதிமன்றில் 2018ம் ஆண்டு வழக்கு பதிவாகியுள்ள போதிலும். இதுவரை மக்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை என்றும், மக்களின் நிலங்களை விடுவிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

– சண்முகம் தவசீலன்

 

ஊடக அடையாள அட்டையே ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடுகின்றது!

ஊடக அடையாள அட்டையே ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடுகின்றது!

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை ஊடகங்களில் அறிக்கையிடும் போது தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தலுக்குள்ளாவதாக முல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன் டிஷாந்த் (29) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மல்லாவி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இராணுவ காவலரண் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

முல்லைத்தீவு, நட்டாங்கண்டல், பூவரசங்குளம், கொம்பவத்தகுளம் முகவரியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் டிஷாந்த் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கண்காணித்து வருவதாகவும் இது தனது ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விடயமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை முன்வைத்து இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ள போதிலும் 2015ம் ஆண்டு முதல் தான் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகக் கூறினார்.
பிரதேச மக்களின் முறைப்பாட்டை அடுத்து நட்டாங்கண்டல் பாலம் தொடர்பான செய்தியை அறிக்கையிடுவதற்காக புகைப்படம் எடுக்க சென்ற போது அப்பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் உள்ள இராணுவத்தினரால் தனது பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற பல சம்பவங்களை தான் எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் பின்வருமாறு அவர் தனது முறைப்பாட்டை விபரித்துள்ளார்:
‘மல்லாவி மற்றும் பாண்டியன் குளம் பகுதிகளில் செய்தி அறிக்கை செய்வதற்காக என்னுடன் இன்னொரு சக ஊடகவியலாளர் பயணம் செய்த பொழுது இராணுவ காவலரணில் இருக்கும் இராணுவ உத்தியோகத்தர்கள் நாங்கள் மீண்டும் திரும்பி வரும் போது எங்களை இடைமறித்து எமது உடமைகளை பரிசோதனை செய்திருந்தனர். நாங்கள் ஊடகவியலாளர்கள் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்த போதும், அவ்விடத்தை விட்டு எம்மை நகர விடாமல் இடையூறு செய்தனர். பல மணி நேரங்களின் பின்பு தான் பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ள இராணுவ அதிகாரி வந்து எங்களை செல்ல அனுமதித்தார். இது எங்கள் ஊடகப்பணியை தடுத்து இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும்.’
தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரால் இவ்வாறான இடையூறுகள் விளைவிக்கப்படுவதனால் தம்மால் சுதந்திரமாக செயற்படாத நிலைமை உள்ளதாகவும், அச்சுறுத்தலை எந்த நேரத்தில் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற மனநிலையில் தான் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மக்கள் ஊடகவியலாளர்களிடம் பிரச்சினைகளைக் கூறி அதற்கு தீர்வுப் பெற்றுத்தர உதவுமாறு கேட்கின்றனர். ஆனால் மக்கள் நலன்சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் செய்திகளை அறிக்கையிடும் போது அவை பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பட காரணமாக அமைந்து விடுகின்றது. ஏனெனில் பாதுகாப்பு தரப்பினரின் அடக்குமுறைக்குட்பட்டு பேச்சு சுதந்திரம் இன்றி இருக்கும் பொதுமக்கள் வெளிப்படுத்தும் விடயங்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு பிரச்சினையாகி விடும் என்ற அச்ச உணர்வு அவர்களிடம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிக்கையிடும் போதும் புகைப்படங்கள் எடுக்கும் போதும் ஊடகவியலாளர்களுக்கு திட்டமிட்டு இடையூறு விளைவிக்கப்படுகின்றது என்று டிசாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் இவ்வாறு மக்கள் நலன் சார்;ந்து செயற்படும் ஊடகவியலாளர்கள் விசேடமாகக் கண்காணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர். சமீபத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்ட இருவர் தன்னை பெயரை சொல்லி அழைத்து தகவல்களைப் பெற முயற்சித்ததாகவும், அவர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டபொழுது அருகாமையில் இருக்கும் இராணுவ முகாமுக்கு வருமாறும் அங்கு முழுமையான விபரங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அச்சுறுத்தலான ஓர் சூழ்நிலையில் தங்கள் ஊடகப் பணியை ஆற்றி வருவதாகக் குறிப்பிடும் டிஷாந்த், போரில் தனது இரு சகோதரங்களை இழந்துவிட்ட நிலையில் தனது பாதுகாப்பு குறித்தும் தன் குடும்ப உறவுகள் அச்சமுற்றிருப்பதாகவும், இந்த அச்சுறுத்தல்கள் பற்றி பல அமைப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என்றார்.

சில சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையே பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது. அதனை காட்டி நாங்கள் எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போது பாதுகாப்பு தரப்பினர் மிக மோசமாக நடந்துகொள்கின்றனர் என்று டிசாந்த் குறிப்பிட்டார்.

– ஊடகவியலாளர் டிஷாந்த்

 

செய்தி அறிக்கையிடல் காரணமாக அரசியற் பழிவாங்கலுக்குள்ளானேன்!

செய்தி அறிக்கையிடல் காரணமாக அரசியற் பழிவாங்கலுக்குள்ளானேன்!

– ஊடகவியலாளர் சப்தசங்கரி

காடழிப்பு சம்பந்தமான செய்தியை அறிக்கையிட்டதனால் அநீதியை எதிர்கொண்டதாக முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஞா. சப்தசங்கரி (36) இலங்கை மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
முல்லைத்தீவு, முறிகண்டி, செல்வபுரம், இல 99 என்ற முகவரியைச் சேர்ந்த இவர் பிரதேச செயலகம் மற்றும் மாங்குளம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். உரிமை மீறலில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளாக ஒட்டுசுட்டான், பிரதேச செயலாளர், டி.அகிலன், மாங்குளம், சமுர்த்தி அபிவிருத்தி வங்கி, முகாமையாளர் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு இம்மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது.

‘நல்லாட்சி காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக செயற்பட்ட தேசியப்பட்டியல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா அத்துமீறி காடழிப்பில் ஈடுபட்டமை தொடர்பில் செய்தி அறிக்கையிட்டிருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த அரச வீட்டுத்திட்டத்தை இடைநிறுத்தி அவரது அடிவருடிகளான புதுக்குடியிருப்பு பிரதேச சபையினூடாக அனுமதியற்ற கட்டடம் அமைப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்தனர். இன்றுவரை வீட்டுத்திட்ட மிகுதி பணமும் கிடைக்கவில்லை.’ என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் தீர்வு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பில் ஆவண சாட்சியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இதே பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த முறைப்பாட்டை முன்வைப்பதனூடாக விரைவில் இந்த அநீதிக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின்போது எதிர்கொள்ளும் இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக முன்னிற்கும் அமைப்புகளும் அக்கறை காட்ட வேண்டும். இது முற்றுமுழுதான அரசியற் பழிவாங்கல். இதனால் சுதந்திரமாக ஊடகப் பணிகளை முன்னெடுக்க முடியாத ஒரு அச்சுறுத்தலான நிலைமையே காணப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்திருந்தது.

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இதுவரை விசாரிக்கப்படவில்லை!

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இதுவரை விசாரிக்கப்படவில்லை!

சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமான முறைப்பாடு தொடர்பில் இதுவரை விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டை, பழைய கண்டி வீதி, 03ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட பாஸ்கரன் (47) கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும், பல்வகை முறைப்பாட்டுப் பிரிவுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல் நடைபெற்ற காலப்பகுதியாக 2022 ஜனவரி 28 மற்றும் மார்ச் 3 ஆகிய தினங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த மனித உரிமை மீறலுக்கான காரணம் செய்தி அறிக்கையிடல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைபேசி உரையாடலையும் அவர் கண்கண்ட சாட்சியாக பதிவு செய்துள்ளார்.
2022 ஜனவரி 28ம் திகதியும், 2022 மார்ச் மாதம் 3ம் திகதி ஆகிய இரு தினங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பல்வகை முறைப்பாட்டு பிரிவால் டிப்பர் வாகனம் தொடர்பில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் நிகழும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் மௌனம் காப்பது மிகவும் கவலைக்குரியதாகும். அதேநேரம் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை புலனாய்வு செய்து அறிக்கையிடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் கேள்விக்குட்படுத்தும் விடயமாகவும் இது உள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்களினால் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படலாம். இது அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அவர்கள் சார்ந்த குடும்ப உறவுகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும்.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடும் போது ஏற்படும் அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் எதிர்கொள்ளும் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவது தவிர வேறு வழிகள் இல்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் விரைவாக தலையிட வேண்டும் என்பதும் இவர் தரப்பு கோரிக்கையாக உள்ளது.
சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் அசமந்தப் போக்கும், பாராமுகமும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலாகவே துரதிருஸ்டவசமாக அமைந்துவிடுகின்றது. ஊடகவியலாளர்களும் மக்களும் நியாயத்தின் பக்கம் நிற்க சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தரப்போ அநியாயத்தின் பக்கம் நின்று துணை போவது மிகவும் துயராமான விடயம் என்று இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் சாட்சியங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் முறைப்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

– ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன்

நீதியை நிலைநாட்டி நட்டஈட்டைப் பெற்றுத்தாருங்கள்!

நீதியை நிலைநாட்டி நட்டஈட்டைப் பெற்றுத்தாருங்கள்!

உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உடமைகள் திருடப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை விசாரணைகளை நடத்தவில்லை என்று சு.ஜெயலட்சுமணன் (36) ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்குளம், கனகேந்திரன் குடியிருப்பு என்ற முகவரியைச் சேர்ந்த இவர் கிளிநொச்சி பொலிசாருக்கு எதிராகவும், கிளிநொச்சி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

சம்வம் ஒன்று தொடர்பில் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, கத்தி மற்றும் கொட்டான் கொண்டு விரட்டப்பட்ட நிலையில் உடமைகளும் களவாடப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் ஜெயலட்சுமணன் தெரிவித்திருக்கின்றார். கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது. அம்பாள்குளம், கிளிநொச்சி மனித உரிமை மீறல் இடம்பெற்ற இடமாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்கண்ட சாட்சிகளாக மூவர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொலிஸ் முறைப்பாடு ஆவண சாட்சியாக உள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி நீதியை நிலைநாட்டி நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாறு ஜெயலட்சுமணன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோள் முறைப்பாடாக கடந்த மார்ச் 07ம் திகதி 2022 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

– ஜெயலட்சுமணன்

நிதி முறைகேடுகளைத் தடுக்க அரச ஊழியர்களுக்கு வருடாந்தம் கட்டாயம் இடமாற்றல் வழங்கப்பட வேண்டும்!

நிதி முறைகேடுகளைத் தடுக்க அரச ஊழியர்களுக்கு வருடாந்தம் கட்டாயம் இடமாற்றல் வழங்கப்பட வேண்டும்!

அரச ஊழியர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றுவதால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், அவர்களுக்கு இடமாற்றம் வழங்க தலையிடுமாறு அப்துல் அசீஸ் யசூர் (49) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா, வேப்பங்குளம், பட்டாணிச்சூர் என்ற முகவரியைச் சேர்ந்த இவர் வவுனியா சமுர்த்தி திணைக்களத்திற்கு எதிராகவும், அத்திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

அரசியற்கட்சிகளின் அல்லது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர்களின் தலையீட்டின் காரணமாக வருடாந்த இடமாற்றம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல வருடங்களாக ஒரே இடத்தில் அரச ஊழியர் ஒருவர் பணியாற்றும் போது நிதி மோசடிகளுக்கும், பல்வேறு முறைகேடுகளும் இடம்பெறுவதாக அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான அரச ஊழியர்களினால் சாதாரண பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், வவுனியாவில் 2020- 2022 காலப்பகுதியில் பல மனித உரிமை மீறல்கள் இதன் காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான கண்கண்ட சாட்சியங்களும், ஆவண சாட்சியங்களும் இருப்பதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அரச நிர்வாகத்தில் இடம்பெறும் அரசியற் தலையீடுகள் காரணமாக மக்களுக்குரிய சேவைகளை பாரபட்சமின்றி வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்த பாரபட்சமான நிலை காரணமாகவும் முறைகேடுகள் காரணமாகவும் மக்கள் அரச சேவைகளை உரியவாறு பெற்றுக்கொள்வதில் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் அரச சேவை தொடர்பில் அவநம்பிக்கையற்றவர்களாகவும் உள்ளனர்.

சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் அப்பாவி பொதுமக்கள் நியாயமற்ற பல காரணங்களுக்காக துன்புறுத்தப்படுவதும் நிகழ்கின்றது என்று இந்த முறைப்பாட்டினூடாக தெரிய வருகின்றது. சமுர்த்தி போன்ற வறுமை ஒழிப்புத்திட்டங்களுக்காக பணியாற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதனை முதன்மை கடமையாகக் கொள்ளாது உதவித்தொகையில் நிதி முறைகேடுகளை செய்வதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்படுகின்றது.

இதனால் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி பணிகள் இடம்பெற வேண்டும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள், வாழ்வாதாரம் என்பன உரிய முறையில் கிடைக்க வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று அப்துல் அசீஸ் யசூர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

– அப்துல் அசீஸ் யசூர்

மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்!

மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்!

வவுனியா காஞ்சிரமோட்டை வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக நவரத்தினம் கபிலன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வவுனியா, யாழ்வீதி, சே.யோ. ஒழுங்கை, இல 10 என்ற முகவரியைச் சேர்ந்த இவர், வனவளத்திணைக்களத்திற்கு எதிராகவும், மாவட்ட வனவள அதிகாரி, வவுனியா வனவள திணைக்களம் ஆகிய அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்படட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் யுத்தத்திற்கு முன்னர் பல்வேறு வசதிகளுடன் வாழ்ந்த நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தனர். இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்பு அவர்கள் மீள்குடியேறிய போதிலும் வனவள திணைக்களம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததது. எனினும் அவர்கள் குடியேறிய நிலையில் அடிப்படை வசதிகளை செய்து வாழ அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் மின்சார வசதியைப் பெற மக்களுக்கு அனுமதி மறுத்த நிலையில் மின்சாரத்தை பெற முடியாமமல் அவர்கள் தவித்து வருகின்றனர். அத்துடன் இதுவரை அவர்களது வாழ்விடத்திற்கான ஆவணங்களை வழங்காமல் அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியே இடம்பெற்று வருவதாக முறைப்பாட்டில் கபிலன் தெரிவித்திருக்கின்றார்.

2018ம் ஆண்டு முதல் இப்பகுதி மக்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் இந்த மனித உரிமை மீறல் தொடர்பில் மக்கள் பிரதேச செயலர்களிடம் அறிவித்துள்ளனர். காணிக்கான ஆவணங்கள் வழங்கப்படாது இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கபிலன் குறிப்பிட்டுள்ளார்.

இனம் மற்றும் அரசியற்கொள்கை ஆகிய காரணங்களினால் இந்த மக்களின் உரிமைகள் இவ்வாறு அரச அதிகாரிகளினால் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் தமது வாழ்விடத்தில் தொடர்;ந்து வாழ அனுமதிக்குமாறு வனவளத்திணைக்களத்திற்கு ஆவண செய்யுமாறும், அந்த பகுதி சார்ந்த காணி ஆவணங்களை மக்களுக்கு வழங்க தலையிடுமாறும் கபிலன் விசேட வேண்டுகோளை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ளார்.

வனவளத்தி;ணைக்கள அதிகாரிகள் இவ்வாறு இன பாரபட்சத்துடன் நடந்துகொள்வது தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியுற்ற நிலையில் உள்ளனர் என்றும் தாம் பூர்வீகமாக வாழ்ந்து இடத்தில் மீளக்குடியேறி வாழ முற்படும் மக்களுக்கு முட்டுக்கட்டைப் போடும் இவ்வாறான செயற்பாடுகள் இன விரிசலையும், தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களையும் ஏற்படுத்தி ஆரோக்கியமற்ற சூழலையே உருவாக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

– நவரத்தினம் கபிலன்

பிரதேச எல்லைப் பிரிப்பினால் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளது!

பிரதேச எல்லைப் பிரிப்பினால் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளது!

பிரதேச எல்லைப் பிரிப்பின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் பா.சதீசன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

வவுனியா, நெளுக்குளம், புதையல்பிட்டி, இல 225ஃ 3 யு என்ற முகவரியில் வசிக்கும் சதீசன் வன இலாகா திணைக்களத்திற்கும், வன இலாகா அதிகாரிக்கும் எதிராக இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இந்த மனித உரிமை மீறல் 2021ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி நடைபெற்றதாகவும், கற்குளம், வவுனியாவில் இந்த மனித உரிமை மீறல் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

நிர்வாகக் குறைபாட்டின் காரணமாக இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா கற்குளம் -2 கிராமத்தில் வசிப்பவர்கள் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தார்கள். தற்போது எல்லை பிரிக்கப்பட்டதனால் அவர்கள் அனுராதபுரம் மாவட்டத்திற்கு சென்று விட்டார்கள். அதனால் மாவட்ட ரீதியாக தேவைப்பாடுகளை பல கி.மீ தூரம் கடந்து செல்ல நேர்ந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி இந்த முறைப்பாட்டினூடாக வவுனியா மாவட்டத்திற்குள் தங்களை உள்ளடக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்வாகக் குறைபாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

– பா.சதீசன்

ஊடகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பு!

ஊடகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பு!

தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற வேளை இடையூறு விளைவிக்கப்பட்டதாக வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கு.கோகிலன் (38) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொல்பொருள் திணைக்கத்திற்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.

ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டதாகவும், இந்த மனித உரிமை மீறல் அரசியற் காரணங்களுக்காக இடம்பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு மார்ச் 8ம் திகதி 2022 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வவுனியா கச்சன் சமணங்குளத்தில் தொல்பொருள் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளினால் தடையேற்படுத்தப்பட்டதுடன் புதிதாக மறுசீரமைக்கப்படும் தொல்பொருட்களை ஒளிப்பதிவு செய்ய தடை விதித்தனர்.

மறுசீரமைக்கப்படாத விடயங்களை மாத்திரம் ஒளிப்பதிவு செய்ய சிறிது நேரம் மட்டும் அனுமதித்ததுடன் இது தொடர்பாக தான் பணியாற்றும் ஊடக நிறுவனத்திற்கு தகவல் வழங்கி மேலதிகாரிகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தேன்’.

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அவற்றை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டினூடாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் கோகிலன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் சமூக நிறுவனங்களை அடக்குமுறைக்குள்ளாக்கும் பாதுகாப்பு தரப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் சமூக நிறுவனங்களை அடக்குமுறைக்குள்ளாக்கும் பாதுகாப்பு தரப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் சமூக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் காரணமாக மக்களுக்கான பணிகளை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜே.யாட்சன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் மேற்கு, பள்ளிமுனை என்ற முகவரியைச் சேர்ந்த யாட்சன், இந்த அடக்குமுறைகள் தொடர்பில் பலமுறை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த போதிலும் அது பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழு எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் அவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அளிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு, மற்றும் வவுனியா, மன்னார் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

காணாமற்போனோர் விவகாரம், காணி விவகாரம் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு மன்னாரில் இயங்கிவரும் தனது அமைப்புக்கு எதிராக திட்டமிட்ட அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க உரிமை உள்ளது என்று கூறி பலமுறை நான்காம் மாடிக்கு தம்மை அழைத்து பல மணி நேர விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனம் ஒன்றில் எமது அமைப்பை பதிவு செய்யுமாறும் பலவிதமான அழுத்தங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதாக யாட்சன் குறிப்பிட்டார்.

சிவில் சமூகத்திற்காக இயங்கிவரும் எம்மைப் போன்ற நிறுவனங்களை இவ்வாறு அச்சுறுத்தி முடக்க முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல என்று அவர் குறிப்பிட்டார். தமது நிறுவனம் மட்டுமன்றி வடக்கு கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாகவே இவ்வாறான அடக்குமுறைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நிதி விபரங்களை அடிக்கடி விசாரித்தல், நிதி எங்கிருந்து கிடைக்கின்றது என்பதனை துருவி துருவி விசாரித்தல், அலுவலகத்தில் திடீர் சோதனைகளை பலமுறை நடத்துதல் என்று பாதுகாப்பு தரப்பு அத்துமீறி செயற்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய யாட்சன், தமது அமைப்பின் மீது குற்றம் எதனையும் சுமத்த முடியாத நிலையில், 4ம் மாடிக்கு மேலதிக விசாரணைகளுக்கென அழைப்பதும் பல மணித்தியாலங்கள் விசாரணை என்று இருக்க சொல்வதும் வழமையான நிகழ்வாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும். இந்த அடக்குமுறைகள் காரணமாக பணிகளை முன்னெடுத்துச் செல்வது சிரமமான காரியமாக இருப்பதாகவும், பணியாற்றுவதற்கு மனநிலை ஒத்துழைக்க மறுத்தல், குடும்ப உறவுகள் பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைந்திருத்தல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாட்சன் கூறினார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவை தவிர பல தூதரகங்களுக்கும், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள் பலவற்றுக்கும் இந்த அடக்குமுறை தொடர்பில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட போதிலும், இது வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையே உள்ளதாக யாட்சன் கவலையுடன் தெரிவித்தார். முறைப்பாடுகள் பலவற்றையும் அடக்குமுறைகளின் விபரங்களையும் பெற்றுக் கொள்ளும் இவ்வாறான அமைப்புகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களையோ, தீர்வுகளையோ முன்வைப்பதில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

எம்மைப் போன்ற சிவில் அமைப்புகள் மீதான உரிமை மீறல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இனியும் காலந்தாழ்த்தாது விசாரித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

– சிவில் சமூக செயற்பாட்டாளர் யாட்சன்

காற்றாலை மின்சாரம் கோபுரங்கள் அமைப்பதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு!

காற்றாலை மின்சாரம் கோபுரங்கள் அமைப்பதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு!

காற்றாலை மின்சாரம் அமைக்கப்பட்டமையினால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் நீ.யூ.பொலிஸ்ரஸ் பச்சேக் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மார்ச் 06ம் திகதி, 2022 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ள மன்னார், பேசாலை, 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் பொலிஸ்ரஸ் பச்சேக், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் மின்சக்தி மற்றும் இயற்கை வலு சக்தி அமைச்சுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் சார்பாக இவர் இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவு தோட்டவெளி தொடக்கம் நடுக்குடா தென்கடற்கரைப் பகுதியில் 32 காற்றாலை மின்சாரம் கோபுரங்கள் அமைக்கப்பட்டதனால், குறித்த கடற்கரைப்பகுதியில் பருவகால மீன்டிபி தொழிலை மேற்கொள்ளும் பிரதேச மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். மீன் பாடும் வெகுவாகக் குறைந்துள்ளதனால் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் குறித்த காற்றாலை மின்சாரம் அமைக்கும் போது இந்த செயற்பாட்டை நிறுத்துமாறும், இதனால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கோரிக்கை விடுத்தும் வலுகட்டாயமாக இவற்றை அமைத்தனர் என்று அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேலும் பல காற்றாலை கோபுரங்களை அமைக்க உள்ளதால் மக்கள் விசனமடைந்து வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என்று பச்சேக் இந்த முறைப்பாட்டில் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

2015ம் ஆண்டு திட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதி முதல் 2021ம் திறப்பு விழா நடைபெற்ற காலப்பகுதி வரையான காலப்பகுதியை மனித உரிமை மீறல் நடைபெற்ற காலப்பகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்கண்ட சாட்சிகளாக பிரதேச மக்களையும், அரச அதிகாரிகளையும் இம்முறைப்பாட்டில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையான இந்த செயற்றிட்டத்தை நிறுத்தும் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும் இந்த கோரிக்கை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் காற்றாலை மின்சாரத்தை அமைக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு பச்சேக் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் அந்த மக்களின் மனித உரிமைகள் மீறும் செயலாகும். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் போது அம்மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் சிந்தித்து செயற்படாமல் இருப்பதும் ஒருவகையில் அந்த மக்களுக்கு செய்யும் மோசமான அநீதியாகும். இதனை உணர்ந்து இம்மக்களுக்காக குரல் கொடுத்துள்ள இந்த ஊடகவியலாளர், இந்த மின்சார திட்டத்தினால் பாதிப்படையும் மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்பில் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

– பொலிஸ்ரஸ் பச்சேக்

 

மோட்டார் சைக்கிளையும், பிணைப்பணத்தையும் மீளத் தாருங்கள்!

மோட்டார் சைக்கிளையும், பிணைப்பணத்தையும் மீளத் தாருங்கள்!

பிணைப்பணத்தையும் மோட்டார் சைக்கிளையும் மீளக்கையளிக்க பணிக்குமாறு ஊடகவியலாளர் சோலைமலை கேதீஸ்வரன் (43) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டினூடாக கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கடற்படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிணைப் பணத்தையும், கைது செய்யப்பட்ட போது கையகப்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீளப் பெறுவதற்கு உதவுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மன்னார், நானாட்டான், பள்ளங்கோட்டை முகவரியைச் சேர்ந்த இவர்.

கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி மன்னார் தாழ்வுப்பாடு பகுதியில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணையின் பின் அனுராதபுரம் புதிய மெகசின், வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் 2008ம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டு 2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது பிணைப் பணம் ஒரு லட்ச ரூபாவும், கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளும் இன்றுவரை திருப்பி தரப்படவில்லை என்று கேதீஸ்வரன் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார்.

பொலிஸ் மற்றும் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்திருக்கின்றார். தனக்குரிய பொருளும், பணமும் இதுவரை மீள கையளிக்கப்படாமை மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக உரியவர்களுக்கு பல முறை அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறினார்.

சந்தேகத்தின் பேரில் கைதாகி தான் இத்தனைக் காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தனது உடமைகளை உரிய வேளை கையளிக்காது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயற்படும் விதம் குறித்து தாம் பெரும் அதிருப்தியுற்றுள்ளதாகவும், இவற்றை உரியவாறு தன்னிடம் மீள ஒப்படைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இனம், அரசியற்கொள்கை மற்றும் மொழி வேறுபாடு ஆகியவற்றின் காரணமாக தனக்கு இந்த அநீதி நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடும் கேதீஸ்வரன், இந்த காரணங்களை முதன்மைப்படுத்தியே தனக்கு எதிராக இந்த மனித உரிமை மீறல் இடம்பெறுவதாகக் கூறினார்.

– ஊடகவியலாளர் சோலைமலை கேதீஸ்வரன்

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கான பிரதான பாதையும் மீறப்படும் அம்மக்களின் மனித உரிமைகளும்!

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கான பிரதான பாதையும் மீறப்படும் அம்மக்களின் மனித உரிமைகளும்!

மன்னார் முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் முறையிட்டுள்ளார்.
இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக மன்னார், மூர் வீதி என்ற முகவரியி;ல் வசிக்கும் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் (34) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை கடந்த மார்ச் 6ம் திகதி 2022 அன்று பதிவு செய்துள்ளார்.

இலங்கை கடற்படைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முசிலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர். நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் மக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதை இன்றுவரை கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ளதால் மக்கள் காட்டுப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். காட்டுப்பாதை என்பதால் மக்கள் பல்வேறு அச்சங்களுக்கு மத்தியில் பாதையைக் கடந்து நாளாந்தம் பயணிக்கின்றனர் என்று அந்த முறைப்பாடு அமைந்துள்ளது.
முள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றம் நடைபெற்ற நாளிலிருந்து இந்த மனித உரிமை மீறல் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பாதுகாப்பான பாதையினூடாக தமது கிராமத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே இவரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றாலும் முற்றுமுழுதாக பாதுகாப்பு தரப்பினரால் அந்த பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த கிராமத்தில் பிரதான பதையை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதனைப் போன்றே பல இடங்களில் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னமும், ஆக்கிரமிப்பும் உள்ளது.

இந்த கிராமத்தில் மக்கள் காட்டுப்பாதையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனர்த்தங்கள் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த காட்டுப்பாதையை பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகளை முகம் கொடுக்க நேரிடும். இருளில் பாதையை பயன்படுத்தும் போது ஆபத்துக்கள் மேலும் அதிகரிக்கக் கூடும். பாதுகாப்புக்காக பிரசன்னமாகியிருக்கும் படைத்தரப்பினர் இங்கு மக்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருப்பது மிகவும் பிரச்சினைக்குரியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தான் ஊடகவியலாளர் லெம்பட் இவ்விடயத்தை அக்கிராமத்தின் மக்கள் சார்பாக பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளார். இந்த முறைப்பாட்டினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு அவர் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளார்.

– ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட்

சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தியதால் தாக்குதலை எதிர்கொண்டேன்!

சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தியதால் தாக்குதலை எதிர்கொண்டேன்!

தமது பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தமை காரணமாக தாக்குதலுக்குள்ளான போதிலும் அடம்பன் பொலிசாரிடம் அது பற்றி முறையிட்டும் இதுவரை அவர்கள் சட்ட நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று மன்னார், பெரியமடு, ஈச்சளவக்கை, முதலாம் வீதியில் வதிவிடத்தைக் கொண்ட ஊடகவியலாளர் அ. மயூகரன் (36) மனித உரிமைகள் ஆணைக்குவிடம் மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

சட்டவிரோதமான செயல்களான போதைப்பொருட் விற்பனை மற்றும் மணல் அகழ்வு செய்வோர் பற்றிய விடயங்களை அம்பலப்படுத்தி செய்தியாக வெளியிட்டதனால் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சில தரப்பினர் திட்டமிட்டு ஊடகவியலாளர் மயூகரன் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பற்றி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். கண்கண்ட சாட்சியாக தனது மனைவியைக் குறிப்பிட்டுள்ள அவர், இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து ஊடகவியலாளர்கள் அவர்களை அம்பலப்படுத்தும் போது அந்த கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பது பொலிசாருக்கு இலகுவான காரியமாக இருக்கும். ஆயினும், பொலிசார் இவிடயத்தில் ஊடகவியலாளருடன் கரம் கோர்த்து செயற்படாமல் அவர்களுக்கு எதிராக இருந்து அமைதி காப்பதானது நிச்சயம் இங்கு பொலிசாhர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர் என்பதனை உறுதிப்பபடுத்துகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.

இது மிகவும் பிரச்சினைக்குரிய விடயாகும் என்று அவர் கூறுகின்றார்.
பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்கள் பக்கமும், சட்டவிரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பக்கமும் நிற்க வேண்டும். அவர்களுக்காக முன்நிற்க வேண்டும். அதுவே நியாயமான செயற்பாடாகும். ஆயினும், இங்கு பொலிசார் இவ்வாறு பக்கச்சார்பாக நடந்துகொள்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

சுயாதீன ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மயூகரன் தனது முறைப்பாட்டில் வலியுறுத்திக் கேட்டுள்ளார். சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தும் போது ஊடகவியலாளர்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதுடன் உயிராபத்துக்களையும் எதிர்கொள்ள Nவுண்டியுள்ளது. இது ஊடகவியலாளர்களின் குடும்ப உறவுகளையும் பாதிக்கும் விடயமாகும்.

மயூகரன் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் விடயமாகும். இதனால் அவர்கள் எந்தவிதமான தங்குதடையும் இன்றி தங்களது சட்;டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் வாய்ப்பு கிட்டும். இது சமூக விரோத செயற்பாடுகளை சமூகத்தில் தூண்டும் செயற்பாடாகவே அமைகின்றது. சமூகத்துக்கு தவறான முன்னுதாரணத்தை வழங்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் கொள்ளாமல் இருப்பது ஏன்? இவ்வாறான செயற்பாடுகள் ஊடகவியலாளர்களை மேலும் ஆபத்தில் மாட்டிவிடும் செயற்பாடுகளே அன்றி வேறு என்ன?

மயூகரன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காததன் ஊடாக மீண்டும் அவரின் சுய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், சம்பவத்தின் சாட்சியாக அவர் தனது மனைவியை குறிப்பிட்டுள்ளதன் ஊடாக அவரின் முழுக் குடும்பமே இந்த சட்டவிரோத கும்பலால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்றே கருதக் கூடியதாக உள்ளது.

– ஊடகவியலாளர் அ.மயூகரன்

மொழிப் பிரச்சினையினால் அநீதிக்குள்ளாகும் அப்பாவி மக்கள்!

மொழிப் பிரச்சினையினால் அநீதிக்குள்ளாகும் அப்பாவி மக்கள்!

கால்நடை மேய்ப்பவர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதில் ஏற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் ஊடகவியலாளர் ஆர்.ஜீவகன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மன்னார், அடம்பன், ஆண்டாங்குளம் என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆர். ஜீவகன் (32) இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த மார்ச் 6ம் திகதி 2022 அன்று முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

வனசீவராகள் திணைக்களத்தின் எல்லைக்குள் கால்நடை மேய்ப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திணைக்களத்தின் எல்லைக்குள் மரம் வெட்டியதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் அந்நபரின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சிறுநாவற்குளம் பகுதியில் 2022ம் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி இடம்பெற்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழி மற்றும் நிர்வாக குறைபாடுகள் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என்று ஜீவகன் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இவ்வாறான சம்பவங்கள் மன்னார் பகுதியில் அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் இவ்வாறான காரியங்களில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 7 ஆண்டுகளாக ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் ஜீவகன், சிற்சில அரச உத்தியோகத்தர்கள் அப்பாவி பொதுமக்களிடம் பழிவாங்கும் உணர்வுடன் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் வருத்தத்திற்குரியது என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டாலும் அவற்றை பகிரங்கமாக எழுத முடியாதுள்ளதாகவும், ஏனெனில் பாதிக்கப்படுபவர்களின் விபரங்கள் அடையாளப்படுத்தப்படுவதனால் அவர்கள் மென்மேலும் அடக்குமறைகளுக்கும், பழிவாங்கல்களுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாக நேரிடும் என்று ஜீவகன் கருத்துத் தெரிவித்தார். மொழிப்பிரச்சினை காரணமாக தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியாமலும் பலர் அல்லலுறுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை பொதுமக்களுக்கு இழைக்கப்படும் இவ்வாறான அநீதிகளை செய்திகளாக வெளியிடும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனார். குறிப்பாக மணல் அகழ்வு, காடழிப்பு பற்றி செய்திகளை வெளியிடும் போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு எதிரான இவ்வாறான அநீதிகளில் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

– ஊடகவியலாளர் ஆர்.ஜீவகன்

மொழிப் பிரச்சினையின் காரணமாக மீறப்படும் மனித உரிமைகள்!

மொழிப் பிரச்சினையின் காரணமாக மீறப்படும் மனித உரிமைகள்!

வேற்று மொழி சார்ந்தவர்களால் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஊடகவியலாளர் ஜோசப் நயன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வனவள திணைக்களம், வன சீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் வேற்று மொழி சார்ந்தவர்கள் என்பதால் தொடர்பாடல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுவதாக மன்னார், சாந்திபுரம், இல 82 என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜோசப் நயன் (27) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கடந்த மார்ச் 6ம் திகதி 2022 அன்று முறைப்பாட்டின் மூலம் இந்த விடயத்தைக் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள அவர், இத்திணைக்களங்களைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகளை உரிமை மீறலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.
2021- 2022 காலப்பகுதியில் இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகவும், மனித உரிமை மீறலுக்கான காரணங்களாக மொழிப் பிரச்சினை, நிர்வாகக் குறைபாடு, மொழிக் கொள்கை என்பனவற்றை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மேலும் மொழி ரீதியிலான உரிமை எல்லா திணைக்களங்களிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்த முறைப்பாட்டினூடாக அவர் முன்வைக்கும் பிரதான கோரிக்கையாகும். பொதுவாக இலங்கையில் தமிழ் மொழி அமுலாக்கப் பிரச்சினை பொதுவான பிரச்சினையாக உள்ள நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு உட்பட்ட பகுதிகளில் சகோதர மொழி அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் காரணமாக இப்பிரச்சினை தீவிரமாக உணரப்படுகின்றது.

அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் சகோதர மொழிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் தமிழ் மொழியை மட்டும் அறிந்துவைத்துள்ள மக்களுக்கு தத்தமது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடினமாக இருப்பதுடன் இதன் காரணமாக மனித உரிமைகளும் மீறப்படும் சம்பவங்களும் பற்பல இடம்பெற்றுள்ளனர். இந்நிலையிலேயே சிங்கள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியை அறிந்திருக்க வேண்டும் என்றும் அரசு இதற்கு தீர்வாக நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தவகையில் பார்க்கும் போது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிப்பதனூடாக பல்வேறு நன்மைகள் ஏற்படுவதுடன், அரசின் திட்டங்கள் மக்களை பாகுபாடு இன்றி சென்றடையவும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியதாகவும் இருக்கும் எனலாம்.
இந்தவகையில் இந்த விடயத்தையே ஜோசப் நயன் முன்வைத்து முறைப்பாட்டை அளித்திருக்கின்றார்.

– ஊடகவியலாளர் ஜோசப் நயன்

 

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்!

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ஆவண செய்யுமாறும் ஊடகவியலாளர் கே.பிரியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டினூடாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மன்னார், பெரிய மடுவைச் சேர்ந்த ஊடகவியலாளரான கே.பிரியா (42) இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவும், சமூக சேவைகள் அமைச்சுக்கு எதிராகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மார்ச் 6, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

மக்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்டக் கூடிய வளமான குளப்பகுதியும், மேட்டு நிலக்காணியும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் ஏனையோர் போன்று தத்தமது தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அணுகு வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டில் அவர் விசேடமாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

நீண்ட காலமாக இவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், மனித உரிமைகள் மீறல் நடைபெற்ற இடமாக சன்னார், ஈச்சளவக்கை மன்னார் மாவட்டம் போன்ற பகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குரிய ஆவணங்கள் மக்களிடமும் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பான முறைப்பாட்டின் பின்னர் சிறிய குளப்பகுதி மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் அவை முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மாற்றுத் திறனாளிகளின் பொருளாதாரத் தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனையோர் போன்று இவர்களும் இயங்க வழியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போருக்கு பின்னராக வாழ்வியலில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை வடக்கு கிழக்கில் மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. போர் தந்த வலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முக்கியமானதொரு பிரிவினராக உள்ள நிலையில் அவர்கள் தொடர்பான சிந்தனைகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
சமூகத்தின் நலன்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பினை உடைய சமூக சேவைகள் அமைச்சும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத் தரப்பும் இவ்விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதனை அனுமதிக்க முடியாது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதும், காணிகளை குளங்களை விடுவிப்பதும் இவர்கள் இருதரப்பினருக்கும் உரிய பொறுப்பு என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

– ஊடகவியலாளர் கே.பிரியா

பொதுமக்களுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள்!

 

பொதுமக்களுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள்!

மன்னார் அகத்தி முறிப்பு, அலக்கட்டு என்ற பிரதேசத்தில் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பாத நிலையில், அது தான் தொடர்பான வழக்கும் நிறைவு பெறாத நிலையில் இது தொடர்பாக மன்னார், முசலி, பொற்கேர்ணி, அகத்தி முறிப்பு என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எம்.றிசான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாக முறைப்பாடு ஒன்றை கடந்த மார்ச் 6ம் திகதி 2022ம் ஆண்டு பதிவு செய்துள்ளார்.

சிலாவத்துறை, முசலி, பிரதேச செயலகத்திற்கு எதிராகவும், பிரதேச செயலாளர் எம்.ராஜீவ், பிரதேச சபை தவிசாளர் அலிகத் சுபிஹான், தலைவரும் செயலாளருமான மஸ்ஜிதுல் ஹைராத் ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் குறைபாடுகளே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று இந்த முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகத்திமுறிப்பு, அலக்கட்டு எனும் பிரதேசத்தில் மக்களுக்காக காணி கச்சேரி முசலி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு 2013ம் ஆண்டு டுனுழு பேர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பிரதேசத்தில் வசிக்கின்ற சிலர் தலையீடு செய்து பொதுமக்களுக்கு அக்காணிகளை வழங்க மறுக்கின்றனர். இதன் அடிப்படையில் அரசின் சார்பாக பிரதேச செயலாளரும் காணிகளை வழங்க மறுத்து வருகின்றார். மேலும், 2020-11-27 அன்று பட வரைபின்படி பொதுமக்கள் காணிகளைத் துப்புரவு வேலைத்திட்டத்தை மேற்கொண்ட போது பள்ளிவாசல் சார்ந்த நபர்கள் அந்நத மக்களை வாளால் வெட்டியும், பொல்லால் தாக்கியும் உள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக றிசான் தனது முறைப்பாட்டில் விபரித்துள்ளார். மனித உரிமை மீறல் நடைபெற்ற தினமாக 2020-11-27 அன்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாக பொதுமக்கள் உள்ளனர் என்றும், ஆவண சாட்சியங்களாக பொலிஸ் முறைப்பாடு, நிதிமன்ற வழக்கு, கடிதங்கள் மற்றும் விடயம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பில் தற்போதைய நிலவரம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கான காணிகள் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், டுனுழு காணிகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஆவண செய்யப்பட வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டினூடாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முற்றிலும் பொதுநலன் சார்ந்து ஊடகவியலாளர் றிசான் இப்பிரச்சினையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

– ஊடகவியலாளர் ஏ.எம்.றிசான்

 

 

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படலும் ஊடக செயற்பாட்டிற்கு இடையூறு செய்தலும்!

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படலும் ஊடக செயற்பாட்டிற்கு இடையூறு செய்தலும்!

செய்தி சேகரிக்கும் பணியின் போது துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக ஊடகவியலாளர் சுலக்ஷன் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

தொண்டைமனாறு, பிரதான வீதி என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜெ.சுலக்ஷன் (29) பொலிஸ் அதிகாரியினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கைது செய்ய முற்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி இச்சம்பவம் இ;டம்பெற்றுள்ளது. செய்தி சேகரிக்க சென்ற வேளை பருத்தித்துறை நீதிமன்ற வாயிலில் வைத்து முரண்பட்ட பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தன்னை கைது செய்ய முற்பட்டதாக முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த சம்பவத்திற்கு சாட்சியாக சி.சி.டி. காணொளி பதிவுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 2021ம் திகதி டிசம்பர் 3ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் தனக்கு பாதுகாப்பையும், இச்சம்பவத்திற்கான நீதியையும் பெற்றுத் தருமாறும் அவர் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

செய்தி சேகரிக்க செல்லும் பணிகளின் போது ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் பாதுகாப்பு தரப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலர் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். இது ஒரு மனித மீறலாக உள்ளதுடன் எந்தவிதமான நியாயமான காரணங்களும் இன்றி முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படுதல், தாக்கப்படுதல் அல்லது உயிராபத்து ஏற்படும் என்று கடுமையாக மிரட்டப்படுதல் ஆகிய அச்சுறுத்தல்கள் பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் பல பதிவாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அவர்களின் பணிகளை முடங்க செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அன்றி வேறில்லை.

ஊடகவியலாளர்களின் முதன்மை பணி மக்களுக்கு சரியான முறையில் செய்திகளை கொண்டு போய் சேர்ப்பதே. இதற்காக அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் மிக மிக அதிகம். அதேவேளை மக்களுக்காக இந்த கடமையை செய்யும் ஊடகவியலாளர்களைத் தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரமும், உரிமையும் இல்லை எனலாம். போருக்கு பின்னர் வடக்கு பகுதியில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் ஒப்பீட்டளவில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களையும் மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் சுலக்ஷன் போன்ற ஊடகவியலாளர்கள் ஊடகப் பணியை முழுமையாக ஆற்ற முடியாத துரதிருஷ்ட நிலையே உள்ளது.

இவ்வாறான சூழலில் சுய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளதுடன், இந்த சம்பவத்திற்கான நீதியை நிலைநாட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பதனை உறுதிப்படுத்தும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே சுலக்ஷன் உட்பட ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகவியலாளர்களினதும் முதன்மை கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

– ஊடகவியலாளர் ஜெ. சுலக்ஷன்

முன்னாள் போராளி என்பதால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றேன்!

முன்னாள் போராளி என்பதால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றேன்!

முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக புலனாய்வுப் பிரிவினாரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக ஊடகவியலாளர் சி. யோகேஸ்வரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார். இதனால் தனது மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சித்தங்கேணி, வட்டு கிழக்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் சி.யோகேஸ்வரன் (42) ‘நான் ஒரு முன்னாள் போராளி. என்னிடம் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்ந்து தகவல் கேட்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்று தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பான ஆவண சாட்சியங்கள் முகப்புத்தக பக்கத்தில் பதிவுகளாக உள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களினால் தனது சுய பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் தனக்கும் தன் குடும்ப உறவுகளுக்கும் பாதுகாப்பு தருமாறும் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ள நிலையில் தொடர்;ச்சியாக புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கண்காணிக்கப்படுவதும், தகவல்களை தருமாறு அவர்களை தொடர்ச்சியாக வற்புறுத்தப்படுவதும் பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் யோகேஸ்வரன் போன்ற ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் புலனாய்வுப் பிரிவினரால் குறி வைக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இதனால் அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் தரப்பினராக இவர்கள் உள்ளனர். முன்னாள் போராளி என்பதால் விசாரணைகள் மற்றும் தகவல்களைப் பெறுதல் போன்ற விடயங்களைக் காரணம் காட்டி புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் அடிக்கடி தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் போராளி என்ற காரணத்திற்காக இவரது ஊடகக் கடமைகளை செய்ய முடியாத ஓர் அடக்குமுறையான நிலைமையை இவர் எதிர்கொள்கின்றார். அவருடன் தொடர்பில் இருப்பவர்களும், அவரை பல்வேறு பணிகளுக்காக அணுகுபவர்களும் புலனாய்வுப் பிரிவினரால் குறி வைக்கப்படும் ஆபத்தான நிலையும் இங்கு காணப்படுகின்றது.

போருக்கு பின்னரான இன்றைய சூழலில் முன்னாள் போராளிகள் பலர் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். எனினும் இவர்களை இன்னும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் வேறுப்படுத்தி வைத்து கண்காணித்துக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளை பாதுகாப்பு என்ற காரணத்தை முதன்மைப்படுத்தி புலனாய்வுப் பிரிவினரும், பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர். இது அப்பட்டமானதொரு மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் சம்பவங்கள் நிகழும் போதும் விசாரணைக்கு என்று இவர்கள் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் செல்லப்படுவதும், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகள் கடந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிய தொலைபேசிகளினூடாகவும், நேரடியாகவும் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை அடிக்கடி அணுகுவதும் இவர்கள் மத்தியில் அச்சுறுத்தலான சூழ்நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த அடிப்படையில் ஊடகவியலாளர் யோகேஸ்வரன் போன்ற முன்னாள் போராளிகள் கடந்த காலத்தின் செயற்பாடுகளுக்காக இவ்வாறு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதும், தொந்தரவுக்குள்ளாக்கப்படுவதும் மிக மோசமான நிலைமையாகும். இந்த அழுத்தங்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரால் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அடிப்படை மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் இழந்தவர்களாகவே ஊடகப் பணிகளை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன உளைச்சலுக்கு மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

– ஊடகவியலாளர் சி. யோகேஸ்வரன்

பிரபாகரனின் கல்லறையும் ஊடக அடக்குமுறையும்!

பிரபாகரனின் கல்லறையும் ஊடக அடக்குமுறையும்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் கல்லறைக்கு பின்னால் உள்ள பகுதியில் தனது வசிப்பிடம் அமைந்திருக்கும் ஒரே காரணத்திற்காக மிக மோசமான அடக்குமுறைகளை பாதுகாப்பு தரப்பினரால் எதிர்கொள்வதாக வல்வெட்டித்துறை, சிவன் கோவிலடி, ஆலடி ஒழுங்கையில் வசிக்கும் ஊடகவியலாளரான ஆர். மகிந்தன் (33) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இராணுவத்தினரும் தனக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டும் அவர், ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினமன்று தாம் பெரும் துன்புறுத்தலுக்குள்ளாவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் தன்னை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் பாதுகாப்பு தரப்பினர் தனது ஊடகக் கடமைகளுக்கு இடையூறாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மிக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு உதாரணமாக மாதகல் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை புகைப்படம் எடுக்க சென்ற Nவுளை இராணுவத்தினரால் மோசமாக மிரட்டப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

‘எனது வசிப்பிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்லறைக்கு பின்னால் பகுதியில் அமைந்துள்ளதனால் ஒவ்வொரு மாவீரர் நினைவு தினம் வரும் பொழுதும் எம்மை சோதனை செய்கின்றார்கள். எமது உடமைகள், தொலைபேசிகளை பரிசோதிக்கின்றார்கள். அவ்வேளை எமது உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரவே அஞ்சுகின்றனர். நாம் வசிக்கும் வீட்டுக்கு முன்புறம் பற்றைக் காடுகள் படர்ந்துள்ளது. அவற்றை சுத்தம் செய்ய முடியாதுள்ளது. அவற்றை சுத்தம் செய்தால் எங்களை கடுமையாக மிரட்டுகின்றார்கள்’ என்று அந்த முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு மாதமும் நவம்பர் 26ம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இந்த தொந்தரவுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன என்று அவர் துயருடன் குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டை செய்வதனூடாக தனது கைத் தொலைபேசி பறிமுதல் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், அவரது இல்லத்துக்கு முன் உள்ள பற்றைக் காடுகள் நிரம்பிய காணியை துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டினூடாக ஊடகவியலாளர் மகிந்தன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபாகரனின் கல்லறைக்கு அருகாமை பகுதியில் வசிப்பதனை ஒரே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு இந்த ஊடகவியலாளரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் உட்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பாதுகாப்பு தரப்பு வடக்கில் எவ்வாறு நுணுக்கமாக ஊடகவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்னெடுக்கின்றது என்பதற்கு ஊடகவியலாளர் மகிந்த எதிர்கொள்கின்ற இந்த அடக்குமுறை மற்றுமொரு சிறந்த உதாரணமாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்படுவது அடிப்படை மனித உரிமைகளை செயல்களில் ஒன்றாகும்.

ஒர்; ஊடகவியலாளருக்கு கையடக்க தொலைபேசி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை விபரிக்க தேவையில்லை. அவர் துறை சார்ந்த பல்வேறு தொடர்புகள், ஆதாரங்கள், தகவல்மூலங்கள் அதில் இருக்கக் கூடும். அதனை பறிமுதல் செய்து ஆராய்வது தொடர்ச்சியாக நடைபெறுவது என்பது அவரின் ஊடக செயற்பாட்டினை தடுக்கும் செயலாகவும் உள்ளது.

ஊடகப் பணியை சுதந்திரமாக அச்சமின்றி முன்னெடுக்க முடியாத ஓர் இக்கட்டான நிலையும் இதனால் அவருக்கு ஏற்படுகின்றது. நீதிமன்ற முன் அனுமதியோ, உரிமையாளரின் அனுமதியோ இன்றி கையகப்படுத்தப்படும் தொலைபேசியில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்கள் பறிமுதல் செய்யப்படுபவர்களால் களவாடப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது என்பதற்கு எந்தவிதமான உறுதிப்பாடும் இங்கு இல்லை.

– ஊடகவியலாளர் ஆர்.மகிந்தன்

கடமைக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸ் அதிகாரிகள்!

கடமைக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸ் அதிகாரிகள்!

யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் (Pஊ 92646) ஒருவரினால் தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணன் (32) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

உரும்பிராய், உரும்பிராய் கிழக்கு, ஞானவைரவர் வீதி முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட சொர்ணலிங்கம் வர்ணன், இந்த சம்பவம் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் கடந்த பெப்ரவரி 21ம் திகதி, 2022 அன்ற நடைபெற்றதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த வேளை பொலிஸ் உத்தியோகத்தரால் இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், ஆளுநர் செயலக அதிகாரிகளின் உத்தரவின்றி ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் முறையிட்டிருக்கின்றார்.

இந்த மனித உரிமை மீறலுக்கு நிர்வாகக் குறைபாடு என்று குறிப்பிடும் அவர், சம்பவம் தொடர்பாக கண்கண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியங்களாக தினக்குரல் பத்திரிகையையும், (துயககயெ ணுழநெ) என்ற சமூக ஊடகத்தையும் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களுடன் அலுவலகத்திற்குள் பிரவேகிக் முற்பட்ட வேளையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரியினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. அலுவகத்திற்குள் பிரவேசிக்க இடமளிக்காவிடின் இப்போராட்டத்திற்கு என்ன தீர்வு தருகின்றீர்கள் என்பதனை கேட்டறிந்து வருமாறு ஊடகவியலாளர்கள் அந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கேட்டிருந்தனர். இந்நிலையிலேயே அந்த பொலிஸ் உத்தியோகத்தர் இடையூறு செய்யும் வகையில் முற்று முழுதாக ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆளுநர் உதவிச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, தாம் அவ்வாறு பணிப்புரை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் முறைப்பாட்டில் ஊடகவியலாளர் வர்ணன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் வர்ணன் இச்சம்பவம் தொடர்பாக முறையிடக் காரணம் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளாகும். அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை செய்வதற்கு அனுமதி அளித்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த இதர அதிகாரிகளும் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களாக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போருக்கு பின்னரான சூழலில் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னம் காரணமாக ஊடக செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத இக்கட்டான நெருக்கடி மிக்க சூழலே அங்கு காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் அவரால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு இச்சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
பாதுகாப்பு தரப்பினர் சகோதர மொழி பேசுபவர்களாக இருந்தாலும், தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இந்த பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் என்பது தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கைது சட்டவிரோதமானது என மீனவர்கள் போராட்டம் நடத்திய பொழுது அங்கு செய்தி சேகரிக்க சென்ற வேளை ஊடகவியலாளரான இராசரத்தினம் தர்ஷன் (25) தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை காணொளி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் முறையிட்டிருக்கின்றார்.
சுழிபுரம், சுழிபுரம் மேற்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கண்டகண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியாக படம் ஒன்றையும் முறைப்பாட்டில் பதிவு செய்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியரிடம் அறிவிக்கப்பட்டதுள்ளதாகவும், இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவத்திற்கான காரணமாக நிர்வாகக் காரணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் இனிவரும் காலங்களில் காணொளி எடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதும், காணொளி செய்வதும் பொதுவான விடயமாக உள்ளது. இது யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளதுடன், இந்த செயற்பாடுகள் எதிர்காலங்களில் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாக மாறக் கூடும் என்று ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், மக்கள் பேரணிகளின் போது படைத்தரப்பும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் நடைபெற்றுக கொண்டிருக்கும் விடயமாக உள்ளது. இது தங்கள் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயல் என்றும், முற்றிலும் மனித உரிமைகள் மீறப்படும் செயல் என்றும் ஊடகவியலாளர்கள் தரப்பு கருதுகின்றது. ஏனெனில் இவ்வாறு புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுத்தல் என்பனவை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் முன் அனுமதி கோரப்படுவதில்லை. ஒருவரின் அனுமதியும் விருப்பமும் இன்றி புகைப்படம் எடுக்கவோ காணொளி பதிவுகளை மேற்கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் அத்துமீறி செயற்படுவது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளையும் முடக்கவும் அன்றி வேறெதுவும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இந்த காணொளிகள் ஏன் எடுக்கப்படுகின்றன? புகைப்படங்கள் எடுப்பதற்கான காரணம் என்ன? என்று விளக்கமளிக்கும் கடப்பாடும் பாதுகாப்பு தரப்பினருக்கு இல்லை. பொதுவாக பாதுகாப்பு காரணம் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திலும் அவர்களின் தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்ற மனோபாவத்துடன் செயற்படும் பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த யாழ் ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

ஊடகவியலாளர் இராசரத்தினம் தர்ஷன்.

ஊடகப் பணியை தடுத்து நிறுத்திய அரச நிறுவனமும் அதிகாரியும்!

சுயாதீன ஊடகவியலாளர் தங்கராசா காண்டீபன்

யாழ்ப்பாணம், குடத்தனை, அம்பன் என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தங்கராசா காண்டீபன் (42) செய்தி சேகரிக்கச் சென்ற வேளை எதிர்நோக்கிய மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். கடந்த மார்ச் 07ம் திகதி இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.
மீன்பிடி அமைச்சுக்கு எதிராகவும், உரிமை மீறலில் சம்பந்தப்பட்ட அதிகாரியாக கே.என்.தயாநந்தாவுக்கு எதிராகவும் அவர் முறையிட்டிருக்கின்றார்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற மீனவர்கள் போராட்டத்தின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வேளை, செய்தி சேகரிக்க விடாமல் அவரை தடுத்தமை, கடுமையாக அச்சுறுத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கின்றார். இதனால் தனக்கு பாதுகாப்பு தருமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் எதனையும் குறிப்பிடாத நிலையில், இந்த முறைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் உள்ளதாகவும், ஆயினும் தற்போது நிலவும் ஊடக அடக்குமுறைக்கு மத்தியில் தனது சுய பாதுகாப்பு தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளதாகவும் காண்டீபன் தெரிவித்தார்.

சுயாதீன ஊடகவியலாளராகக் கடமையாற்றும் இவர், இச்சம்பவம் தொடர்பில் தமது உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்யவில்லை என்று தெரிய வருகின்றது. முறைப்பாடுகள் அளித்தாலும் எந்தவிதமான பலனும் ஏற்படாது என்று தான் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் இந்த அரச அதிகாரிகளுடனேயே ஊடகப் பணியை ஆற்ற வேண்டியுள்ளதனால் தனது பாதுகாப்பு பற்றி அச்சமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் செய்திகளை சேகரித்து வெளிப்படுத்தும் செயற்பாட்டின் போது தாம் நன்கு அடையாளப்படுத்தப்படுவதனால் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் தமக்கு எப்பொழுதும் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் ஊடகப் பணிகளை செய்யும் போது அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரை தன்னை நன்கு அறிந்துவைத்துள்ளனர் என்றும், இதனால் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வாய்ப்பும் தனக்கு அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனாலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

அரச உத்தியோகத்தர்களினால் பகையாளிகளாகப் பார்க்கப்படும் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள்!

அரச உத்தியோகத்தர்களினால் பகையாளிகளாகப் பார்க்கப்படும்
தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள்!

தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகளினால் பகையாளிகளாகக் கருதப்படுகின்றனர். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி கோப்பாய் பிரதேச செயலகத்திடம் தகவல்களைப் பெற முற்பட்ட போது பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், இதன்போது அரச உத்தியோகத்தர்களினால் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம், கோப்பாய், கோப்பாய் மத்தி என்ற முகவரியில் வசிக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளரான குமாரசுவாமி செல்வக்குமார் (48) கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சுபாஷினி மதியழகன், கோப்பாய் சமுர்த்தி உத்தியோகத்தர் அன்ரனி ஆகியோருக்கு எதிராக அவர் இந்த முறைப்பாடுகளை செய்துள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல் அறிய முற்பட்டபோது பிரச்சினை ஏற்பட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் அலுவலக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து மிரட்டியதாகவும், முகநூலில் தவறான விடயங்களை பதிவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள செல்வக்குமார், அந்த குறிப்பிட்ட அலுவலக உதவியாளர் மனைவியையும் மிரட்டியுள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் போது தன்னை அவர் பல தடவைகள் மிரட்டியதாகவும் முறைப்பாட்டில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கண்கண்ட சாட்சி ஒன்றையும், முகப்புத்தகப் பதிவுகளை ஆவண சாட்சியமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி அரச உத்தியோகத்தர்களிடம் விபரம் கோரும் போது அவர்கள் ஊடகவியலாளர்களை எதிரிகளாகக் கருதி பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அவர் குறிப்பிட்டார். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகளினால் பகையாளிகளாகப் பார்க்கப்பட்டு பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் அரச அதிகாரிகளிடம் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் போது அவர்களின் அலுவலக உதவியாளர்கள் அவற்றை அறிந்துகொண்டு பல்வேறு அடக்குமுறைகளையும் துன்புறுத்தல்களையும் மேற்கொள்கின்றனர் என்று செல்வக்குமார் தெரிவித்தார். இதன் அடிப்படையிலேயே கோப்பாய் பிரதேச செயலகத்தின் அலுவலக உதவியாளர் தமக்கு எதிராக பல்வேறு மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரச அலுவலகங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை சமூகத்திற்கு வெளிச்சம் இட்டு காட்டிய ஊடகவியலாளர்களுள் செல்வக்குமார் முக்கிய இடத்தினை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி கண்டறிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவுகளையும் மேற்கொண்டு வந்திருந்தார். எனினும் அந்த முகப்புத்தகக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும், தன்னால் அந்த முகப்புத்தகப் பக்கத்தை முன்பு போல் இயக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில்; தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி விடயங்களை வெளிக்கொணர்வது அரச உத்தியோகத்தர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் தலையிடியாக உள்ளதனால், அதில் ஈடுபாடு காட்டும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் குறி வைக்கப்படுகின்றனர். தகவல் அறியும் சட்டத்தைப பயன்படுத்தி எழுதப்படும் ஒவ்வொரு செய்தியின் முடிவிலும் தான் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது வழமையான விடயம் என்று செல்வக்குமார் தெரிவித்தார். அந்த வரிசையில் கோப்பாய் சம்பவம் மிக அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்று அவர் மேலும் கூறினார்.

அரசியற் பின்னணியில் திட்டமிடப்படும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பழிவாங்கல்கள்!

அரசியற் பின்னணியில் திட்டமிடப்படும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பழிவாங்கல்கள்!

11 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஓர் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக கொக்குவில், கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதி, 2ம் ஒழுங்கை, இலக்கம் 15 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளரான த. வினோஜித் (36) கடந்த மார்ச் 7ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

கண் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு சிகிச்சைக்காக பணம் சேகரித்து கொடுத்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியை வெளியிட்ட வினோஜித், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதுடன், உரிமை மீறலில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளாக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரை அவர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாட்டில் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த சம்பவம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் தமக்கு நியாயம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். கடந்த ஜனவரி 16ம் திகதி இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் இது முற்றிலும் மனித உரிமை மீறல் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

மகளுக்கு மருத்துவ உதவிக்காக பணம் சேகரிப்பு தருமாறு ஒரு நபரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அந்த செய்தியை பிரசுரிக்க உதவியதன் பேரில், இந்த நிதிக்குற்றச்சாட்டுக்கள் எந்தவிதமான ஆதரமும் இன்றி தம்மீது முன்வைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட வினோஜித், சம்பவம் நடைபெற்று 11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சம்பவத்தின் அடிப்படையில் மீண்டும் அந் நபர் அவரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இவ்விவகாரத்தை பொலிசாhர் கையில் எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கு இலக்கம் அனைத்தும் அவருக்கே சொந்தமாக இருக்கும் நிலையில் அந்த வங்கிக் கணக்கிலிருந்து எவ்வாறு என்னால் நிதி மோசடி செய்ய முடியும் என்று வினவிய வினோஜித், தனது கௌரவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் ஊர்மக்கள் மத்தியில் அவதூறை ஏற்படுத்தும் வகையிலும் பொலிசார் திட்டமிட்டு செயற்படுவதாகவும் கூறுகின்றார். இந்த திட்டமிட்ட பழிவாங்கலின் பின்னணியில் அரசியல்வாதி ஒருவரின் தலையீடும் இருப்பதாகக் குறிப்பிடும் வினோஜித், நிதி உதவிக்கான செய்தியை பிரசுரிக்க உதவிய தனக்கும் தன் நண்பரான மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகளில் இந்த குறிப்பிட்ட அரசியல்வாதியின் செயற்பாடும் உள்ளடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

ஊடகவியலாளர்களை எதிரியாகக் கருதும் இந்த அரசியல்வாதி இந்த சதித்திட்டத்தினை அரங்கேற்றுவதனூடாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுப்பதனூடாகவும் ஒட்டுமொத்தமாக யாழ் ஊடகத்துறையை முடக்கி விட முயற்சி செய்கின்றார் என்று குறிப்பிடும் அவர், இதற்கு பாதுகாப்பு தரப்பும் உடந்தையாக இருப்பதாகவும் கூறினார்.

 

நிதி மோசடி தொடர்பான பழிவாங்கலில் மீறப்படும் மனித உரிமைகள்!

நிதி மோசடி தொடர்பான பழிவாங்கலில் மீறப்படும் மனித உரிமைகள்!

 

2011ம் ஆண்டு வங்கி ஊடாக முன்னெடுக்கப்பட்ட உதவித்திட்டம் தொடர்பில் சுமார் பத்து வருடங்களின் பின்பு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து தன்னை கைது செய்ய முயற்சி எடுக்கப்படுவதாக யாழ் உடுப்பிட்டி, 15ம் கட்டை, உமா பவனத்தைச் சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் இரத்தினம் தயாபரன் (50) கடந்த மார்ச் 7ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இலங்கை காவல்துறைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளதுடன், குறிப்பாக யாழ் மாவட்ட பிரதி காவல்துறை அத்தியட்சகருக்கு எதிராக இந்த மனித உரிமை மீறல் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

முறைப்பாடு தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 2021ம் ஆண்டு முற்பகுதியில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இரத்தினம் தயாபாரனிடமும், சக ஊடகவியலாளரான த. வினோஜித் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 ஜனவரி மாதம் அவரை கைது செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் மல்லாமகம் நீதிமன்றில் கைதுக்கு எதிராக முன்பிணை பெறப்பட்டுள்ளதுடன் கடவுச்சீட்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இவர் ஐந்து இலட்சம் ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த 11 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஓர் சம்பவத்தை காரணமாக வைத்து 2022, ஜனவரி 16ம் திகதி மீண்டும் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டமையினால் தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இந்த மனித உரிமை மீறலுக்கான காரணம் அரசியற் கொள்கை என்று இரத்தினம் தயாபாரன் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக கண்கண்ட சாட்சிகளாக மூவரை பெயர் குறிப்பிட்டுள்ள அவர், ஆவண சாட்சியங்களாக நீதிமன்ற தடை, வாக்குமூலம், முறைப்பாடுகளையும் அவர் குறிப்பிடுகின்றார்.

 

2000மாம் ஆண்டிலிருந்து ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் தயாபரன் இது திட்டமிடப்பட்டதொரு சதி என்று குறிப்பிடுகின்றார். நிதிக்குற்றம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதிமுறைகள் உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் பொலிசார் கையிலெடுத்திருப்பதானது தன்னையும் ஒட்டுமொத்தமாக ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல் என்று குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் பின்னணி பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட தயாபரன் கூறியதாவது, 2011ம் ஆண்டு தனது மகளுக்கு கண்ணில் சத்திரசிகிச்சை செய்வதற்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல விமான டிக்கட்டுக்கான செலவாக 37 ஆயிரம் ரூபா தேவை என்று உதவி கேட்டு வந்த வன்னியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஊடகங்களில் அச்செய்தியை வெளியிட்டு உதவியதனூடாக 75 லட்சம் பண உதவி அவருக்கு கிட்டியது. எனினும் இந்த உதவித்தொகையைப் பெற்றுக்கொண்ட அந்நபர் அந்த உதவித்தொகையை தவறான வழியில் பயன்படுத்துகின்றார் என்று அவரது மனைவி செய்த முறைப்பாட்டை அடுத்து ஊடகப் பிரதிநிதிகள் சுமார் 15 லட்சம் ரூபாவை வறுமையில் உள்ள பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் அந்த தொகையை பகிர்ந்தளித்தார். இந்த நிகழ்வை ஊடகங்களும் செய்திகளாகப் பிரிசுரித்திருந்தன. இந்நிலையில் கடந்த 2016- 2017ம் ஆண்டு மீண்டும் தனது பிள்ளைக்கு உதவி தொகை மீண்டும் தேவை என்றும் அதனை ஊடகங்களில் வெளியிட்டு தருமாறும் அவர் கேட்ட பொழுது அவரின் மோசடியான செயற்பாடுகளை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த ஊடகங்கள் அவற்றை பிரசுரிக்க மறுத்தன. இதனால் ஆத்திரமுற்ற அவர் பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும், ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் செயற்பட ஆரம்பித்தார்.

 

தன்னை இவ்வாறு முடக்குவதனூடாக யாழ் ஊடக நிலையத்தினையும், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்த முடியும் என்று கருதப்படுவதாக குறிப்பிடும் தயாபரன், பாதுகாப்பு தரப்பும் யாழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்த இவ்விடயத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். இது முற்று முழுதாக மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு தரப்பின் ஆதரவின்றி இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழ் வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட தவறவில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமை ஊடக சுதந்திர மீறலாகும்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமை ஊடக சுதந்திர மீறலாகும்

மாதாந்த கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமை ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் தொழில் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமையை மீறும் செயலாகும் என கண்டி மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருவதுடன், அதன் இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார மற்றும் ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் செயற்படுகின்றனர். கண்டி மாவட்ட பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வர்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும். பொது நிதியை அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தல், அதன் முன்னேற்றம், மோசடி, ஊழல் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் இந்த சந்திப்பு, ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கான முக்கிய ஆதாரமாக அமைவதால் அதனை மேற்பார்வை செய்வது வெகுசன ஊடகங்களின் செயற்பணியாக கருதப்படுகின்றது. ஆயினும் தற்போது இந்த சந்திப்பு தற்போது பத்திரிகையாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவப்பட்ட போது அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறித்த கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதனால் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.

இந்தப் பின்னணியில் குழுக் கூட்டத்தின் இறுதியில் அரசியல்வாதிகள் தமக்கு தேவையான சில கருத்துக்களை ஊடகவியலாளர்களுக்கு வழ்குவதுடன் அவை ஒருபோதும் மக்களுக்கு தேவையான விடயங்கள் அல்ல.

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்களின் ஊடக பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் கண்டி மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடகவியலாளர்கள், வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுமக்களுக்கு செய்திகளை கொண்டு செல்பவர்கள் அல்ல என்பதோடு, மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சேவை செய்பவர்கள் ஆவர். எனவே உள்நோக்கத்துடன் பொதுமக்களுக்கு தகவல்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளமை இதனுடாக தெளிவாகின்றது.

மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்களே தேர்ந்தெடுக்கின்றனர். அரச ஊழியர்களுக்கான செலவு பொது நிதியின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. குறிப்பாக ஒப்பந்தங்களை வழங்கும் நடவடிக்கைகளின் போது இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவையனைத்தையும் தடை செய்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையே இதனூடாக பறிக்கப்பட்டுள்ளது.

 

கல்லராவ முகத்துவாரத்தை மூடுதல் அல்லது பெண் கடலை மலடாக்குதல்.

கல்லராவ திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மீன் வளங்கள் நிறைந்த மீனவக் கிராமமாகும். கல்லராவவின் ஊடாகவே யாங் ஆறு கடலுடன் சேருகின்றது. யாங் ஆற்றின் காரணத்தால் கல்லராவ கடலில் வளமான மீன் விளைச்சல் கிடைக்கின்றதென்பது மீனவர்களின் நம்பிக்கையாகும். கல்லராவ கடல் மீனவர்களிடையே பெண் கடல் எனும் பெயரால் பிரசித்தி பெற்றது. ஆழ்கடல் மீன்கள் தமது இனப்பெருக்கத்துக்காக கல்லராவ முகத்துவாரத்துக்கு வருவதே அதற்கான காரணமாகும்.

கல்லராவ சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஆழ்கடல் கொந்தளிக்கும் காலங்களில் யாங் ஆறு கடலுடன் கலக்கும் கல்லராவ களப்புவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இதன் காரணமாக கல்லராவ மீனவர்கள் யாரிடமும் கையெந்தாத மீனவர்கள் எனப் பெயர் பெற்றனர்.

எனினும் 2011 ஆம் ஆண்டு இந்தக் களப்பின் முகத்துவாரத்துக்கு அருகில் காணியை விலைக்கு வாங்கிய குறித்த ஒரு நிறுவனம் இந்த இயற்கையாக அமைந்த முகத்துவாரத்தை மணல் மூட்டைகளை இட்டு அடைத்து யாங் ஆறு பயணிக்கும் வழியை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதற்காக கல்லராவ கிராமவாசிகளை நாளாந்த கூலி வேலையில் அமர்த்தியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சென்டினல் ரியலட் எனும் இந்தக் கம்பனி திரு மிலிந்த மொரகொடவுக்குச் சொந்தமான ஹோட்டல் கம்பனியாவதாக கல்லராவ கிராமவாசிகள் கூறுகின்றனர்.

தற்போது கல்லராவ முகத்துவாரப் பகுதி முதலில் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் கடலுடன் இணைகிறது. அத்துடன் முன்னையவாறு முகத்துவாரம் கடலுக்கு நேராக அமையாததால் முறையானவாறு ஆற்றின் நீரோட்டம் ஓடிச் செல்வதில்லை. இக் காரணத்தால் கடலிலிருந்து முட்டை இடுவதற்கு களப்பை நோக்கி வரும் மீன்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையால் களப்பில் மீன்கள் பெருகும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடல் கொந்தளிப்புக் காலங்களில் களப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளதுடன், தற்போது கிராமத்தில் வாழ்ந்து வந்த பல சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் மீன் வலை முதலாளிகளின் தொழிலாளர்களாக ஆகியுள்ளனர். தமக்குச் சொந்தமாக இருந்த கல்லராவ களப்புவின் முகத்துவாரத்தை மீண்டும் முன்னரைப் போலவே அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் அதில் தலையீடுவதில் நாட்டம் காட்டாததாக கல்லராவ புனித அந்தோனி சிறு மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி சீ. மானெல் பொடிநேரிஸ் கூறினார்.

இது தொடர்பாக உரிய சங்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட கோரிக்கைகளின் காரணமாக இதற்கு முன் கல்லராவ களப்பின் முகத்துவாரப் பகுதி அந்த இடத்தில் கடலுடன் இணைந்தமைக்கான சத்தியப் பிரமாணத்தை முன்வைக்குமாறும், இதற்கு முன்னர் இந்த இடத்தில் யாங் ஆற்றின் முகத்துவாரப் பகுதி பாய்ந்து சென்றதற்கான ஆதாரங்கள் இருப்பின் அதனை முன்வைக்குமாறும் கல்லராவ மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் திருகோணமலை அலுவலகம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய கடந்த மார்ச்சு 14 ஆம் திகதி கல்லராவ புனித அந்தோனி சிறு மீன்பிடித் தொழில் மீனவச் சங்கம் உரிய நிறுவனங்களுக்கு சத்தியப் பிரமாணங்களையும், ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளது. கல்லராவ சிறு மீன்பிடித் தொழில் மீனவர்கள் இதற்கு 10 வருடங்களுக்கு முன் தமது கிராமத்துக்கு அருகில் கடலுடன் கலந்த யாங் ஆற்றை முன்னரைப் போலவே கல்லராவ களப்பின் முகத்துவாரப் பகுதி இயற்கையாகப் பாய்ந்து சென்றவாறு அமைத்துத் தருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Diamond Leadership Study on Women Political Empowerment in Sri Lanka (2019/2020)

Diamond Leadership Study on Women Political Empowerment in Sri Lanka (2019/2020)


The Centre for Policy Alternatives together with the Sri Lanka Democratic Governance Assistance Project (SDGAP) of USAID conducted a study to analyze the progress of women’s advancement in Sri Lanka as well as factors supporting and barriers hindering it in Sri Lanka. The Diamond Leadership Model (DLM)  focuses on women’s empowerment at three levels (High, Mid and Low) and measures the effectiveness of women’s leadership in the legislative, executive, judicial and security sectors. This study frames key recommendations based on its findings which will help the government and civil society institutions working on women’s leadership and political empowerment, to design and implement their respective programs and policy initiatives more effectively.

This study consists of two components; one involves collecting available data of women holding leadership positions in four sectors to generate the Women’s Power Score (WPS). The 12 indicators of the DLM combined to generate the Women’s Power Score (WPS) of Sri Lanka. To account for women’s representation at different tiers of all four sectors of governance, weighted scores for each sector are calculated. Women’s share of positions in the High tier is weighted three times as much as women’s share of positions in the Low tier, and women’s share of positions in the Mid-tier are weighted twice as much. The total score is divided by 6 to find the country-level WPS.

The quantitative part of the study comprises of finding the above-explained WPS which included a primary quantitative data collection mainly via desk research. Desk research covered relevant data published in official websites, authenticated previous studies and reports, national libraries including parliament library, national newspapers, and public documents available in respective government institutions. With the data received, the women’s power score was measured, and an analysis carried out in comparison with other countries in which this study has been applied.

The qualitative research included a series of face-to-face interviews with 48 key individuals in which their ideas on women’s political empowerment in the country were brought into perspective. The findings were gathered through structured questionnaires for each sector, then analyzed to explore the non-numerical factors that underlie women’s advancements among other prospects.

The project offered an advanced understanding of the nature and extent of women’s leadership and political empowerment and examined the actual share of women’s representation using 12 indicators that cover three tiers; high, mid, and low positions in four government sectors; the executive, legislature, judiciary and security. It helped identify major trends and challenges about women’s leadership in Sri Lanka based on the DLM.

FINAL_DLM Study_Sri Lanka_30_09_2019

ஜனாதிபதி செயலகம் அத்தியாவசிய பொது சேவைகள் – பொதுக் கழகம், அரசுத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கம்

ஜனாதிபதி செயலகம் அத்தியாவசிய பொது சேவைகள் – பொதுக் கழகம், அரசுத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கம்.

வரதமான பத்திரிகை இல  –  2229/08

Click Here – PDF

ஜனாதிபதி செயலகம் – காலநிலை மாற்றங்களுக்கான நிலையான தீர்வுகளுடன் இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக மாற்ற ஜனாதிபதி பணிக்குழுவின் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்

ஜனாதிபதி செயலகம் – காலநிலை மாற்றங்களுக்கான நிலையான தீர்வுகளுடன் இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக மாற்ற ஜனாதிபதி பணிக்குழுவின் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்

வர்த்தமான பத்திரிகை இல – 2229/07

Click Here – PDF

ஜனாதிபதி செயலகம் – 2021 மார்ச் 06 முதல் அமலுக்கு வரும் வகையில் வட மத்திய மாகாணத்தின் தலைமை செயலாளராக திரு. எல். ஜே. எம். சி. பண்டாரா நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி செயலகம் – 2021 மார்ச் 06 முதல் அமலுக்கு வரும் வகையில் வட மத்திய மாகாணத்தின் தலைமை செயலாளராக திரு. எல். ஜே. எம். சி. பண்டாரா நியமிக்கப்பட்டார்.

Click Here – PDF

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை – 2019(2020)

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை – 2019(2020)

சுற்றறிக்கை இல. – 07/2021(I)

Click Here – PDF

ஜனாதிபதி செயலகம் – ஆயுதப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் 2021 மே 22 முதல் அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி செயலகம் – ஆயுதப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் 2021 மே 22 முதல் அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்.

Click Here to Pdf

தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளை மீளமைத்து வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் – 2020

தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளை மீளமைத்து வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் – 2020

சுற்றறிக்கை இல.: 01/2021

Click Here – PDF

தாபனவிதிக் கோவையின் தொகுதி II இன் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 ஆம் பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல்

தாபனவிதிக் கோவையின் தொகுதி II இன் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 ஆம் பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியல்

சுற்றறிக்கை இல: 03/2019(II)

Click Here – PDF

விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கான பழைய இலக்கம்: 82/83 மற்றும் M/F வகுதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய அங்கத்தவர்களை இணைய வழியில் (Online) மீண்டும் பதிவு செய்தல்

விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கான பழைய இலக்கம்: 82/83 மற்றும் M/F வகுதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய அங்கத்தவர்களை இணைய வழியில் (Online) மீண்டும் பதிவு செய்தல்

சுற்றறிக்கை இல – 26/2017(V)

Click Here – PDF

மகப்பேறின்மைக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள அவசியப்படும் அரச அலுவலர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்

மகப்பேறின்மைக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள அவசியப்படும் அரச அலுவலர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்

சுற்றறிக்கை இல. : 07/2017(I)

Click Here – Pdf

பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் 2219/71

பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் 2219/71

Click Here – PDF

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்

Click Here – PDF

2016 இன் 12 ஆம் இலக்கத் தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டத்தின் கீழ் மின் அஞ்சல் ஊடாக மேற்கொண்ட தகவல் கோரிக்கைக்கான பகிரங்க அதிகார சபைகளின் பிரதிபலிப்புப் பற்றிய கற்கை

2016 இன் 12 ஆம் இலக்கத் தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டத்தின் கீழ் மின் அஞ்சல் ஊடாக மேற்கொண்ட தகவல் கோரிக்கைக்கான பகிரங்க அதிகார சபைகளின் பிரதிபலிப்புப் பற்றிய கற்கை அறிக்கை

Click Here – PDF

தொழிலாளர் சட்டங்களை மீறுவதன் மீதான முறைப்பாட்டு விண்ணப்பம்

தொழிலாளர் சட்டங்களை மீறுவதன் மீதான முறைப்பாட்டு விண்ணப்பம்

முறைப்பாட்டு விண்ணப்பம்

Click Here – PDF

 

2021 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, குறைந்தபட்ச வேதனஙகள் (இந்திய தொழிலாளர்கள் ) திருத்தச் சட்டம்

2021 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, குறைந்தபட்ச வேதனஙகள் (இந்திய தொழிலாளர்கள் ) திருத்தச் சட்டம்

றைந்தபட்ச வேதனஙகள் (இந்திய தொழிலாளர்கள் ) திருத்தச் சட்டம்

Click Here – PDF

 

மொழி உரிமையும் பிரஜைகளின் பிரவேசமும் (2011 – 2014 வரையிலான மொழி உரிமை நிகழ்ச்சித் திட்டங்களின் மீளாய்வு)

மொழி உரிமையும்
பிரஜைகளின்
பிரவேசமும்
(2011 – 2014 வரையிலான மொழி உரிமை நிகழ்ச்சித் திட்டங்களின் மீளாய்வு)

மொழி உரிமையும் பிரஜைகளின் பிரவேசமும் (2011 – 2014 வரையிலான மொழி உரிமை நிகழ்ச்சித் திட்டங்களின் மீளாய்வு)

சுற்றறிக்கை இல. 13/2008(V)

சுற்றறிக்கை இல. 13/2008(V)

உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குதலும், அவ் வாகனச் சாரதிகளுக்கான மேலதிக நேர மற்றும் இணைந்த படிகளை செலுத்தலும்

Click Here – Pdf

சுற்றறிக்கை இல. 02/2019(L)

சுற்றறிக்கை இல. 02/2019(L)

ஓய்வூதியங்களைச் செலுத்தும் போது மோசடியான முறையில், மரணித்த ஓய்வூதியகாரர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவதைத் தடுப்பதற்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்துதல்

Click Here – Pdf

2105 /53 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /53 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

காணித் திணைக்களம் – பரத்த, பனதுறை பி/செ பிரிவு, களுத்துறை மாவட்டம் – கேட். வரைபடம் எண். 520013

Click Here – Pdf

2105 /52 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /52 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

காணித் திணைக்களம் – பாலபனாதேபகே, கலிகமுவ பி/செ பிரிவு, கேகாலை மாவட்டம் – காட். எண் 610008

Click Here – Pdf

2105 /51 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /51 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

காணித் திணைக்களம் – ஹரககலேகம, கட்டான டி / எஸ் பிரிவு, கம்பஹா மாவட்டம் – காட். வரைபடம் எண். 511200

Click Here – Pdf

2105 /50 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /50 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

ஊவா மாகாண சபை – நிதி (துணை வழங்கல்) 1995 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சட்டம்.

Click Here – Pdf

2105 /49 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /49 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

நிலம் கையகப்படுத்துதல் – கதுருவெல, தமன்கடுவ பி/செ பிரிவு, பொலன்னறுவை மாவட்டம்

Click Here – Pdf

2105 /48 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /48 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

நிதிக் கொள்கை திணைக்களம் – முன்னாள். 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க சுங்கவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட  வர்த்தமானி இலக்கம் 2044/32

Click Here – Pdf

2105 /47 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

2105 /47 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

நிதிக் கொள்கை திணைக்களம் – 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நிதி (கார்பன் வரி) ஒழுங்குவிதிகள்

Click Here – Pdf

2105 /46 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /46 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி கொள்முதல் – பல்லேகம, பஸ்பேஜ் கோரல் பி/செ பிரிவு, கண்டி மாவட்டம்

Click Here -Pdf

2105 /45 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /45 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

காணிப் பிரதேச திணைக்களம் – படலிய, மீரிகம பி/செ பிரிவு, கம்பஹா மாவட்டம்

Click Here -Pdf

2105 /44 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /44 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி சுவீகரிப்பு – கபுடுவ, திஹாகொட பி/செ பிரிவு, மாத்தறை மாவட்டம்

Click Here – Pdf

2105 /43 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /43 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி கொள்முதல் – நட்டுக்குடா, துள்ளுக்கடிராயுப்பு, மன்னார்  பி/செ   பிரிவு, மன்னார் மாவட்டம்

Click Here – Pdf

2105 /42 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /42 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி கொள்முதல் – நட்டுக்குடா, துள்ளுக்கடிராயுப்பு, மன்னார் டவுன் பி/செ பிரிவு, மன்னார் மாவட்டம்

Click Here – Pdf

2105 /41 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /41 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி கொள்முதல் – நட்டுக்குடா, துள்ளுக்கடிராயுப்பு, மன்னார் டவுன் பி/செ பிரிவு, மன்னார் மாவட்டம்

Click Here – Pdf

2105 /40 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 /40 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

நிலம் கையகப்படுத்துதல் – நட்டுக்குடா, மன்னார் டவுன் பி/செ  பிரிவு, மன்னார் மாவட்டம்

Click Here – Pdf

2105 / 39ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 39ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலகம் – அமைச்சின் கடமைகள் மற்றும் பணிகள் பற்றிய திருத்தங்கள்

Click Here – Pdf

2105 / 38 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 38 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

தொலைதொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு – விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒழுங்குவிதிகள்

Click Here – Pdf

2105 / 38 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 38 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு – திரு. எச். டபிள்யூ. ரணில் குணதிலக, ஹக்மன பிரதேச சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Click Here – Pdf

2105 / 36 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 36 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

தேர்தல் ஆணையம் – திரு. ஜானக நிஷாந்த ரத்னாயக்க பண்டாரவளை மாநகர சபை பிரதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Click Here – Pdf

2105 / 35 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 35 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

தேர்தல் ஆணையம். 2105/35 – வியாழன், ஜனவரி 10, 2019 நிரல்களை – திரு எச் எம் எம் Heenkenda பண்டாரவளை மாநகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Click Here – Pdf

2105 / 34 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 34 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலகம் – 01.01.2019 முதல் இலங்கை கடற்படையின் தலைவராக திரு. கே.வி.வி.பீ.சி. சில்வா நியமிக்கப்பட்டார்.

Click Here – Pdf

2105 / 33 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 33 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலகம் – 21.12.2018 முதல் அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்கள்

Click Here – Pdf

2105 / 32 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

2105 / 32 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை

ஜனாதிபதி செயலகம் – துணை அட்மிரல் எஸ். எஸ். ரணசிங்க 31.12.2018 முதல் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்

Click Here – Pdf

2105 / 31ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 31 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு – பட்டம் வழங்கும் நிறுவனம் ஆணை KAATSU – உயர் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி மையம் (பிரைவேட்) லிமிடெட் (KIU)

Click Here – Pdf

2105 / 30 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 30 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

நிலம் கையகப்படுத்துதல் – அனந்தபுரம், புத்தளம் பி/செ பிரிவு, மொனராகலை மாவட்டம்

Click Here – Pdf

2105 / 28 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 28 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

காணி எக்சிசிசிஷன் – பெரனகொட, யக்கலமுல்ல பி/செ பிரிவு, காலி மாவட்டம்

Click Here – Pdf

2105 / 27 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 27 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

காணி கொள்முதல் – மடால்போவா, மாவனல்ல பி/செ பிரிவு, கேகாலை மாவட்டம்

Click Here – Pdf

2105 / 26 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 26 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

காணி கொள்முதல் – வெல்லவா, குருநாகல் பி/செ பிரிவு, குருநாகல் மாவட்டம்

Click Here – Pdf

2105 / 25 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 25 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

காணி கொள்முதல் – திவுலப்பிட்டிய டி / எஸ் பிரிவில் உள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு வழங்குதல்.

Click Here – Pdf

2105 / 23 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 23 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

மெகாபோலிஸ் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சு – கொழும்பு அபிவிருத்தி திட்டத்தின் (திருத்தச்சட்டம்)

Click Here – Pdf

2105 / 22 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 22 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

மெகாபோலிஸ் & வெஸ்டர்ன் டெவலப்மென்ட் அமைச்சகம் – கொழும்பு அபிவிருத்தி திட்டத்தின் (திருத்தம்) 2008 ஆம் ஆண்டின் அங்கீகாரத்தை அறிவித்தல்

Click Here – Pdf

2105 / 21 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 21 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

மெகாபோலிஸ் மற்றும் மேற்கத்திய மேம்பாட்டு அமைச்சு – ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகரசபையின் 2008-2020 திட்டமிடல் மற்றும் கட்டட ஒழுங்குவிதிகள் திருத்தத்திற்கான ஒப்புதலுக்கு அறிவி

Click Here – Pdf

2105 / 20 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 20 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  09 ஆம் திகதி புதன்கிழமை

காணி கொள்முதல் – மாம்பே, கஸ்பெவா பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம் மற்றும் வர்த்தமானி மீள்திறுத்தம் . முன்னாள். 27.04.2018 ஆம் திகதி 2068/44 ஹோமாகம பி/செ பிரிவு

Click Here – Pdf

2105 / 19 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை

2105 / 19 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  09 ஆம் திகதி புதன்கிழமை

மெகாபோலிஸ் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சு – நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஆலோசனைக் குழுவின் நிறுவலுக்கு ஒப்புதல் தெரிவித்தல்

Click Here – Pdf

2105 / 18 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

2105 / 18 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

வட மத்திய மாகாண சபையின் பதவிகளுக்கான ஆளுநரின் அலுவலகம் – வட மத்திய மாகாணம் – Mr. H. M. திலகா பண்டார மற்றும் 15 மற்ற உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Click Here – Pdf

2105 / 17 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 17 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

நிலம் கையகப்படுத்தல் – தலவாக்கலை, நுவரெலியா பி/செ பிரிவு, நுவரெலியா மாவட்டம்

Click Here – Pdf

2105 / 16 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 16 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

தேர்தல் கமிஷன் – அறிவிக்க வேண்டும் என்று திரு கே வி.எஸ். பண்டார 08 பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கபடல்

Click Here – Pdf

2105 / 15 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 15 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணி கொள்முதல் – அலவதுகொட, அக்குரன பி/செ பிரிவு, கண்டி மாவட்டம்

Click Here – Pdf

2105 / 14 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 14 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

நிலம் கையகப்படுத்துதல் – துல்தெனிய, அரநாயக பி/செ பிரிவு, கேகாலை மாவட்டம்

Click Here – Pdf

2105 / 13 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 13 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணி உாித்துத் திணைக்களம் – போடேகெதரமுள்ள, ஹோமகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம் – காட். வரைபடம் எண். 520026

Click Here – Pdf

2105 / 12 ஆம் இலாக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 12 ஆம் இலாக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணி அபிவிருத்தி திணைக்களம் – சுவாசபொல, கஸ்பவா பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம் – காட். வரைபடம் இல. 521201

Click Here – Pdf

2105 / 11 ஆம் இலாக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 11 ஆம் இலாக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணி கொள்முதல் – கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன பி/செ  பிரிவில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு

Click Here – Pdf

2105 / 10 ஆம் இலாக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 10 ஆம் இலாக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணி அபிவிருத்தி திணைக்களம் – கொஸ்கொட, குருதி பி/செ பிரிவு, ரத்னபுர மாவட்டம் – காட். வரைபடம் எண் 620275

Click Here – Pdf

2105 / 9 ஆம் இலக்கம் 2019 ஆம் ஆண்டு சனவாி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105 / 9 ஆம் இலக்கம் 2019 ஆம் ஆண்டு சனவாி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணித் திணைக்களம் – வாரகொட, தலாவ பி/செ மாவட்டம், அனுராதபுரம் மாவட்டம் – காட். வரைபடம் எண். 110135

Click Here – Pdf

2105/8 ஆம் இலக்கம் – 2019 ஆம் சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105/8 ஆம் இலக்கம் – 2019 ஆம் சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணி உரித்துத் திணைக்களம்- தெஹிகொள்ள மஹியங்கனய பி/செ, பதுளை மாவட்டம் – காட். வரைபடம் எண் 710024

Click Here – Pdf

2105/7 இலக்க, 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதிய வர்த்தமானி

2105/7 இலக்க, 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதிய வர்த்தமானி

காணி உரித்துத் திணைக்களம் – காைலபிட்டிய, அதனகல்ல பி/செ பிரிவு, கம்பஹா மாவட்டம் – காட். வரைபடம் எண். 510600

Click Here – Pdf

2105/06 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவாி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105/06 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவாி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணித் திணைக்களம் – கம்புறுகமுவ வடக்கு, வெலிகம பி/செ பிரிவு, மாத்தறை மாவட்டம் – காட். வரைபடம் எண். 820069

Click Here -Pdf

2105/5 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105/5 ஆம் இலக்கம் –  2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணிப்பிரதேச திணைக்களம் – எதொராவ, தம்புதெகம பி/செ மாவட்டம், அனுராதபுரம் மாவட்டம் – காட். வரைபடம் எண். 110053

Click Here – Pdf

2105/4 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105/4 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணித் திணைக்களம் – அலுத்கம – பொகமுவ, கம்பஹா பி/செ பிரிவு, கம்பஹா மாவட்டம் – காட். வரைபடம் எண் 810013

Click Here – Pdf

2105/3 ஆம் இலக்கம் – 2019 ஆம் திகதி சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

2105/3 ஆம் இலக்கம் – 2019 ஆம் திகதி சனவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை

காணித் திணைக்களம் – மகுளுவா, காலி நான்கு கிராவெட்ஸ் பி/செ பிரிவு, காலி மாவட்டம் – காட். வரைபடம் எண் 810013

Click Here – Pdf

இலக்கம் 2105/02 – திங்கட்கிழமை, சனவரி 07 ஆம் திகதி, 2019

இலக்கம் 2105/02 – திங்கட்கிழமை, சனவரி 07 ஆம் திகதி, 2019

காணி அபிவிருத்தி திணைக்களம் – கம்புறுகமுவ வடக்கு, வெலிகம பி/செ, மாத்தறை மாவட்டம் – காட். வரைபடம் எண். 820069

Click Here – Pdf

2105ஃ 1 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆந் திகதி திங்கட்கிழமை

2105/1 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆந் திகதி திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா சுங்கம் – 07.01.2019 முதல் 13.01.2019 வரையான காலக்கெடுவின் விலை நிர்ணயம்

Click here – Pdf

2104/35 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவாரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2104/35 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவாரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணி கொள்முதல் – கோலஹேலா, கேகாலை பி/ செ பிரிவு, கேகாலை மாவட்டம்

Click Here – Pdf

2104/34 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2104/34 ஆம் இலக்க – 2019 ஆம்  ஆண்டு சனவரி மாதம்  04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

ஆளுநரின் அலுவலகம் – வடமேல் மாகாணம் – 2019 நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கு கணக்கில் ஒரு வாக்கு

Click Here – Pdf

2104/33 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2104/33 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

தொலைத் தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு – இலங்கை கிரிக்கெட்டின் பதிவை நீக்குதல்

Click Here – Pdf

2104/32 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை.

2104/32 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை.

காணி கொள்முதல் – ஹோமாகம, ஹோமாகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம்

Click Here – Pdf

2104/31 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2104/31 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு – கடன் ஒப்புதல் ஒழுங்குமுறைகளுக்கு திருத்தம்

Click Here – Pdf

2104/30 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2104/30 ஆம் இலக்கம்  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு – பிளாக் கிராமில் விசேட பொருட்களின் விலையை நிர்மாணித்தல்

Click Here – Pdf

2104/29 ஆம் இலக்க 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை

2104/29 ஆம் இலக்க 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி உரித்துத் திணைக்களம்  –

கந்தவல, ரத்மலானை பி/செ பிரிவு, கொழும்பு மாவட்ட – காட். வரைபடம் எண். 521001

Click Here – Pdf

2104 /28 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2104 /28 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி உாித் திைணக்களம் திைணக்களம் – ராவத்தவத்த, மொரட்டுவ பி / செ திணைக்களம், கொழும்பு மாவட்டம் – 520201

Click Here – Pdf

2104/27 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2104/27 ஆம்  இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம்  03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணித் தலைப்பு தீர்வுத் திணைக்களம் – காஸில் திருத்தம். முன்னாள். 2062/24, ஹோமாகம பி/செ பிரிவு மற்றும் பிற திருத்தங்கள்

Click Here – Pdf

2104/26 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2104/26 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணித் தலைப்பு தீர்வுத் திணைக்களம் – காஸில் திருத்தம். முன்னாள். இல்லை. 20.02.2018 இல் 2059/12, கஸ்பவா பி/செ பிரிவு மற்றும் பிற திருத்தங்கள்

Click Here – Pdf

2104/25 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2104/25 ஆம் இலக்கம் – 2019 ஆம்  ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு – மின்சாரம் உற்பத்தி உரிமங்களை நீக்குதல்

Click Here – Pdf

2104/24 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2104/24 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு – ஸ்ரீலங்கா மின்சக்தி ஆணைக்குழுவின் கீழ் ஃபேர்வே நகர நகர்ப் பகுதிகளுக்கு விலக்களிக்கப்பட்ட சான்றிதழ்

Click Here – Pdf

2104/23 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2104/23 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

மாகாண ஆளுநர் அலுவலகம் – மேற்கு மாகாண சபைக்கான திரு. எஸ். உப்பனகே மற்றும் ஏனைய 13 பேரை நியமித்தல்

Click Here – Pdf

2104/22 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

2104/22 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

நிலம் கையகப்படுத்துதல் – உடா அபரேக்க, மாத்தறை மாவட்டம், தெவிநுவர பி/செ பிரிவு

Click Here – Pdf

2104/21 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2104/21 ஆம் இலக்கம் – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணி கொள்முதல் – கடகெல்ல, கண்டி நான்கு கிராமவாசிகள் பி/செ பிரிவு, கண்டி மாவட்டம்

Click Here – Pdf

2104/20 ஆம் இலக்கம், 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2104/20 ஆம் இலக்கம், 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

தேர்தல் ஆணையம் –

பத்தேகம பிரதேச சபை உறுப்பினராக யு.டி. பிரேம குமார்

Click Here – Pdf

2104/18 ஆம் இலக்க – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை.

2104/18 ஆம் இலக்க  – 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை.

இலங்கையின் முதலீட்டுச் சபையின் – இலங்கை முதலீட்டு சபையின் திருத்தத்தை (கட்டணம் மற்றும் கட்டணங்கள்) விதிகள்

Click Here – Pdf

2069/40 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2069/40 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணி கொள்முதல் – பெரக்கித்தியா, பாதுக்க பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம் மற்றும் காஸில் இரண்டு திருத்தங்கள். முன்னாள். 2004/06 மற்றும் 2004/70 ஆம் ஆண்டுகளில், டெஹிவாயா பி/செ பிரிவு – 2042/29, ஹக்மணா பி/செ பிரிவு

Click Here – Pdf

2069/39 ஆம் இலக்க 2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2069/39 ஆம் இலக்க  2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

தொழிலாளர் துறை – ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோலியம் ரெசின் தயாரிப்புகளுக்கான ஊதியங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை அறிவித்தல், அச்சிடுதல் வர்த்தக மற்றும் ஜவுளி உற்பத்தி வர்த்தகம்

Click Here – Pdf

2069/38 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை.

2069/38 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சு –

கப்பல் முகவர்கள் (உரிம) விதிமுறைகள் 1991 (17.10.1991) ஆம் ஆண்டின் 674/9 இலக்கம்

Click Hera – Pdf

2069/37 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2069/37 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம்  03 ஆந்  திகதி வியாழக்கிழமை

நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை – தோல் கிரீம் / லோஷன்ஸ் மற்றும் தகவல்கள் ஆகியவற்றில் கனரக உலோகங்களுக்கு அனுமதிக்கப்படக்கூடிய அதிகபட்ச வரம்புகளை அறிவிக்க வேண்டும்.

Click Here – Pdf Link

2069/36 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2069/36 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ், /பேர்வே காலி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இன்க்ளிக் டெவலப்மெண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகியவற்றிற்கு விலக்கு வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Click Here – PDF Link

2069/35 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2069/35 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

இலங்கை புகையிரத சேவை

இலங்கை புகையிரத ஊழியரின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அறிவித்தல்

Click Here – Pdf Link

2069/34 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை

2069/34 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி சுவீகரிப்பு 

வேதகளை, கலவானை பி/செ பிரிவி, இரத்தினபுரி மாவட்டம்.

Click Here – Pdf

2069/33 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண் டு மே மாதம் 03 ஆந் திகதி வியாழக்கிழமை

2069/33 ஆம் இலக்க – 2018 ஆம்  ஆண் டு மே மாதம் 03 ஆந்  திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள் 

கண்டி மாவட்டத்தின் உடுதும்பாரா பி/செ  பிரிவு மீமுறை உள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு

Click Here – Pdf Link

2069/32 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2069/32 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் 

மாபோதள, மினுவாங்கொடை பி/செ, கம்பஹா மாவட்டம் கார்ட். வரைபட இலக்கம்.  510401

Click Here – Pdf Link

2069/ 31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2069/ 31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் – பொஹத்ரமுல்ல, களுத்துறை பி/செ பிரிவு, களுத்துறை மாவட்டம் – காட். வரைபடம் இலக்கம் 530014

Pdf Link – Click Here

2069/30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை

2069/30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை

காணித் திணைக்களம் – சிட்டினமலுவ, பெலியத்த பி/செ பிரிவு, அம்பாந்தோட்டை மாவட்டம் – காட். வரைபடம் இல. 830116

Pdf Link – Click Here

2069/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2069/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணித் தீர்வைத் திணைக்களம் – குடாமகே, உடபலத பி/செ பிரிவு, கண்டி மாவட்டம் – காட். வரைபடம் எண். 320015

Pdf Link – Click Here

2069/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

2069/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணித் திணைக்களம் – மொரகொல்லாகம , வாரியபொல பி/செ பிரிவு, குருநாகல் மாவட்டம் – கேட். வரைபடம் இல. 420911

Pdf Link – Click Here

2069/27 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 திகதி வியாழக்கிழமை

2069/27 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03  திகதி வியாழக்கிழமை

காணித் திணைக்களம்

அளுத்கம-போகமுவ, கம்பஹா பி/செ பிரிவு, கம்பஹா மாவட்டம் – கேட். வரைபடம் எண். 511800

Pdf Link – Click Here

வர்த்தமானி அறிவித்தல் 2069/27 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

வர்த்தமானி அறிவித்தல் 2069/27 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை

காணித் திணைக்களம் – அளுத்கம – போகமுவ, கம்பஹா பி/செ பிரிவு, கம்பஹா மாவட்டம் – கேட். வரைபடம் எண். 51180

Pdf Link – Click Here

வர்த்தமானி அறிவித்தல் 2069/32 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழைமை

வர்த்தமானி அறிவித்தல் 2069/32 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழைமை

காணித் திணைக்களம் – வத்தருகம, தொம்பே பி/செ பிரிவு, கம்பஹா மாவட்டம் – காட். வரைபடம் எண். 511002

Pdf Link – Click Here

2069/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழைமை

2069/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழைமை

காணிக் கையகப்படுத்தும் திணைக்களம்

காலி வீதி, காலி மாவட்டத்திலுள்ள, காலி நான்கு கால்வாய்கள். வரைபடம் இல. 8100200

Pdf Link – Click Here

2069/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆந் திகதிவியாழக்கிழமை

2069/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டின் மே மாதம் 03 ஆந் திகதிவியாழக்கிழமை

காணித் திணைக்களம் – திஸ்ஸமஹாராய, திஸ்ஸமஹாராய பி/செ பிரிவு, அம்பாந்தோட்டை மாவட்டம் – காட். வரைபடம் இல. 830067

Pdf Link – Click Here

2069/23 ஆம இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

2069/23 ஆம இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம்  02 ஆந் திகதி புதன்கிழமை

ஜனாதிபதி செயலகம் – மாநில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் – அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகல் அறிவிப்பு

Pdf Link – Click Here

2069/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

2069/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு – கரககாத்துவ, பத்தடும்பாரா பி/செ பிரிவு, கண்டி மாவட்டம் – அஸ்கிரிய கிராமம், கங்குவாத்தா கோரேலே பி/செ பிரிவு, கண்டி மாவட்ட மற்றும் ஜா-எல, ஜா-எல பி/செ

Pdf Link – Click Here

2069/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

2069/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு – ராஜமாதாத, ரத்மலானை பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம் – மவதகம, மவடகம பி/செ பிரிவு, குருநாகல் மாவட்டம் மற்றும் மொரகமமன்ன, ஆரணக பி/செ பிரிவு, கேகாலை மாவட்டத்தில் கையகப்படுத்திய நிலங்களை அறிவித்தல்.

Pdf Link – Click Here

2069/20 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

2069/20 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

மேல் மாகாண சபை – மேற்கு மாகாணத்தின் கழிவு முகாமைத்துவ விசேட சட்டத்தை அறிவித்தல்

Pdf Link – Click Here

2069/19 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

2069/19 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந் திகதி புதன்கிழமை

வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை துறை – வருவாய் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்கு, அந்த பீடி புகையிலை மீதான வரி

Pdf Link – Click Here

2069/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்கிழமை

2069/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்கிழமை

வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை துறை – உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீது சிறப்பு பொருட்கள் விலை அறிவிப்பு

Pdf Link – Click Here

 

2069/17 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/17 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி செயலகம் – கௌரவ. அமைச்சர்கள் 01.05.2018 முதல் அமர்வுகளை ராஜினாமா செய்துள்ளனர் – 01.05.2018 (கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மற்றும் ஏனையோர்)

Pdf Link – Click Here

2069/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்   – 2018 ஆம் ஆண்டு மே மாதம்  01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு – பல்கலைக்கழக சட்டத்தின் கீழான ஒழுங்கு, முன்னாள். சமஸ்கிருத மற்றும் கிழக்கு ஆய்வுகள் திணைக்களம் 22.07.2006 இலிருந்து 1454/37

Pdf Link – Click Here

2069/15 ஆம் இலக்கம் வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/15 ஆம் இலக்கம் வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிலம் கையகப்படுத்தல் – ஹெவல்வெல, பிபில பி/செ பிரிவு, மொனராகலை மாவட்டம்

Pdf Link – Click Here

2069/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிலம் கையகப்படுத்துதல் – திர்கரேனா, பிபில பி/செ பிரிவு, மொனராகலை மாவட்டம்

Pdf Link – Click Here

2018 ஆம் ஆண்டின் 2069/12 இலக்க வர்த்தமானி அறிவித்தல் – மே மாதம் 2018.05.01

2018 ஆம் ஆண்டின் 2069/12 இலக்க வர்த்தமானி அறிவித்தல்   –  மே மாதம் 2018.05.01

காணி கையகப்படுத்துதல் – கம்புறுபிட்டிய, கம்புறுபிட்டிய பி/செ பிரிவு, மாத்தறை மாவட்டம் மற்றும் மாலிகஸ்பே, காலி காலி வீதி நான்கு கிராமங்கள்.

Pdf Link – Click Here

2069/11 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது

2069/11 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது

நிலம் கையகப்படுத்துதல் – டில்கலிரேனா, பிபில பி/செ பிரிவு, மொனராகலை மாவட்டம்.

PDF Link

2069/10 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/10 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிலம் கையகப்படுத்தல் – ஹெவல்வெல, பிபில பி/செ பிரிவு, மொனராகலை மாவட்டம்

PDF Link

2069/9 ஆம் வர்த்தமானி இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/9 ஆம் வர்த்தமானி இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிலம் கையகப்படுத்தல் – குருவம்ப, பிபில பி/செ பிரிவு, மொனராகலை மாவட்டம்

PDF Link

2069/8 ஆம் இலக்க வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது

2069/8 ஆம் இலக்க வர்த்தமானி  – 2018 ஆம் ஆண்டு மே மாதம்  01 ஆந்  திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது

காணி கொள்முதல் – சுன்னாகம், வல்கிணம் – தெற்கு பி/செ பிரிவு, யாழ்ப்பாணம்

PDF Link

 

 

2069/ 7 ஆம் இலக்கம் வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/ 7 ஆம்  இலக்கம் வர்த்தமானி  – 2018 ஆம்  ஆண்டு மே மாதம்  01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

 

இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு – காப்பீட்டுச் சட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  முன்னாள்  பதிவு கட்டணங்களை அதிகரிப்பதற்கான விதிகள் திருத்த, வர்த்தமானி  வெளியிடப்பட்டது.  1412/30

PDF Link

PDF Link

2069/ 6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/ 6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்  – 2018 ஆம் ஆண்டு மே மாதம்  1 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு  – 

வர்த்தமானி திருத்தம். முன்னால். 2061/42 மற்றும் 2062/15 ஆகியவை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் திரும்பிய உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடல் – 2018

Pdf Link – Click Here

2069/ 4 ஆம் இலக்கம் வர்த்தமானி – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/ 4 ஆம் இலக்கம்  வர்த்தமானி  – 2018 ஆம் ஆண்டு மே மாதம்  24 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிலம் கையகப்படுத்தல் –

மொபனே, மொனராகலை பி / செ பிரிவு, மொனராகலை மாவட்டம்

Pdf Link – Click Here

2069/3 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/3 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிலம் கையகப்படுத்தல் –

வெலிபன்ன, மாத்தகம பி / செ பிரிவு, களுத்துறை மாவட்டம்

Pdf Link – Click Here

2069/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2069/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் –

வருவாய் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்கு, சிங்கப்பூர் – ஸ்ரீலங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2017

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2017

இலங்கை பொறியியல் சேவை அலுவலர்களின் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் காலத்தினை நீடித்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2017

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2017

தாபனவிதிக் கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 26:3 ஆம் உறுப்புரையினை திருத்தம் செய்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2017

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2017

செய்முறைப் பயிற்சிக்காக பயிலுநர்களை அரச நிறுவனங்களுக்கு இணைத்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2017

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2017

தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளை மீளமைத்து வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் – 2016

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2017

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2017

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுக் கட்டணத்தினை ஈடு செய்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2017

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2017

விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரம் – 2017 பெப்ரவரி 06 – 12

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 32/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 32/2016

2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகளின் பட்டியல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 29/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 29/2016

அரசாங்க கட்டிடங்களின் வாடகை “20.02.01.01” தொடர்பான வருமான நிலுவை அறிக்கை சமர்ப்பித்தல் – 2016.12.31

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 28/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 28/2016

தொழில்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கு தேசிய தொழில் தகைமைகளை ஏற்றுக் கொள்ளுதல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 26/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 26/2016

இருமொழி / மும்மொழி ஆற்றல்கொண்ட வளவாளர் தரவுத் தளமொன்றைத் தாபித்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2016

அரசாங்க நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2016

பொலிதீன், பிலாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவு ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2016

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 23/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 23/2016

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் சிறப்பு வகுப்பிலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2017

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/2016

அரசாங்க நிர்வாக சேவையின் III ஆம் தரத்துடைய அலுவலர்களுக்கான மற்றைய அரச கரும மொழியான தமிழ் மொழித் தேர்ச்சியினைப் பூர்த்தி செய்வதற்கான சலுகைகளை வழங்குதல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2016

தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உப பிரிவினை மீளமைத்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2016

இலங்கை திட்டமிடல் சேவை அலுவலர்களின் வருடாந்த இடமாற்ற நடைமுறைகள்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2016

தேர்தல்களில் தோற்றுவதற்காக அரசாங்க சேவையில் இருந்து விலகிய அரசியல் ரீதியான உரிமைகளை இழந்த அலுவலர்களை மீளச் சேவையில் அமர்த்துதல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2016

தாபனக் கோவையின் XV ஆம் அத்தியாயத்தின் 10:1 உப பிரிவின் அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2016

2017 ஆம் ஆண்டின் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தரத்தில் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற நடைமுறை

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2016

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பச் சேவையின் 1 ஆம் வகுப்பின் III ஆந் தரம் மற்றும் 1 ஆம் வகுப்பின் II ஆந் தரத்தினைக் கொண்ட அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடைப் பரீட்சை – 2016

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2016

அரசாங்க கட்டிடங்களின் வாடகை “20.02.01.01” தொடர்பான வருமான நிலுவை அறிக்கை சமர்ப்பித்தல் – 2016.06.30

Pdf Link – Click Here

”தகவல் அறியும் உரிமையின் நடைமுறை அமுலாக்கம் தொடர்பான முன்னேற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையின் வெளியீட்டு வைபவம்”

”தகவல் அறியும் உரிமையின் நடைமுறை அமுலாக்கம் தொடர்பான முன்னேற்றம் பற்றிய ஆய்வு அறிக்கையின் வெளியீட்டு வைபவம்”இன்றைய தினம் (27/09/2018) அரச தகவல் திணைக்களதில் இடம்பெற்றதுடன்,அறிக்கை மற்றும் அத்துடன் தொடர்புடைய தகவல் கோவையானது இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.

Report PDF Link – (T) Research Report On RTI Complaints and Responses

Data base – (T) Research Report On RTI Word Data Base

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:10/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2016

வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் வீதிகள் தடைப்பட்டமை காரணமாக சேவைக்கு வருகை தராத அரசாங்க அலுவலர்களுக்கான விசேட விடுமுறை – 2016 மே மாதம்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2016

தாபனவிதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 11 ஆம் பிரிவினை திருத்தியமைத்தல் – ஆதனக் கடன்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2016

தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளை மீளமைத்து வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் – 2015

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2016

இலங்கை நிர்வாக சேவையின் 111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்க்கப்பட்ட அலுவலர்கள் அரசகரும மொழியான தழிழ் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியெய்த வேண்டிய தேவைப்பாட்டில் இருந்து விலக்களித்தல்.

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2016

உத்தியோகபூர்வ வாகனங்களுக்குப் பதிலாக மாதாந்த பிரயாணப் படி வழங்குதல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2016

தாபன விதிக்கோவையின் XIX ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் பிரிவினை திருத்தியமைத்தல் அரசாங்க இல்லங்களுக்கான வாடகை

Pdf Link – Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2016

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2016

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார விசேட தினத்தை செயற்படுத்தல் – 2016 சனவரி 25-30

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 27/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 27/2015

2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகளின் பட்டியல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2015

அரசாங்க கட்டிடங்களின் வாடகை “20.02.01.01” தொடர்பான வருமான நிலுவை அறிக்கை சமர்ப்பித்தல் – 2015.12.31

Pdf Link – Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/2015

ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் உள்ளடக்கப்படவுள்ள வேறு கல்வித் தகைமைகள்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2015

தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 13 ஆம் பிரிவினைத் திருத்துதல் பண்டிகை முற்பணம்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2015

அரசாங்க முகாமைத்துவ சேவையின் சிறப்பு வகுப்பிலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2016

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2015

அரச சேவையில் நிறைவேற்றுச் சேவை வகையின் பதவிகளை வகிக்கின்ற அலுவலர்களுக்கு தொழில்சார் படி ஒன்றினை வழங்கல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:17/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2015

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் – 2016

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2015

அரசசேவையாளா;களுக்கு 01.01.2006 இலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பளஅளவூத்திட்டத்திற்கமைய ஓய்வ+திய மீளமைப்பு

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2015

இலங்கை நிர்வாக சேவை உத்தயோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறைகள் – 2016

Pdf Link – Click Here

அமைச்சுக்களின் மட்டத்தில் அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பான ஆய்வூ 2017

அமைச்சுக்களின் மட்டத்தில்     அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம்  தொடர்பான ஆய்வூ 2017

அமைச்சுக்களுக்கு ஒப்படைத்தல் – 28/05/2018

Summary Report 2017_Tamil

 

 

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2015

அரசாங்க அலுவலர்களின் பொறுப்புக்களும், சேவைபெறுநர்களின் சிறப்புரிமைகளும்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 8/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 8/2015

தேர்தல்கள் தொடர்பில் அரச சேவையிலுள்ள முறைகேடுகளைப் புலனாய்வு செய்வதற்கான விசேட குழு

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2015

தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 13 ஆம் பிரிவினைத் திருத்துதல் – பண்டிகை முற்பணம்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2015

தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தி வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் – 2014

PDF link : Click Here

சனாதிபதி செயலகம்

சனாதிபதி செயலகம்

அதியூத்தமராம் சனாதிபதி அவர்களால் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப் பின் 44 ஆம் உறுப்புரையின் (1)
ஆம் உப உறுப்புரையின் கீழ், 2018, மே மாதம் 02 ஆந் திகதியிலிருந்து பின்வரும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்;
என்பது இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

PDF link : Click Here

 

ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் – 2018/2019

ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல்  – 2018/2019

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 28/2016 இற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யூம் பட்டதாரி  அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்லுரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆசிரியர் கல்வி பாடநெறியினை இதுவரை பூர்த்தி செய்யாத ஆயரியர்கள் ஆசிரியர் உதவியாளர்கள்  இச் சுற்றறிக்கை இலக்கம் 28/2016 இற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2018 ஏப்பிரல் 27 ஆம் திகதிக்கு முன்னார்  “கல்விப் பணிப்பாளார் ஆசிரியர்  கல்வி நிருவாகக் கிளை கல்வி அமைச்சு  இசுருபாய பத்தரமுல்ல என்ற முகவாpக்கு பதிவூத் தபாலில் அனுப்ப வேண்டும்.

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2015

2015 வரவு செலவுத்திட்ட பிரேரணைக்கமைய அரசாங்க துறையின் அலுவலர்களுக்கும் ஓய்வூதியர்களுக்குமான கொடுப்பனவில் திருத்தம் மேற்கொள்ளல்

Pdf Link – Click Here

2069/01 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 30 ஆந் திகதிதிங்கட்கிழமை

2069/01 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 30   ஆந் திகதிதிங்கட்கிழமை

இலங்கை சுங்கம் 

30.04.2018 முதல் – 06.05.2018 வரையான கால இடைவெளிகளுக்கான கட்டணம்

Pdf Link – Click Here

2068/40 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 27 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2068/40 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 27  ஆந் திகதி வெள்ளிக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

கே. குலந்தேவேல் ரவி, 16 வன்னராஜா, நோவூட் பி / செ  என்ற வார்த்தையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Pdf Link – Click Here

2068/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 26 ஆந் திகதி வியாழக்கிழமை

2068/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 26  ஆந் திகதி வியாழக்கிழமை

விளையாட்டு அமைச்சு 

2018/2020 க்கு இலங்கை வில்வித்தை சங்கத்திற்கு புதிய அலுவலகத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்றை தெரிவு செய்யும் கட்டளை

Pdf Link – Click Here

2068/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 26 ஆந் திகதி வியாழக்கிழமை

2068/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 26  ஆந் திகதி வியாழக்கிழமை

சனாதிபதி செயலகம் 

திருத்தம் 23.04.2018 இன் 2068/01பாராளுமன்றை கூட்டுமாறு வெளியிடு செய்யப்பட்டது.

Pdf Link – Click Here

2068/23 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 25 ஆந் திகதி புதன்கிழமை

2068/23 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 25  ஆந் திகதி புதன்கிழமை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு

சபை கட்டளைகளின் கீழ் தெரிவித்தல், “சீமாசீத சமஸ்த லகா ஏகாபத விஷெஷ்தா ஆர்திகா மடஸ்தானா ஹெச் மணி மிலன் வெலந்த சமிதி”

Pdf Link – Click Here

2068/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 25 ஆந் திகதி புதன்கிழமை

2068/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 25  ஆந் திகதி புதன்கிழமை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு

“ஒரு சமூகம் என ஒன்றாக”, சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தெரிவித்தல்

Pdf Link – Click Here

2068/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 25 ஆந் திகதி புதன்கிழமை

2068/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 25  ஆந் திகதி புதன்கிழமை

உள்ளூராட்சித் திணைக்களம் 

வடக்கு மத்திய மாகாணம் – மேயர்கள், துணை மேயர்கள், அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளூராட்சி அதிகாரசபையின் தலைவர்களுக்கான தலைவரை அறிவித்தல்.

Pdf Link – Click Here

2068/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 24 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2068/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 24  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம்

2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் கணக்கிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 122.8 ஆகும்

Pdf Link – Click Here

2068/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 23 ஆந் திகதி திங்கட்கிழமை

2068/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 23  ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்கம் 

23.04.2018 முதல் 29.04.2018 வரையான காலத்தில், பரிமாற்ற விகிதங்கள் செயல்படுத்தப்படுகின்றன

Pdf Link – Click Here

2068/1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 23 ஆந் திகதி திங்கட்கிழமை

2068/1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 23  ஆந் திகதி திங்கட்கிழமை

சனாதிபதி செயலகம்

பாராளுமன்ற மண்டபத்தில் 08.05.2018 அன்று பாராளுமன்றம் கூட்ட வேண்டும்

Pdf Link – Click Here

 

2067/26 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை

2067/26 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19  ஆந் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

பேருவளை நகர சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம். ஏ. எம். அருசி

Pdf Link – Click Here

2067/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை

2067/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19  ஆந் திகதி வியாழக்கிழமை

மேல் மாகாண சபை 

2018 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க மேற்கு மாகாணத்தின் வெற்றிடமிருந்தால் (திருத்தச்) சட்டத்தை அறிவித்தல்

Pdf Link – Click Here

2067/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை

2067/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19  ஆந் திகதி வியாழக்கிழமை

மத்திய மாகாண சபை 

மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு மற்றும் வர்த்தமானி இல் வெளியிடப்பட்ட நியமனத்தை கலைத்தல். 1920/21

Pdf Link – Click Here

2067/9 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை

2067/9 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 19  ஆந் திகதி வியாழக்கிழமை

சனாதிபதி செயலகம்

அமைச்சுக்களுக்கு நியமனங்கள் தெரிவிக்க – கௌரவ. சரத் அமுனுகம மற்றும் 3 மற்ற எம்.பி.க்கள் மற்றும் பதவி விலகல் ராஜினாமா – கௌரவ. எஸ். பி. திசாநாயக்க மற்றும் ஏனைய 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்

Pdf Link – Click Here

2067/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 18 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2067/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 18  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

போகுந்தர, ஜாலியகோடா, கஸ்பாவ பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம்

Pdf Link – Click Here

 

2067/5 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 17 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2067/5 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 17  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

தென்னண்ணேவல, வலப்பனை பி/செ பிரிவு, நுவரெலியா மாவட்டம் – மேதமகம, குருநாகல் பி/செ பிரிவு, குருநாகல் மாவட்டம் – திருத்தச் சட்டம்.  இல. 2062/35, தேதியிட்ட 16.06.2018, பல்லம்பமுனை அரநாயக பி/செ பிரிவு, கேகாலை மாவட்டம்

Pdf Link – Click Here

2067/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 17 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2067/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 17  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு தொடர்பான அறிவித்தல்

ககுனகொள்ள, குளியாபிடிய பி/செ, குருநாகல்

Pdf Link – Click Here

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2017

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2017

தொகுதி I

முதன்மைப் பக்கங்கள் மற்றும் உள்ளடக்கம்

பகுதி I

முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகள்

முக்கிய சமூகக் குறிகாட்டிகள்

அத்தியாயங்கள்

1. பொருளாதாரம், விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு, தோற்றப்பாடு மற்றும் கொள்கைகள்

2. தேசிய உற்பத்தி, செலவினம் மற்றும் வருமானம்

3. பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு

4. விலைகள், கூலிகள், தொழில்நிலை மற்றும் உற்பத்தித்திறன்

5. வெளிநாட்டுத்துறை அபிவிருத்திகளும் கொள்கைகளும்

6. இறைக் கொள்கையும் அரச நிதியும்

7. நாணயக் கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

8. நிதியியல்துறைச் செயலாற்றமும் முறைமை உறுதித்தன்மையும்

முக்கிய பொருளாதாரக் கொள்கை மாற்றங்களும் வழிமுறைகளும் : 2017

ள்ளிவிபரப் பின்னிணைப்பு

சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு

தொகுதி II

முதன்மைப் பக்கங்கள்

பகுதி II

இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும்

பகுதி III

ஆண்டுப்பகுதியில் அரசாங்கத்தினாலும் நாணயச் சபையினாலும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித்தொழில் நிறுவனங்களின் நடைமுறைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நிருவாக வழிமுறைகள்

பகுதி IV

  2017 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித்தொழில் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான முக்கிய சட்டவாக்கங்கள்

 

2067/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 17 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2067/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 17  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை துறை திணைக்களம்

18.04.2018 முதல் ஒவ்வொரு கட்டுரையிலும் கட்டாயமாக்க வேண்டிய சுங்க திணைக்களம் தேவைப்படும் கட்டளை

Pdf Link – Click Here

2067/1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 16 ஆந் திகதி திங்கட்கிழமை

2067/1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 16  ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்கம் 

16.04.2018 முதல் 22.04.2018 வரை நடைமுறையில் உள்ள பரிமாற்ற விகிதம்

Pdf Link – Click Here

2066/47 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12 ஆந் திகதி வியாழக்கிழமை

2066/47 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12  ஆந் திகதி வியாழக்கிழமை

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு 

கேகாலை மாவட்டத்தின் 75 ஏ, வல்கமா, கல்கமுவ பி/செ  பிரிவில் உள்ள நிலத்தை கையகப்படுத்துதல். 75A முத்துத் தௌந்தேந்தாதா, பங்களாவத்த, கேகாமமுவ பி/செ பிரிவு, கேகாலை மாவட்டம்

Pdf Link – Click Here

2066/46 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12 ஆந் திகதி வியாழக்கிழமை

2066/46 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12  ஆந் திகதி வியாழக்கிழமை

கம்புருபிடிய பிரதேச செயலகம்

மாத்தறை மாவட்டத்தின் காம்பூரிரியா பி/செ பிரிவு, 22, 23, 2018 அன்று சியோபாலி வன்ஷிகா மகா நிகாயாவின் ஸ்ரீ ரோஹானா மகா சபாவின் 33 ஆவது உயர் ஆணையாளர் விழா.

Pdf Link – Click Here

2066/43 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12 ஆந் திகதி வியாழக்கிழமை

2066/43 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12  ஆந் திகதி வியாழக்கிழமை

சனாதிபதி செயலகம் 

ஜனாதிபதி பிரகடனம்

Pdf Link – Click Here

2066/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12 ஆந் திகதிவியாழக்கிழமை

2066/41 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 12  ஆந் திகதி வியாழக்கிழமை

விளையாட்டு அமைச்சு

ஸ்ரீலங்கா பேட்மின்டன் குழுவிற்கான நியமிக்கப்பட்ட புதிய அதிகாரிகள் –  (1) கே.ஜி. ஜி. ஆர். எம். விஜேசிங்க – செயலாளர் மற்றும் (2) வசந்த குமார – துணைத் தலைவர்

Pdf Link – Click Here

2066/39 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

2066/39 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

காணிக் கொள்வனவு

யடதொலவத்தை, மத்துகம பி/செ பிரிவு, களுத்தறை மாவட்டம்.

Pdf Link – Click Here

2066/38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

2066/38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

தொழில், தொழிற்சங்க உறவு மற்றும் சபரகமுவ அபிவிருத்தி அமைச்சு –

தேங்காய் வளர்ந்து வரும் வர்த்தகத்திற்கான ஊதியங்கள் வாரியத்தின் முதலாளிகளின் பிரதிநிதிகள் என திரு எஸ். கே. எல். ஒபேசேகர மற்றும் திரு ஆல்பர்ட் நியமித்தார். இந்த சந்திப்பு 16.02.2019 வரை செல்லுபடியாகும்

Pdf Link – Click Here

2066/36 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

2066/36 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

தொழில், தொழிற்சங்க உறவு மற்றும் சபரகமுவ அபிவிருத்தி அமைச்சு –

01.12.2017 முதல் மூன்று வருட காலப்பகுதிக்கான சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்திற்கான ஊதியம் குழு உறுப்பினர்களை நியமித்தல்

Pdf Link – Click Here

2058 /28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 14 ஆந் திகதி புதன்கிழமை

2058 /28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 14 ஆந் திகதி புதன்கிழமை

மாகண சபைகள் மற்றும் உளூராட்சி அமைச்சு

மாநகர சபை, நகர சபை  மற்றும் பிரதேச சபைகளின் பதவி காலம் ஆரம்பிக்கப்பட்ட திகதி 06.03.2018

Pdf Link – Click Here

2066 /28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

2066 /28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 11 ஆந் திகதி புதன்கிழமை

நீதிச் சேவைகள் ஆணைக்குழு

நீதித்துறை அதிகாரிகளின் நியமனங்களை அறிவித்தல் 01.05.2018

Pdf Link – Click Here

2066 /17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2066 /17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

உள்நாட்டலுவல்கள் அலுவல்கள் அமைச்சு 

07.05.2018 சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட பொது மற்றும் வங்கி விடுமுறை என்று அறிவிக்க வேண்டும்

Pdf Link – Click Here

2066 /12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2066 /12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

பாலபிட்டிய, பெந்தோட்டா மற்றும் ஆனமடுவ பிரதேச சபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் பெயர்களை அறிவித்தல்

Pdf Link – Click Here

2066 /11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

2066 /11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

வட மாகாண சபை உறுப்பினராக என்.என். கோட்டகொடவை நியமனம் செய்யுங்கள் – திரு. எம். எல். எம். ஷாஹபீன் வார்டு எண் உறுப்பினர். நூரனியா அக்கரைப்பற்று மாநகர சபை

Pdf Link – Click Here

2066 /10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

2066 /10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

சனாதிபதி செயலகம்

அமைச்சுக்களின் செயலாளர்கள் திருமதி. எல். டி. சேனநாயக்க அனர்த்த முகாமைத்துவம் 26.03.2018 மற்றும் திரு. பி. பி. வசந்த சில்வா வீடமைப்பு மற்றும் நிர்மாணம் 28.03.2018 முதல்

Pdf Link – Click Here

2066 /5 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

2066 /5 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

பொது நிறுவன திணைக்களம்

இலங்கை வங்கியின் செலுத்தப்பட்ட மூலதனத்தை ரூபாயிலிருந்து ரூபாயிலிருந்து ரூபாயிலிருந்து ரூபாய்க்குக் குறைக்க உத்தரவு

Pdf Link – Click Here

2066 /2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

2066 /2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

நிதிக் கொள்கைத் திணைக்களம் 

மரங்களைச் சீவுவதற்கான உரிமக் கட்டணம் தொடர்பான மதுவரி அறிவித்தல் எண் 08/2018

Pdf Link – Click Here

2066 /1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

2066 /1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 09 ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்க திணைக்களம் 

09.04.2018 முதல் 15.04.2018 வரை நடைமுறையில் உள்ள பரிமாற்ற விகிதங்கள்

Pdf Link – Click Here

2065 /63 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 06 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2065 /63 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 06 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

சனாதிபதி செயலகம்

(அ) நகர்ப்புற அபிவிருத்தி செயற்றிட்ட சட்டத்தின் கீழ் கட்டடங்களுக்கான காணி ஒதுக்கீடு செய்வதற்கான நோக்கத்திற்காக கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பி/செ பிரிவு,

Pdf Link – Click Here

2065 /33 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 05 ஆந் திகதி வியாழக்கிழமை

2065 /33 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 05 ஆந் திகதி வியாழக்கிழமை

கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி திணைக்களம்

மாடல் (பீச் சீன்) மீன்பிடி ஒழுங்குமுறை திருத்தம், காஸில் வெளியிடப்பட்டது. முன்னாள். 21.02.1985 ஆம் இலக்கம் 337.48

Pdf Link – Click Here

2065 /31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 05 ஆந் திகதி வியாழக்கிழமை

2065 /31 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 05 ஆந் திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு தொடர்பான அறிவித்தல்

மஹியாவ, கண்டி கடவஸ்தர மற்றும் கங்கவட கோறலே பி/செ, கண்டி

Pdf Link – Click Here

 

2065 /30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 05 ஆந் திகதி வியாழக்கிழமை

2065 /30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 05 ஆந் திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு தொடர்பான அறிவித்தல்

கபுதுவ, திஹாகொட பி/செயலகம், மாத்தறை மாவட்டம்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2015

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2015

அரச சேவையின் மோட்டார் வாகன சாரதிகளுக்கான இணைந்த சாரதிகள் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2010

திறமை அடிப்படையில் பதவி உயர்த்துவதன் மூலம் அரச முகாமை உதவியாளர் சேவையின் அதிஉயர் வகுப்புக்கு நியமனம் செய்தல் – 2010

Pdf Link – Click Here

2065 /23 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 04 ஆந் திகதி புதன்கிழமை

2065 /23 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 04 ஆந் திகதி புதன்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

மேயரின் பெயர்கள் மற்றும் ஹப்புதலே நகர கவுன்சில் துணை மேயர் ஆகியவற்றைத் தெரிவிக்கவும்

Pdf Link – Click Here

2065 /21 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 04 ஆந் திகதி புதன்கிழமை

2065 /21  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 04 ஆந் திகதி புதன்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

திரு. ஈ. ஞானநாயகம் ஞானகுணலானன் திணைக்களத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 02, திருகோணமலை டவுன் & க்ரேட்ஸ், பிரதேச சபையின் புலியணிக்குளம் – திரு. என். இராசநாயகம் திணைக்களத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 01, டிரிகோமலை நகர சபையின் அனுபுலிபுரம்

Pdf Link – Click Here

2065 /20 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2065 /20 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண சபை

ஊவா மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக திரு. டபிள்யூ. எம். செனவிரத்ன நியமனம் அறிவித்தல்

Pdf Link – Click Here

2065 /18 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2065 /18 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி திணைக்களம்

வட மத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டத்தின் கெகிராவா பிரதேச சபையின் முதல் கூட்டத்தை அறிவித்தல்

Pdf Link – Click Here

2065 /15 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2065 /15 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

தெஹியோவிட பிரதேச சபையின் திணைக்களம் II திக்கெல்லவின் உறுப்பினராக திரு. எச். வை. எல். பத்மசிரி

Pdf Link – Click Here

2065 /14 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2065 /14 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

வர்த்தமானியில்வெளியிடப்பட்ட பெயர்களுக்கு கூடுதலாக உள்ளூர் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தல். முன்னாள். 09.08.2018 இல. 2061/42

Pdf Link – Click Here

2065 /01 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 02 ஆந் திகதி திங்கட்கிழமை

2065 /01 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 02 ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்கம்

02.04.2018 முதல் 08.04.2018 வரை சந்தை விகிதங்கள்

Pdf Link – Click Here

2064/48 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064/48 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

இலங்கை பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு –

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம், (மின்சாரம் விநியோகித்தல்) மின்சாரம் வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்கான தேவையிலிருந்து விலக்கு வழங்குவதற்கான விலக்கு வழங்கல் சான்றிதழ் வழங்கல்

Pdf Link – Click Here

2064 / 47 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064 / 47 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

உள்ளளூராட்சி திணைக்களம் –

வடமேல் மாகாணம் – சிலாபம் நகர சபையின் உள்ளூர் அரசாங்கத்தின் கூட்டத்தை அறிவித்தல்

Pdf Link – Click Here

2064 / 45 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064 / 45 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு –

வார்டு 10, தோவா, எல்ல பிரதேச சபையின் உறுப்பினராக திருமதி எ. ஏ.எம். குமாரிஹாமி  அறிவிப்பு அறிவிப்பு

Pdf Link – Click Here

2064 / 44 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064 / 44 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

மாத்தளை, காலி உள்ளூராட்சி மன்றங்களுக்கான …… மேயர்கள், துணை மேயர்கள், தலைவர் ஆகியவற்றின் பெயர்களை தெரிவிக்கவும்.

Pdf Link – Click Here

2064 / 43 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064 / 43 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

அனுராதபுர மாவட்டத்தின் கெகிராவா பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்களை தெரிவித்தல்

Pdf Link – Click Here

2064 / 42 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064 / 42 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

கண்டி மாவட்டத்தின் புஜாபிட்டிய பிரதேச சபையின் உள்ளூர் அதிகார சபையின் அங்கத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

Pdf Link – Click Here

2064 / 35 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

2064 / 35 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆந் திகதி வியாழக்கிழமை

உள்ளூராட்சி திணைக்களம் –

மேல் மாகாண சபை – சீதவாக்கபுற  நகர சபையின் கூட்டத்தை அறிவித்தல்

Pdf Link – Click Here

2064 / 31 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆந் திகதி புதன்கிழமை

2064 / 31 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆந் திகதி புதன்கிழமை

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு

குழந்தைகள் கட்டளை சட்டம்  (அத்தியாயம் 61)

Pdf Link – Click Here

2064 / 26 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆந் திகதி புதன்கிழமை

2064 / 26 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆந் திகதி புதன்கிழமை

சனாதிபதி செயலகம்

திருத்தம் உ.ம் வர்த்தமானி இல. 1933/13 தேதியிட்ட 21.09.2015, மற்றும் கால அட்டவணையில் அமைக்கப்பட்ட முறையில் 28.03.2018 இலிருந்து மேலும் திருத்தப்படுகிறது.

Pdf Link – Click Here

2064 / 25 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆந் திகதிபுதன்கிழமை

2064 / 25 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆந் திகதிபுதன்கிழமை

மின்சாரம், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு –

கொழும்பு மாவட்டத்தில், வெலிபிலிவா, கடுவெல பி/செ பிரிவில் நிலத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் கட்டளை

Pdf Link – Click Here

2064 / 24 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2064 / 24 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

பெதங்கள்ள, ரிதீகம பி/செ பிரிவு, குருநாகல் மாவட்டம்

Pdf Link – Click Here

2064 / 21δ ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2064 / 21δ ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

சனாதிபதி செயலகம் –

திருமதி டபிள்யூ. எம். எம். எஸ். டி. விஜயபண்டாரா மற்றும் ஏனைய இரண்டு அமைச்சர்கள் செயலாளர்களாக நியமிக்க உத்தரவு

Pdf Link – Click Here

2064 / 11 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

2064 / 11 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

சனாதிபதி செயலகம்

திருமதி ஐ.நா. வீரசேகரவை ஜனாதிபதியின் ஊழியர்களுக்கு நியமிப்பதற்கு உத்தரவு 12.03.2018

Pdf Link – Click Here

2064 / 10 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

2064 / 10 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

உள்ளுராட்சி திணைக்களம்

உள்ளூர் அரசாங்கத்தின் கூட்டத்தை அறிவிக்கவும். மேயர் தெரிவு செய்ய ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

Pdf Link – Click Here

2064 / 7 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

2064 / 7 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு –

காலி மாவட்டத்திலுள்ள மொடலியா, ருவன்வெல்ல பி/செ பிரிவு, கேகாலை மாவட்டம் மற்றும் நயபமுல, பட்டெகாமா பி/செ பிரிவு,

Pdf Link – Click Here

2064 / 5 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

2064 / 5 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

2018 – உள்ளூர் நிர்வாகிகளுக்கு நியமிக்கப்பட்ட மேயர்கள், துணை மேயர்கள் …….. போன்றவற்றின் பெயர்களைத் தெரிவிக்கவும்

Pdf Link – Click Here

2064 / 3 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

2064 / 3 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

காணிக் கொள்வனவு

கம்பஹா மாவட்டம், வத்தளை பி/செ பிரிவு, மத்துமகல பிரதேசத்தில் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு

Pdf Link – Click Here

2064 / 1 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

2064 / 1 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்கம்

பரிவர்த்தனை விகிதம் 26.03.2018 முதல் 01.04.2018 வரை செயல்படுத்தப்படும்

Pdf Link – Click Here

2063/ 47 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2063/ 47 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

ஊவா மாகாண சபை

தொழிலாளர் ஆணைக்குழு ண் நியதிச்சட்டத்தின் கீழ்  ஊவா மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தல்  4/2010

Pdf Link – Click Here

2063/ 46 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2063/ 46 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணிக் கொள்வனவு

பெரகம, முலதியான பி/செ பிரிவு, மாத்தறை மாவட்டம்

Pdf Link – Click Here

2063/ 41 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

2063/ 41  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூர் மேலதிக அதிகாரசபையின் 66 பி பிரிவு (1) பிரிவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மேயர்கள், துணை மேயர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர்

Pdf Link – Click Here

2063/ 39 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

2063/ 39 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

சனாதிபதி செயலகம்

மதிப்பிற்குரிய ஆர்.மதுமா பண்டார சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சராக, திகதி  08.03.2018

Pdf Link – Click Here

2063/ 34 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

2063/ 34 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு –

சமுதாயத்தின் நோக்குக்காக ‘ஸ்ரீ லங்கா சமுதாயம் பிசியோ தெரபி’ அங்கீகாரம் கொடுக்கும் என்று தெரிவிக்கவும்.

Pdf Link – Click Here

2063/ 33 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

2063/ 33 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு –

‘ஹாகாய் நிறுவனம்’ சமுதாயத்தின் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படுவதைத் தெரிவித்தல்

Pdf Link – Click Here

2063/ 31 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

2063/ 31  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆந் திகதி வியாழக்கிழமை

கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்

2018 பெப்ரவரி மாதம் 123.7 ஆக நுகர்வோர் விலை குறியீட்டை அறிவிக்கவும்

Pdf Link – Click Here

2063/ 25 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆந் திகதி புதன்கிழமை

2063/ 25 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆந் திகதி புதன்கிழமை

காணிக் கொள்வனவு

பேரதேனிய, உடுநுவர பி/செ, கண்டி மாவட்டம்

Pdf Link – Click Here

2063/ 24 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆந் திகதி புதன்கிழமை

2063/ 24   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆந் திகதி புதன்கிழமை

காணிக் கொள்வனவு

நயகாவத்தை, பெலியத்தை, ஹம்பாந்தோட்டை மாவட்டம்

Pdf Link – Click Here

2063/ 15 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

2063/ 15  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு

மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கான  மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின்  அறிவிப்பு

Pdf Link – Click Here

2063/ 12 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

2063/ 12  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை மத்திய வங்கி (அந்நிய செலாவணி) –

2017 ஆம் ஆண்டில் வெளிநாட்டுச் செலாவணி சட்டம் 2017 ல் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்க அனுமதித்தல்

Pdf Link – Click Here

2063/11 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

2063/11    ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

காணிக் கொள்வனவு

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பி/செ பிரிவில் நிலத்தை கையகப்படுத்தியதற்கான இழப்பீடு

Pdf Link – Click Here

2063/6 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

2063/6   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

காணிக் கொள்வனவு

நிவித்திகலை, நிவித்திகலை பி/செ, இரத்தினபுரி

Pdf Link – Click Here

2063/3 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

2063/3 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்கம்

19.03.2018 முதல் 25.03.2018 வரை பரிவர்த்தனைக்கான விகிதங்கள்

Pdf Link – Click Here

2063/2 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதிதிங்கட்கிழமை

2063/2   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதிதிங்கட்கிழமை

காணிக் கொள்வனவு

எல்தெனிய, கம்பஹா மாவட்டத்தில் மஹர பி/செ பிரிவில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு

Pdf Link – Click Here

2063/1 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதி திங்கட்கிழமை

2063/1   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆந் திகதிதிங்கட்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளூர் அதிகாரிகள், வர்த்தமானியில்  வெளியிடப்பட்ட பெயர்களுக்கு கூடுதலாகத் திரும்பின. 09.03.2018 ஆம் இல. 2061/42

Pdf Link – Click Here

2062/51 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆந் திகதி சனிக்கிழமை

2062/51   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆந் திகதி சனிக்கிழமை

தேர்தல் ஆணைக்குழு  – கொழும்பு MC & 10 பிற உள்ளூர் சபைகளுக்கான மேயர்கள், துணை மேயர்கள், தலைவர்கள் மற்றும் துணைவேந்தர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

Pdf Link – Click Here

2062/50 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆந் திகதி சனிக்கிழமை

2062/50   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆந் திகதி சனிக்கிழமை

பிரகடனங்கள் மற்றும் சி, ஜனாதிபதியினால்

பொது பாதுகாப்பு கட்டளைகளை நீக்குதல்

Pdf Link – Click Here

2062/47 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2062/47   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு –

வர்த்தமானி திருத்தம் அறிவிப்பு. முன்னாள். மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 15.12.2017 இல. 2049/59

Pdf Link – Click Here

2062/46 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2062/46   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணிக் கொள்வனவு

திருத்தம், கரங்கோட, எலபத்த பி/செ, இரத்தினபுரி மாவட்டம்

Pdf Link – Click Here

2062/44 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2062/44   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சித் திணைக்களம்

மத்திய மாகாணம் –  கொட்டகளை PS மற்றும் 31 உள்ளூராட்சி மன்றங்களின் முதல் கூட்டத்திற்குத் தெரிவிக்கவும்

Pdf Link – Click Here

2062/43 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2062/43   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணிக் கொள்வனவு

பொல்கஹவளை, பொல்கஹவளை பி/செ, குருணாகல் மாவட்டம்

Pdf Link – Click Here

 

2061/42 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2061/42   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு

கிளிநொச்சி, மாத்தறை, புத்தளம், மொனராகலை, அனுராதபுரம், இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, பொலன்னறுவை, முல்லைத்தீவு, குருநாகல், காலி, நுவரெலியா, அம்பாறை, கேகாலை, கம்பஹா, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, கொழும்பு, வவுனியா, கண்டி

Pdf Link – Click Here

2061/40 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/40   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு

கொரதொட, கடுவலை பி/செ, கொழும்பு மாவட்டம்

Pdf Link – Click Here

2061/39 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/39   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு

ரத்மலே, அகலவத்த பி/செ, களுத்தறை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/38 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/38   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

காணி கொள்வனவு

இரத்தினபுரி நகரம், இரத்தினபுரி பி/செ பிரிவு, மிரஹவத்த, வெளிமட பி/செ, பதுள்லை மாவட்டம் மற்றும் வர்த்தமானி திருத்தங்கள். முன்னாள். 05.02.2018 ஆம் திகதிய 2057/03, தேவிநுவர டி / பி பிரிவு

Pdf Link – Click Here

2061/37 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/37   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு

வெள்ளமிடியவா, தம்புள்ளை மற்றும் கலேவெல பி/செ, மாத்தளை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/36 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/36   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

காணி கொள்வனவு

உடுவா, ஹொரண பி/செ, களுத்தறை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/35 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/35   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி வியாழக்கிழமை

காணி கொள்வனவு

ஹண்டுபெல்பொள, ஹொரண பி/செ, களுத்தறை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/34 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

2061/34   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆந் திகதி வியாழக்கிழமை

காணிக் கொள்வனவு

ஒளபொடுவ மற்றும் தளகள்ள, ஹொரண பி/செ, களுத்தரை

Pdf Link – Click Here

2061/32 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆந் திகதிபுதன்கிழமை

2061/32   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆந் திகதிபுதன்கிழமை

இடம் கொள்வனவு

மாலதுவ, ஹிக்கடுவ டி / எஸ் பிரிவு, காலி மாவட்டம் மற்றும் காஸில் ஒரு திருத்தம். முன்னாள். 12.09.2014 ஆம் திகதி 1879/17 ஆம் திகதி இமடுவை டி / எஸ் பிரிவு

Pdf Link – Click Here

2061/31 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆந் திகதிபுதன்கிழமை

2061/31   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆந் திகதிபுதன்கிழமை

காணிக் கொள்வனவு

மிரஹவத்த, வெளிமடை பி/செ பிரிவு, வெளிமட, பதுள்ளை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/22 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/22   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07  ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை துறை திணைக்களம்

மேக்கர்ல், பீஸ், விதைகள் முதலியவற்றில் விசேட பொருட்களின் விலையை சுமத்த உத்தரவு 6 மாத காலத்திற்கு 08.03.2018

Pdf Link – Click Here

2061/21 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/21   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

சனாதிபதி செயலகம்

பொது பாதுகாப்பு கட்டளை, பிரிவு 5 ன் கீழ் ஜனாதிபதியால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்

Pdf Link – Click Here

2061/2௦ ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/2௦   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

தொடன்கொட்டுவ, கொஸ்வத்த, ரிதீகம பி/செ பிரிவு, குருநாகல் மாவட்டம்

Pdf Link – Click Here

2061/19 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/19   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

கிரிந்திகளை, இப்பாகமுவ பி/செ பிரிவு, குருநாகலை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/18 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/18   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

சனாதிபதி செயலகம்

பொது பாதுகாப்புக்காக இலங்கையில் ஒரு பொது அவசர நிலை பிரகடனம்

Pdf Link – Click Here

2061/17 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/17   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ப/செ பிரிவு, கொழும்பு மாவட்டம்

Pdf Link – Click Here

2061/15 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/15   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு

நிலம் கையகப்படுத்துதல் – கலேவெல பி/செ பிரிவு மற்றும் தம்புள்ளை 01.01.2018 இருந்து 31.12.2018 க்கு ஒரு பெறுவதற்கான அதிகாரியாக திரு எம். திலகரத்ன  நியமிக்கப்பட்டது

Pdf Link – Click Here

2061/14 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/14   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

தளவதுகொட, மகரகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டத்திற்கான ஹோகந்தர வீதி அபிவிருத்தி

Pdf Link – Click Here

 

2061/13 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/13   ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

காணிக் கொள்வனவு

புத்தியாகம, வீரகெட்டிய பி/செ பிரிவு, ஹம்பாந்தோட்டை மாவட்டம்

Pdf Link – Click Here

2061/12 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

2061/12  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

பொதுச் சேவை பரஸ்பர சேமலாப சங்கம் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விதிகள்

Pdf Link – Click Here

2061/11 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கக்கிழமை

2061/11  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கக்கிழமை

மின்வலு மற்றும் மீள்புத்தாக்கசக்தி அமைச்சு

மன்னார் மாவட்ட, மன்னர் பிரதேச செயலகப் பிரிவின், தொட்டாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவின் காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு.

Pdf Link – Click Here

2061/10 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கக்கிழமை

2061/10  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கக்கிழமை

மத்திய மாகாண சபை

பூஜாபிட்டிய பிரதேச சபைக்கான உல்லாச வரி விதித்தல்

PDF link : Click Here

No. 2061/9 – MONDAY, MARCH 05, 2018

2061/9 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கக்கிழமை

காணிக் கொள்வனவு தொடர்பான அறிவித்தல்

ஹன்குரங்கெத, உடஹெவஹெட பி/செ பிரிவு, நுவரெலியா மாவட்டம்

PDF link : Click Here

2061/8 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

2061/8 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சு

கண்டி கங்கவடன கோறளை பி /செ பிரிவு, களில் அஸ்கிரிய புஷுஸ்டர் நீர் இறைக்கும்இயந்திரசாலை மற்றும் குழாய் வழிக்கு பிரவேசிப்பதன் பொருட்டு தற்போதுள்ள பாதையின் வழியூரிமைக்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அரிவித்தல்

PDF link : Click Here

2061/6 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

2061/6 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

இடம் கொள்வனவு தொடர்பான அறிவித்தல்கள்

பன்னிபிட்டிய, மஹரகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம்

PDF link : Click Here

2061/5 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

2061/5  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதிதிங்கட்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

கொட்டவா மற்றும் மாகும்புற, மஹரகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம்.

PDF link : Click Here

2061/4 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

2061/4 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள்

மாநகர சபைகள் , நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றின் அலுவலக காலங்களை மாற்றுவதற்கான கட்டளை

PDF link : Click Here

2061/2 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

2061/2 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

இலங்கை சுங்கம் (பொது அறிவித்தல்)

அந்நியச் செலாவணி வீதம் 05.03.2018 இலிருந்து 11.03.2018 வரை அமுலில் இருக்கும்

PDF link : Click Here

2061/1 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

2061/1 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி திங்கட்கிழமை

விளையாட்டு அமைச்சு

2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் உக்கப்பதார்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டம், தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல். 2017 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சட்டம், 0 1 .01.2018 இல் இருந்து அமுலில் இருக்கும்.

PDF link : Click Here

2060/31 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆந் திகதி சனிக்க்கிழமை

2060/31  ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆந் திகதி சனிக்க்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

மாம்புல்கொட, ஹோமாகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம் – பிராமனகம,  ஹோமாகம பி/செ பிரிவு, கொழும்பு மாவட்டம்

PDF link : Click Here

2060/30 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆந் திகதி சனிக்கிழமை

2060/30 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆந் திகதி சனிக்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

அடிளிகொட, நான்கு கடவைகள் காலி பிரதேச செயலகம், காலி மாவட்டம் – மிளித்துவ, நான்கு கடவைகள் காலி பிரதேச செயலகம்

PDF link : Click Here

2060/29 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2060/29 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

சனாதிபதி செயலகம்

Order to extend the time of National Salaries and Cadre Commission from 03.03.2018 to two Year Period

PDF link : Click Here

2060/27 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2060/27 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

Paranthan, Kandawalai D/S Division, Kilinochchi District

PDF link : Click Here

2060/27 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2060/27 ஆம் இலக்க – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

Compensation for the acquisition of the Land in Weralugastenna, Raththota D/S Division, Matale District

PDF link : Click Here

2060/ 25 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

2060/ 25 ஆம் இலக்கம் – 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

காணிக் கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

Jaffna Town, D/S Division, Jaffna, Malaththawal, Wellawaya D/S Division, Monaragala District and An Amendment of D/S Division, Minipe, Published in Gaz. Ex. No. 1840/37 of 12.12.2013

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2010

தொழில் திணைக்கள எழுதுவினைஞர் சேவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதிய எழுதுவினைஞர்களை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைக்குள் உள்ளீர்த்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2010

1999, 2005 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்த பட்டதாரிகளின் தாபன மற்றும் சேவைப்பிரச்சினைகளை தீர்த்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2010

அரசாங்க முகாமைத்துவ சேவையின் சிறப்பு வகுப்பிலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2011

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2010

நீர்ப்பெருக்கு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி மற்றும் மண்சரிவுகள் காரணமாக சேவைக்கு வருகை தராத அரச அலுவலர்களுக்காக விசேட விடுமுறை வழங்கள் – 2010 மே

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2010

விசாரணை நியாய சபைகளை நியமனம் செய்கின்ற போது தேவைப்படும் தகைமைகளை திருத்தம் செய்தல் – தாபன விதிக்கோவையில் தொகுதி II இன் அத்தியாயம் XLVIII

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2010

அரசாங்க அச்சக இலிகிதர் சேவையினை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு உள்ளீர்த்தல்

Pdf Link – Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04-2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04-2010

மாண்புமிகு ஜனாதிபதி  அவர்களின் இரண்டாவது பதவி காலத்துக்கான கடமைகள் ஆரம்பம்.

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2010

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2010

இலங்கை அரச நூலகச் சேவை பிரமாணக் குறிப்பின் படி நூலகச் சேவையில் வகுப்பு 11 / வகுப்பு 1 மற்றும் விசேட வகுப்புக்களுக்கு பரீட்கை நடத்தாது தரமுயர்த்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2009

2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகளின் பெயர்ப் பட்டியல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2009

“சௌபாக்கியம் மிக்க தசாப்தத்திற்கு நடைபோடுவோம்” நிகழ்ச்சித்திட்டம் – 2010

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2009

அரச அலுவலர்களுக்கும், அரச ஓய்வு பெறுநர்களுக்கும் செலுத்தப்படும் வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2009

அரசாங்க, மாகாண அரசாங்க சேவைகளில் தற்காலிக, அமய, பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்த ஆரம்ப தரத்திக் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2009

இலங்கை அரசாங்க நூலகர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை அமுல்படுத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2009

அரச கரும மொழி கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான பொறுப்புக்களைக் கையளித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2009

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையினை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு உள்ளீர்த்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2009

அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் நாடளாவிய சேவைகளின் வினைத்திறன் காண் தடைப் பரீட்சை மற்றும் இரண்டாம் மொழிப்பரீட்சை ஆகியவற்றை இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் நடாத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2009

அரசியலமைப்பு மற்றும் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளின் பயன்பாடு தொடர்பான ஏற்பாடுகள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2009

உள்வருகை மற்றும் வெளிச்செல்கையை உறுதிப்படுத்துவதற்காக விரலடையாளப் பதிவு யந்திரங்களை உபயோகித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2009

அலுவலகப் பணியாளர் சேவை வகுப்பு I இல் உள்ள அலுவலர்களுக்கு சீருடை வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:O: 07/2009

தொழிற் சங்கமொன்றின் அல்லது தொழிற்சங்க கூட்டவையொன்றின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் உறுப்பினர் ஓருவருக்கு அதில் பங்குபற்றுவதற்காக புகையிரத ஆணைச் சீட்டுக்குப் பதிலாக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்வண்டிகளில் பிரயாணம் செய்வதற்கான செலவுகளை மீளளிப்புச் செய்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:04/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2009

மொழி பெயர்ப்பு, பேச்சு மொழி பெயர்ப்பு மற்றும் தட்டச்சிடுவதற்கான கட்டணங்களைத் திருத்தம் செய்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2009

பொது துறைக்கு தேசிய வாழ்க்கைத்தொழிற் தகைமை (NVQ) முறைமையின் ஒன்றிணைப்பினால் ஆட்களை உட்சேர்ப்பதற்கான ஒரு திட்டம்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2009

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2009

2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகளின் பட்டியல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 30/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 30/2008

தாபன விதிக்கோவை அத்தியாயம் XXIV பிரிவு 10 ற்கான திருத்தம் – இடர்க்காலக் கடன்கள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 27/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 27/2008

வெளிநாட்டில் சமயம் பரப்பும் குழுவில் பணிபுரியும் பொருட்டு தேரர்களுக்கு சம்பளமற்ற லீவு வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 26/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 26/2008

2009 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டப் பிரேரணைப்படி அரச அலுவலர்களுக்கும், அரச ஓய்வு பெறுநர்களுக்கும் செலுத்தப்படும் வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 25/2008

1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிக்கூடச் சட்டத்தின் கீழ் அரசாங்க ஆவணங்களை அட்டவணைப்படுத்தலும் பாதுகாத்தலும்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2008

நேர்முகப்பரீட்சைச் சபைகளில் உறுப்பினர்களாகவும், உதவி அலுவலர்களாகவும் பணியாற்றியமைக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள்

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2008

நேர்முகப்பரீட்சைச் சபைகளில் உறுப்பினர்களாகவும், உதவி அலுவலர்களாகவும் பணியாற்றியமைக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/2008

பூநகரி பிரதேசத்தை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டதை முன்னிட்டு படைவீரர்களின் வாரமாக பிரகடனப்படுத்தல்

PDF link : Click Here

உள்ராளூட்சி சட்டங்கள்

உள்ராளூட்சி சட்டங்கள்
வெளிப்படைத் தன்மையும் பொது மக்கள் பங்களிப்பும் கொண்ட
பிரதேச அரசாங்கத்தை(உள்ராளூட்சி) உருவாக்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
சமூகப் பங்களிப்பு நிகழ்ச்சித் திட்டப் பிரிவு
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

 

PDF link : Click Here உள்ராளூட்சி சட்டங்கள்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2008

நின்று நிலைக்கும் அபிவிருத்தியை அடையும் பொருட்டு சுற்றாடற் பட்டயமொன்றினை அறிமுகப்படுத்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2008

தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்து வெளியிட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் – 2007

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2008

முன்னால் சனாதிபதி டி.பி. விஜேதுங்க அவர்களின் மரணச் சடங்கு 2008.09.25 ஆம் திகதி தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 17/2008

அரச முகாமை உதவியாளர் சேவையின் வகுப்பு I மற்றும் அதிஉயர் வகுப்பின் சம்பள முரண்பாடுகளை அகற்றுதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2008

1994/1996 ஆண்டுக் காலப்பகுதியில் செயல்வலுப்பெற்ற சம்பள மீளாய்வுகளில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2008(i)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2008(i)

உத்தியோக பூர்வ வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குதலும், அவ்வாகன சாரதிகளுக்கான மேலதிக நேர மற்றும் இணைந்த படி செலுத்தலு

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2008

அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடமிருந்து பொது மக்களுக்கு கிடைக்கப் பெறும் ஏனைய நலனோம்பல் வசதிகளை அமய, தற்காலிக, ஒப்பந்த, பதிலீட்டு அடிப்படையில் பணியாற்றும் நாளாந்த சம்பளம் பெறும் அலுவலர்களுக்கும் வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2008

வாழ்க்கைச் செலவுப் படிகளைப் பல்வேறு முறைகளில் செலுத்துதலைத் திருத்தியமைத்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2008

திறமை அடிப்படையில் பதவி உயர்த்துவதன் மூலம் அரச முகாமை உதவியாளர் சேவையின் அதிஉயர் வகுப்புக்கு நியமனம் செய்தல் – 2007

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2008

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2008

2008 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டப் பிரேரணைக்கு அமைய அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி செலுத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 24/2007

பயன்படுத்தப்படாத லீவுகளை மதிப்பிடுவதன் மூலம் அரச அலுவலர்களின் வினைத்திறமையை அதிகரித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 23/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 23/2007

அலுவலக வாகன வசதிகளுக்கு உரித்துடையதும், கௌரவ அமைச்சர்களினதும், கௌரவ பிரதி அமைச்சர்களினதும் பதவியில் இணைக்கப்பட்டுள்ளதுமான அலுவலர்களுக்கு அலுவலக வாகனத்துக்குப் பதிலாக மாதாந்தம்போக்குவரத்துப் படி வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 19/2007

அலுவலக வாகன வசதிகளுடன் அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்ட உசாவுநர்கள் / மதியுரைஞர்கள் ஆகியோருக்கு அலுவலக வாகனங்களை வழங்குவதற்குப் பதிலாக மாதாந்தப் படிக் கொடுப்பனவுகள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2007

அரச அலுவலர்களுக்கு வங்கிகள் ஊடாக சொத்துக் கடன் மற்றும் வாகனக் கடன் வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2007

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்காக வேட்பு மனுக்களை முன்வைத்த அரச அலுவலர்களுக்கு சலுகை வழங்குதல்n

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2007

உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு லீவு பெற்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரசியல் உரிமைகள் உரித்துடைய அலுவலர்களுக்கு கடமை லீவு வழங்குதல்nt

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2007

தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV இன் பிரிவு 10 – இடர்காப்புக் கடன்

PDF link : Click Here

 

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2007

உலகத் தொழில் நுட்பத்தினதும் இலங்கைப் பண்பாட்டினதும் எண்ணக்கருவின் அடிப்படையில் இலங்கையின் தனித்துவத்தை கட்டியெழுப்புதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2007

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2007

அரசகரும மொழிகளில் ஒன்றுக்கு மேல் தேர்ச்சி பெறும் அரசாங்க அலுவலர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு செய்தல்.

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 21/2006

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் தற்காலிக, அமய, ஒப்பந்த அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த ஊழியர்களை நிரந்தரமாக்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 18/2006

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 14/2006

திறமை அடிப்படையில் பதவி உயர்த்துவதன் மூலம் அரச முகாமை உதவியாளர் சேவையின் அதிஉயர் வகுப்புக்கு நியமனம் செய்தல் – 2006

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2006

தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 7 ஆம் 8 ஆம் பிரிவுகளை திருத்துதல்

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2001(IV)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2001(IV)

2001 ஆண்டு 2 ஆம் இலக்க தபுதாரர் அனாதைகள் ஓய்வூதிய (திருத்தச்) சட்டம் அரச பெண் அலுவலர்களின் விருப்புத் தெரிவிப்பு

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 12/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 12/2006

2006 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுக்கமைய அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு படி செலுத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2006

உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கவும், அவ்வாகன சாரதிகளுக்கான மேலதிக நேரம் மற்றும் இணைந்த படி செலுத்தலும்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2006

அரச ஊழியர்கள் பெற்றுக் கொள்ளாத விடுமுறைகளுக்கு ஊக்குவிப்பு படி செலுத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2006

அரசாங்க நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவின் கடமைகளை கணனிமயப்படுத்தல் (இ – மனித வள முகாமைத்துவ கருத்திட்டம்)

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2006

2006 வரவு செலவுத் திட்டத்தின் படி அரச சேவையில் சம்பளங்களை மறுசீரமைத்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2006

நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமை காரணமாக 1983 யூலை மாதத்திற்கு பின் தொழில்களை இழந்த அரச அலுவலர்கள், உள்ளூராட்சி சேவையின் அலுவலர்களின் மற்றும் கூட்டுத்தாபன பணியாளர்களுக்கு நிவாரணம் அளித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2006

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2006

2006 வரவு செலவுத் திட்டத்தின் படி அரச சேவையில் சம்பளங்களைத் திருத்தல்

PDF link : Click Here

2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்

2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்

PDF link : Click Here

 

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

PDF link : Click Here

 

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்கு விதிகள்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்கு விதிகள்

PDF link : Click Here

தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கான படிவங்கள்

தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்பம்

PDF link : Click Here

தகவல் கோரிக்கை கிடைக்கப்பெற்றமைக்கான விண்ணப்பம்

PDF link : Click Here

தகவல் கோரிக்கைகள் பதிவுக்கான விண்ணப்பம்

PDF link : Click Here

தகவல் வழங்குவதற்கான தீர்மானம்

PDF link : Click Here

தகவல் கோரிக்கைகள் நிராகரிப்பு

PDF link : Click Here

தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

PDF link : Click Here

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமைச்சட்டத்துக்கு இணங்க கோரபட்ட தகவல் (Communication to Third Party)

PDF link : Click Here

மேன்முறையீட்டுப் ஏற்றுகொண்டமைக்கான படிவம்

PDF link : Click Here

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமைச்சட்டத்திற்கிணங்க மேன்முறையீட்டுப் பதிவு

PDF link : Click Here

குறிதளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீட்டுப் படிவம்

PDF link : Click Here

கோரிக்கைகளை நிராகரித்தல் பதிவு

PDF link : Click Here

தகவல் அலுவலகரின் விபரம்

PDF link : Click Here

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டும் மேன்முறையீட்டு

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1999(VI)/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1999(VI)/2005

அரச அலுவலர்கள் நீதிச் சேவை அலுவலர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் நியதிச் சட்டமுறை சபைகளின் அலுவலர்களுக்காக உத்தியோகபூர்வ வாகன வசதியளித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1999(v)/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1999(v)/2005

அரசாங்க அலுவலர்கள்/ நீதித்துறை அலுவலர்கள் /ஆகியோருக்கும் அரசாங்கக் கூட்டுத்தாபன நியதிச் சட்ட சபைகளின் அலுவலர்களுக்கும் அரச கரும போக்குவரத்து வசதிகள் அளித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1993(III)/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1993(III)/2005

கடமையின் போது காயம் அடைகின்ற அரச அலுவலர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 20/2005

துவிச்சக்கர வண்டி (சைக்கிள்) ஒன்றை கொள்வனவு செய்வதற்கான கடன் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2005

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பதவிகளுக்கான படிகள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2005

அரச நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள், மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தற்காலிக, அமைய, பதிலீட்டு, சலுகை அத்துடன் ஒப்பந்த அடிப்படையின் பேரில் ஆட்சேர்ப்புச் செய்த ஊளியர்களை நிரந்தரமாக்குதல்

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 12/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 12/2005

2005 ஆம் ஆண்டின் வரவுசெலவு திட்டத்தில் அரச அலுவலர்களுக்காக உத்தேசிக்கப்படட புதிய காப்புறுதித் திட்டத்தை ஸ்தாபித்தல் (அக்ரஹார)

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:11/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2005

2004.12. 26 ஆம் திகதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் விளைவாக அனர்த்தத்திற்குட்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு படிகள் வழங்குதல்

PDF link : Click Here

இடைக்கால வரைபு அறிக்கை

இடைக்கால வரைபு அறிக்கை

இடைக்கால வரைபு அறிக்கை, வழிப்படுத்தற் குழுவின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால்  அரசியலமைப்புச்  செயலகத்தில்  2017செப்ரெம்பர் 21 ஆம் திகதி   முன்வைக்கப்பட்ட்டது.   2017 ஆகஸ்ட் 31 ஆம் திகதி  இற்றைப்படுத்தப்பட்ட  இடைக்கால  வரைபு அறிக்கையானது  வழிப்படுத்தற் குழுவின் அங்கத்தவர்களது கருத்துக்களையும்  அவதானிப்புக்களை யும்  உள்ளடக்கியுள்ளது. இவ் இடைக்கால வரைபு அறிக்கையில்  அரசியற் கட்சிப் பிரதிநிதிகளின் சிங்கள, தமிழ் மற்றும்  ஆங்கிலமொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை சமர்ப்பித்தவர்கள் /  மதிப்புக்குரிய அங்கத்தவர்களது அனுமதியுடன் பாராளுமன்ற பொருள்கோடல்  பிரிவினரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2005

கடற் கொந்தளிப்பின் விளைவாக அநர்த்தத்திற்கு உட்பட்ட வீடுகள் சொத்துகள் உள்ள அரச அலுவலர்களினால் நிலம், வீட்டுப் பொருட்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு பெறப்பட்ட கடன் தொடர்பிலான நிவாரணம்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005(III)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005(III)

தாபன விதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 11 ஆம் பிரிவுக்கான திருத்தம்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005(II)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005(II)

தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV இன் பிரிவு 11 ஐ திருத்துதல் – சொத்துக்கடன்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005(I)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005(I)

தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV இன் பிரிவு 11 ஐ திருத்துதல் சொத்துக்கடன்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2004(II)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2004(II)

2005 வரவு செலவுத்திட்டதில் அரச ஊழியர்களுக்கு முன்வைக்கப்பட்ட சம்பள மீளமைப்பு யோசனை

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2005

தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV இன் பிரிவு 11 ஐ திருத்துதல் சொத்துக்கடன்

PDF link : Click Here

රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ අංක: 06/2005

රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ අංක: 06/2005

2004 திசெம்பர் மாதம் 26 ஆந் திகதி கடல் கொந்தளிப்பு காரணமாக சேவைக்கு வருகைதராதவர்களுக்கு விசேட லீவு வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2005

2004 திசெம்பர் மாத வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதங்களின் பொருட்டு அரச அலுவலர்களுக்கு விசேட முற்பணமொன்றை வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2005

அரச அலுவலரொருவர் பெற்றுக் கொள்ளாத விடுமுறைகளுக்காக ஊக்குகை படி பெற்றுக் கொள்ளல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2005

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2005

2004 திசெம்பர் 26 ஆம் திகதியன்று ஏற்பட்ட கடற்கொந்தளிப்பினால் அனர்த்தஙகளுக்கு உள்ளாக்கப்பட்டு உடைமைகளை இழந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 31/2001(II)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 31/2001(II)

தாபனவிதிக் கோவையின் II ஆம் பாகத்தின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 உட் பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை அலுவலர்களின் பெயர்ப் பட்டியல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 29/1998(1)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:  29/1998(1)

ஒரு மொழிக்கு மேற்பட்ட மொழித்தேர்ச்சி உடைய அரச அலுவலர்களுக்கு ஊக்குகைப் படி செலுத்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1999(iv)/2004

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 22/1999(iv)/2004

அரச ஊளியர்களுக்கு/ நீதித்துறை அதிகாரி/ கூட்டுத்தாபன ஊழியர்களுககு உத்தியோகபூர்வ வாகனங்களை

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2003(i)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2003(i)

அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துதல் – 2004

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2001(II)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2001(II)

2001 ஆண்டு 2 ஆம் இலக்க தபுதாரர் அனாதைகள் ஓய்வூதியத் ( திருத்த ) சட்டம், அரச பெண் அலுவலர்களின் விருப்புத் தெரிவிப்பு.

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2004

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2004

2005 வரவு செலவுத்திட்டதில் அரச ஊழியர்களுக்கு முன்வைக்கப்பட்ட சம்பள மீளமைப்பு யோசனை

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2004

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:   07/2004

அரசியல் உரிமைகளை பயன்கொள்ளுதல் தாபன விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 1 ஆம் பிரிவை திருத்தம் செய்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2004

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 04/2004

2004 செப்தெம்பர் மாதம் 21 ஆந் திகதி உலக சமாதான தினத்தில் கால்நடை கொல்களம்கள், மதுபான விற்பனை சாலைகள் மற்றும் தவறணைகளை மூடிவைத்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2004

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 01/2004

2004 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் வடமேல் மாகாண சபை வாக்கெடுப்புகளை நடாத்தவதற்காக வேண்டிய பணிற்றொகுதி

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 16/2003

தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்த்தின் 11.4 ஆம் பிரிவை திருத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 15/2003

அரச அலுவலர்களின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துதல் – 2004Salary and Pension Revision to Public Officers – 2004

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2003

அரச நிறுவனங்களில் பொலித்தீன் உற்பத்திப் பொருட் பாவனையை கைவிடுதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:12/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 12/2003

மொழிபெயர்ப்பு. பேச்சு மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சிடுவதற்கான கட்டணங்களை திருத்தம் செய்தல்

PDF link : Click Here

 

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 11/2003

அரசாங்க நிர்வாக முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் அரசின் குடிமனைகளை பொறுபடபேற்றலும் மீளகையளிக்கப்படுதலும்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 09/2003

இலங்கை கட்டடக் கலைஞர் சேவை மிகை ஊழியர் அடிப்படையில் வகுப்பு 1 க்கு தரமுயர்த்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2003

நீர்ப்பெருக்கு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி மற்றும் மண்சரிவுகள் காரணமாக சேவைக்கு வருகை தராத அரச அலுவலர்களுக்காக விசேட விடுமுறை வழங்கல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2003

சம்பள அளவு மட்டமொன்றின் தேக்க நிலை அடைந்துள்ள அலுவலர்களுக்கு வேதனவேற்றங்களை வழங்கல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 06/2003

2003 ஆம் ஆண்டின் மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சூறாவளி, மண்சரிவுகள் காரணமாக இழப்புகளுக்கு உள்ளான அரச அலுவலர்களுக்கு விசேட முற்பணமொன்றை வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2003

2002 திசெம்பர் மாத வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதங்களின் பொருட்டு அரச அலுவலர்களுக்கு விசேட முற்பணமொன்றை வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 03/2003

தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 13 ஆம் பிரிவுக்குத் திருத்தங்கள்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2003

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 02/2003

நிழற்பட பிரதிகள்/படியெடுத்தல் பிரதிகள் மற்றும் ரிசோகிராப் இயந்திரங்களை இயக்குவதற்கான படியொன்றை செலுத்துதல்

PDF link : Click Here

2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, குடும்ப வன்முறைச் செயல்கள் தடுப்புச் சட்டம்

2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, குடும்ப வன்முறைச் செயல்கள் தடுப்புச் சட்டம்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 31/2001(1)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 31/2001(1)

தாபன விதிக்கோவையின் 11 தொகுதியில் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 உட்பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை அலுவலர் பெயர்ப் பட்டியல்

PDF link : Click Here

அதி விஷேசமானட வர்த்தமான பத்திரிகை இல: 1928/26 – (வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 17, 2017).

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்)   . 1928/26 – (FRIDAY, FEBRUARY 17, 2017).

PDF link : Click Here

உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்): 1928/26

உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்): 1928/26

PDF link : Click Here

அரசியலமைப்புக்கான இருபதாம் திருத்தம்

அரசியலமைப்புக்கான இருபதாம் திருத்தம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது

கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக “அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலத்தை 2017 ஆகஸ்ட் 23 அன்று சமர்ப்பித்தார்.

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 13/2001(1)

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:
13/2001(1)

2001 ஆண்டு 2 ஆம் இலக்க தபுதாரர் அநாதை ஓய்வூதிய திருத்தச் சட்டம் அரச அலுவலர்களின் விருப்புத் தெரிவித்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2002

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 10/2002

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் மூலம் நியமனம் பெற்ற அரச அலுவலர்கள் தாபன விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 3.7 உட்பிரிவை திருத்துதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2002

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 08/2002

2002 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல், வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் வேட்பாளராக வேட்பு மனுக்களை முன்வைத்த அரச அலுவலர்களுக்கு சலுகை வழங்குதல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2002

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 07/2002

ஓய்வூதிய கொடை வழங்கலுக்கும் மாற்றிய பணிக்கொடையை வழங்கலுக்குமான புதிய முறை

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2002

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல: 05/2002

தாபன விதிக்கோவையில் V ஆம் அத்தியாயத்தில் 5 ஆம் பிரிவை திருத்தம் செய்தல் 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு செய்தல்

PDF link : Click Here

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 03/2002

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 03/2002

பார வாகன சாரதிகள் உத்தரவு பத்திரங்களைப் புதுப்பிக்கும் கட்டணங்கள்

PDF link : Click Here 03/2002

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 27/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 27/2001

அரச நிறுவனங்கள், கூடுத்தபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவைகளில் தற்காலிக, அமய, பதிலீட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்த ஊழியர்களை நிரந்தரபடுத்துதல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 26/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 26/2001

அரச சேவையின் கனிஷ்ட தரங்களிலுள்ள தற்காலிக, அமய பதிலீடு ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 24/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 24/2001

அரச ஊழியர்களுக்கும் ஓய்வுப்பெற்றோருக்கும் இடைக்கால படியொன்றை செலுத்துதல்.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 21/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 21/2001

பொது எழுதுநர்/தட்டெழுத்தாளர்/சிறாப்பர்/பண்டசாளைக் காப்பாளர்/கணக்குப் பதியுநர் ஆகிய சேவைகளின் அலுவலர்களை வகுப்பு 1 க்கு உயர்த்துதல்.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 19/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 19/2001

கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் பொதுச் சேவை குடிமனைகள் தொடர்பான கொள்கைத் திட்டம்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 13/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 13/2001

2001 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க தபுதார அநாதைகள் ஓய்வவூதிய திருத்தச்சட்டம் – அரச பெண் அலுவலர்களின் விருப்பம் தெரிவிப்பு

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 9/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 9/2001

1094/2 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கைத் தொழிலியல் சேவைப் பிரணாமக் குறிப்பை திருத்தம் செய்தல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 7/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 7/2001

அரசாங்க நிர்வாக, விடய பொறுப்பு அமைச்சின் தாபனப் பிரிவையும், இணைந்த சேவைகள் பிரிவையும் மீளமைத்தல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 2/2001

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல. 2/2001

தாபன விதிக்கோவையின் 11 தொகுதியின் xlviii ஆம் அத்தியாயத்தின் 19-5 ஆம் பிரிவின் கீழான ஒழுக்காற்று உத்தியோகத்தர் விசாரணைப் பெயர் பட்டியல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 15/2000.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 15/2000.

அனைத்து அரசாங்க அலுவலர்களுக்கு ஒய்வூதியமற்ற இடைகால படியொன்றையும் அனைத்து ஓய்வுபெற்றவர்களுக்கும் மாதாந்த படியொன்றையும் வழங்குதல்.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 6/2000.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 6/2000.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 33/95 மற்றும் 15/96  நடைமுறைப்படுத்தும் திகதியைத் திருத்துதல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 5/2000.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 5/2000.

தொழிற்சங்க கிளை கூட்டங்களுக்குச் சமூகமளிப்பதற்கான கடமை விடுதலை, தாபன விதிக் கோவையின் XXV ஆம் அத்தியாயத்தின் 2.1 ஆம் பிரிவினைத் திருத்துதல்.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 4/2000.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 4/2000.

1094/9 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அதி விசேட கசற்றில் வெளியிடப்பட்ட இலங்கை தொழிநுட்பவியற் சேவை பிரனாமக்குறிப்பிற்கான திருத்தங்கள்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 3/2000

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 3/2000

அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணத்துக்கான அனுமதி வழங்கும் போது கையாள வேண்டிய வழிமுறை.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ( தாபிதலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டம். திருத்தம்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ( தாபிதலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டம். திருத்தம்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ( தாபிதலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டம். திருத்தம்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 1/2000

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல:- 1/2000

1977.05.01 முதல் 1994.06.30  வரை செயல்பாட்டுடனிருந்த மத்திய மட்ட தொழிநுட்பச் சேவையின் வகுப்பு III இலும்  II வகுப்பு இலும் உள்ள ஊழியர் கோப்புகளானவை இணைந்த ஊழியர் கோப்பு எனும் அடிப்படையில் தொடர்தல்.

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 30/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 30/99

இலங்கை தொழினுட்ப சேவை வகுப்பு 1 மற்றும் விசேட் வகுப்பின் சம்பளங்களை மீளமைத்தலும் 1994.07.25 ஆந் திகதிய 27/94 ஆம் 27/94 (1) ஆம் இலக்கங்கள் கொண்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் மூலம் நடுத்தர ஒன்றிணைக்கப்பட்ட தொழில்நுட்ப சேவையை மீளமைக்கும் போது ஏற்பட்ட சம்பள முரண்பாடுகளை அகற்றுதலும்

 

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 29/95 (iv)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 29/95 (iv)

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுகின்ற பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 27/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 27/99

1994.07.01 ஆந் திகதியிலிருந்து 1996.12.31 ஆந் திகதி வரையிலான காலத்தினுள் இலங்கை தொழில்நுட்பவியல் சேவை வகுப்பு 11 பிரிவு ஆ வில் இருந்து வகுப்பு 11 பிரிவு அ வுக்கு தரமுயர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களின் சம்பள மாற்றியமைப்பு

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 26/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 26/99

அரச சேவையின் கனிஷ்ட தரங்களிலுள்ள தற்காலிக, அமய, பதிலீட்டு ஊழியர்களை நிரந்தரப்படுத்தல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 22/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 22/99

அரசாங்க அலுவலர்கள் / நீதித்துறை அலுவலர்கள் ஆகியோருக்கும் அரசாங்க கூட்டுத்தாபன நியதிச்சட்ட சபைகளின் அலுவலர்களுக்கும் அரசகரும போக்குவரத்து வசதிகள் அளித்தல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 20/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 20/99

1999 மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து ஒன்றில் ஓய்வு பெற்ற அல்லது இராஜினாமாச் செய்த அரசாங்க அலுவலர்களை பதவிகளில் மீள அமர்த்துதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 15/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 15/99

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல 37/92 இன் கீழ் சம்பளத் தொகுதி எண் 2-1 க்கு உரித்துடைய பதவியொன்றில் இருந்து சம்பளத் தொகுதி எண் 2-2 க்கு உரித்துடைய பதவியொன்றுக்கு தரமுயர்த்தப்படுமிடத்து சம்பளத்தை மாற்றியமைத்தல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 14/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 14/99

விபத்துக்கள் மற்றும் வேறு கடன்கள் இலங்கை அரசாங்க தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்திற்கான திருத்தங்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 13/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 13/99

அரசின் அங்கீகாரத்துடன் வெளிநாட்டு நிதிகளை ஈடுபடுத்தும் அமைச்சுக்களின் கீழுள்ள கருத்திட்டங்களில் சேவையாற்றுவதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்

தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தை திருத்துதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 11/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 11/99

சொத்துக் கடன்களுக்கான பினையாளிகள் தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்திற்கு திருத்தங்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 10/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 10/99

முழுநேர காலமாக தொழில் சங்க அலுவலர்களுக்காக விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு சம்பளம் வழங்குதல் தாபன விதிக்கோவையின் XXV ஆம் அத்தியாயத்தின் 5ஆம் பிரிவைத் திருத்துதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 09/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 09/99

அரச சேவையிலிருந்து மாகாண அரச சேவைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அரச சேவைக்கு வருவதற்காக சந்தர்ப்பமளித்தல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 07/99

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 07/99

சில மதப் பிரிவுகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு மட்டும் விதித்துரைக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் பொதுப்பரீட்சைகளை நாடாத்துதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 06/99 (1)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 06/99 (1)

உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு எரிபொருட்கள் வழங்கலும் அவ் வாகனங்களின் சாரதியாளர்களுக்கு மேலதிக நேர இணைந்த படிகளை செலுத்துதலும்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை கடித இல 5/97 (111)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை கடித இல 5/97 (111)

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான காப்புறுதி திட்டமொன்றை ஏற்படுத்தல் (அக்ரஉறார)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை கடித இல 04/1999

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை கடித இல 04/1999

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அந்தரங்க பனிற்றொகுதிகள் சம்பள மீளமைப்பு

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 2/97 (V)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 2/97 (V)

சம்பள முரண்பாட்டு குழுவின் விதப்புரைகளைச் செயற்படுத்தல் – 1997 – எழுதுநர் மற்றும் அதனை ஒத்த சேவைகளில் உள்ள அலுவலகர்களின் சம்பளங்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 32/91 (11)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 32/91 (11)

உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தமது பதவிகளை ராஜினாமாச் செய்த அல்லது கடமை லீவு பெற்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரசியல் உரிமை பெற்றுள்ள உத்தியோகத்தர்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 29/95 (111)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 29/95 (111)

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுகின்ற பிரதேசங்களில் சிவில் நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 26/97 (1)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 26/97 (1)

கடன்களுக்கான வட்டி அறவிடல் தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயம்

அரச நிருவாக சுற்றறிக்கை இல 23/98

அரச நிருவாக சுற்றறிக்கை இல  23/98

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க சம்மேளனங்கள் நடாத்தப்படுகின்ற அலுவலகங்களுக்கும் தொழிற்சங்கங்கள் நடாத்தப்படுகின்ற அலுவலகங்களுக்கும் மற்றும் அந்த சம்மேளனங்களின் சங்கங்களின் கெளரவ தலைவர்கள் கெளரவ செயலாளர்கள் ஆகியோர்களுக்காக அரசினால் தொலைபேசி வசதிகளை வழங்குதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 17/98

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல  17/98

சொத்து கடன்களுக்கான பிணையாளிகள் தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்திற்கான திருத்தங்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 12/98

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 12/98

நேர்முகப் பரீட்சை சபை அங்கத்தவர்களாக கடமையாற்றுவதற்கான கொடுப்பனவுகள் வழங்குதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 09/98

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 09/98

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் வேதன ஏற்றங்களும்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 5/97 (11)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 5/97 (11)

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான காப்புறுதி திட்டமொன்றை ஏற்படுத்தல் (அக்ரஉறார)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 01/98

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 01/98

வடகிழக்கு பிரதேசங்களில் யுத்த நிலைமைகள் யுத்த நடவடிக்கைள் காரணமாக இடம்பெயர்ந்து சேவைக்கு சமூகமளிக்கமுடியாத அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட விடுமுறை

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 24/97

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 24/97

முழுச் சம்பளத்துடனான கல்வி விடுமுறைகளை பெற்றிருக்கும் சந்தர்ப்பங்களில் கையொப்பமிட வேண்டிய உடன்படிக்கையும்

முறியும் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XV

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 20/97

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 20/97

இலங்கை தொழிநுட்ப சேவை பிரமாணக் குறிப்பில் உள்ளடங்கிய சில விடங்களை தெளிவுபடுத்தல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 36/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 36/96

வீடொன்றை நிர்மாணிப்பதற்கு வேலைகளை பூர்த்தி செய்வதற்கான கடன் 6/92 ஆம் 15/94 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கைகளுக்கான விளக்கங்கள்

 

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 34/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 34/96

1996 யூன் மாதம் 12 13 14 ஆந் திகதிகளில் வசிய சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களின் காரணமாக அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் வழங்கல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 30/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 30/96

ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு வெளியால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்குதல்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 24/93 (111)

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 24/93 (111)

சலுகை நியதிகளின் படி வாகனங்கள் இறக்குமதி செய்தலும் பொளுள் கொள்வனவு மதியரை சேவை கூறிலிருந்து உபயோகித்த வாகனங்கள் வழங்கப்படுதலும் உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க வாகனங்களை உடைமை மாற்றம் செய்தலும்

சலுகை நியதிகளின் படி வாகனங்கள் இறக்குமதி செய்தலும் பொளுள் கொள்வனவு மதியரை சேவை கூறிலிருந்து உபயோகித்த வாகனங்கள் வழங்கப்படுதலும் உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க வாகனங்களை உடைமை மாற்றம் செய்தலும்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 23/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 23/96

இத்தீவினுள் மேற்கொள்ளப்படும் உத்தியோக பூர்வ பிரயாணங்கள் – தாபனகோவையின் xiv ஆம் அத்தியாயத்திற்கான திருத்தங்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 21/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 21/96

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக 1000க்கு குறைவாகவும் 500 கூடுதலாகவும் அங்கத்தவர்கள் உள்ள தொழிற்சங்கங்களின் தலைமை உத்தியோகத்தர் ஒருவருக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விடுமுறை வழங்கல்.

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 10/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 10/96

பல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தாபனதுடன் சேர்ந்த பிற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும், படிகள் மற்றும் பலவகைப்பட்ட கொடுப்பனவுகள் பற்றியும் செய்யப்படும் பிரதிநிதித்துவங்களும் ஆராய்வுகளும்.

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 08/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 08/96

விபத்துகளுக்கான கடன்களும் பிற கடன்களும் தாபன விதிக்கோவையின் XXV ஆம் அத்தியாயத்திற்கான திருத்தங்கள்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 6/96

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல 6/96

அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் அம்முறையீடுகளை விசாரணை செய்தல் மற்றும் கட்டளையிடுதல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 37/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 37/95

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சம்பளக் கடன்கள் / முற்பணங்கள் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XXIV க்கான திருத்தங்கள்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 35/92 (11)

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 35/92 (11)

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று விசாரணைகளைத் துரிதப்படுத்தல் தாபன விதிக்கோவைக்கு திருத்தங்கள் அத்தியாயம் – XLVIII

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 34/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 34/95

அரச துறையைச் சேர்ந்த சிற்றூழியர்கள் தொழிலாளர் தரங்கள் மற்றும் சாரதியாளர்கள் சேவைகளின் சம்பள மீளமைப்பு

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 32/89 (viii)

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 32/89 (viii)

ஓய்வூதியம் உரித்துடைய சேவைகளில் இருந்த மீள சேவையில் அமர்த்தப்படாத 1980 யுலை வேலை நிறுத்தில் பங்கேற்றியவர்களை மறுபடி சேவைக்கு அழைத்தல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 31/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 31/95

சலுகை நியதிகளின்படி வாகனங்கள் இறக்குமதி செய்தலும் பொருள் கொள்வனவு மதியுரைச் சேவை கூறிலிருந்து உபயோகித்த வாகனங்கள் வழங்கப்படுதலும் உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க வாகனங்களை உடமை மாற்றச் செய்தலும்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 30/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 30/95

கீழுழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நிவாரணமளிப்பதற்காக வெளியிடப்பட்ட 20/94 ஆம் இலக்க அரசாங்க சுற்றறிக்கையின் படி உயர்சம்பளம் பெற்ற உத்தியோகத்தர்கள் பழைய பதவிகளில் தொடர்ந்தும் சேவையாற்றுவதனால் அவர்களுக்கு மேலதிக நேரம் படியும் விடுமுறை நாள் சம்பளமும் வழங்கல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 29/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 29/95

பயங்கரவாதம் நிலவுகின்ற பிரதேசங்களில் சிவில் நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள அரச பணியாளர்களுக்கான ஊக்குகைப்படி

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 28/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 28/95

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இலக்கம் 15/90 மறறும்  17/92 இன் படி சலுகை புள்ளிகளின் பேரில் ஆட்சேர்ப்பு செய்தல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 27/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 27/95

சங்கமொன்றின் முழுநேர தொழிற்சங்க அலுவல்களின் பொருட்டு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான சம்பளவு கொடுப்பனவு – தாபன விதிக்கோவையின் xxv – 5ஆம் பந்திக்கான திருத்தங்கள்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 26/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 26/95

பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிற சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 24/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 24/95

அரச சேவையின் மாகாண அரச சேவையின் அரச கூட்டுத்தாபன சேவையின் கனிஷ்ட சேவகர் தரத்தின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 21/95 (1)

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 21/95 (1)

அலுவலக நாட்களில் (புதன்கிழமை) உத்தியோகத்தர்கள் கலந்துரையாடல் என்பவற்றிற்கு அழைத்தல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 20/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 20/95

பதவியை கைவிட்டுச் சென்ற உத்தியோகத்தர் ஒருவர் அல்லது ஏதேனும் ஒழுக்காற்று கட்டளை விதிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரால் காரணங்கள் சமர்ப்பிக்கப்படுதல் தாபனக் கோவையின் திருத்தங்கள் அத்தியாயம் II, V, XXVIII, XLVIII

ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි

ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි

ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩ නැගීමට මගපෙන්වීමක්

විකල්ප ප‍්‍රතිපත්ති කේන්ද්‍රයේ ප‍්‍රකාශනයකි

නව ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා හැදෙන හැටි – ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 1 වැනි පියවර

මූලධර්ම සහ එදිරිගාමී තේමා – ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 2 වැනි පියවර

මානව අයිතිවාසිකම්  සංස්කෘතියක් ගොඩ නැගීම – ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 3 වැනි පියවර 

විධායක අංශයේ නිර්මිතය – ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 4 වැනි පියවර

ව්‍යවස්ථාදායකයේ සැලැස්ම –  ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 5 වැනි පියවර

අධිකරණ අංශය සැලසුම් කිරීම – ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 6 වැනි පියවර

ආණ්ඩු කිරීමේ විමධ්‍යගත ආකෘති –  ආණ්ඩුක‍්‍රම ව්‍යවස්ථා ගොඩනැගීමේ පටිපාටි – 7 වැනි පියවර

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 18/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 18/95

பொது எழுதுனர் சேவையின் பதவிகளுக்குரிய கருமங்களை புரிவதற்கு வேுறு சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 17/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 17/95

பிரசவ விடுமுறை – தாபனக் கோவையின் X11 ஆம் அத்தியாயத்தின் 18:1 பிரிவுக்கான திருத்தங்கள்

பொது நிர்வாகச் சுற்றுநிருபம் இல 16/95

பொது நிர்வாகச் சுற்றுநிருபம் இல 16/95

ஓய்வூதிய கொடை வழங்கலுக்கும் மாற்றிய பணிக்கொடைகளுக்குமான புதிய கொடை நடைமுறை

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 12/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 12/95

1979 இன் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட உத்தியோகத்தர்களை/ ஊழியர்களை மீண்டும் பதவியில் அமர்த்துதல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 11/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 11/95

தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் கடன் வழங்கும் பொது நிபந்தனைகள் மற்றும் சம்பளக் கடன்கள் முற்பணங்களை அதிகரிக்கும் அதிகாரிகளுக்கான திருத்தங்கள்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 06/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 06/95

1994-09-09 ஆந் திகதியிடப்பட்ட சம்பள மீளாய்வு முரண்பாடுகள் குழு அறிக்கை இடைக்கால கொடுப்பனவு

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுடனான உடன்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பானது

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுடனான உடன்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பானது
திகதி : 2017 மார்ச் 09ஆம் திகதி வியாழனன்று, கொழும்பு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் போது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், அமைச்சரவை அமைச்சுடன் ஏற்படுத்திக்கொண்ட முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும். இவ்வொப்பந்தமானது, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கிடையில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வியாழனன்று கைச்சாத்திடப்பட்டது. அமைச்சுக்களில் அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் தொடர்பாக மொழி ஆய்வொன்றை நடத்துவது பற்றி இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

Press Release -Tamil

அமைச்சுக்களில் அரசகரும மொழிக்கொள்கை அமுலாக்கம் தொடர்பான ஆய்வு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 04/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 04/95

விடுமுறைகள் – தாபனக் கோவையின் X11 ஆம் அத்தியாயத்தின் 1 ஆம் பிரிவைத் திருத்துதல்

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 2/95

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல 2/95

தீவினுள் கடமைக்காக பிரயாணங்கள் – தாபனக் கோவை xiv ஆம் அத்தியாயத்துக்கு திருத்தம்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 42/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 42/94

ஓய்வூதியமுடைய சேவைகளில் 10 ஆண்டுகளுக்கு குறைந்த சேவைக்காலத்தையுடைய எனினும் அமைய தற்காலிக சேவைக்காலங்களுடன் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவைக்காலத்தையுடைய தொழிலாளிகளுக்கான ஓய்வூதியம்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 34/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 34/94

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகங்களைச் சேர்ந்த பணித் தொகுதிகளிலுள்ள தகுதி பெற்றோரை அரச சேவை / மாகாண சேவை அரச கூட்டுத்தாபனங்களில் மற்றும் சபைகளின் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 32/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 32/94

சலுகை நிபந்தனைகளில் பொருள் கொள்ளல் மதியுரைச் சேவைக் கூற்றில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்தலும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வழங்கலும் அத்துடன் அரசாங்க வாகனங்களின் சொத்துரிமையை மாற்றுதலும்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 31/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 31/94

1992 மார்ச் 4ஆந் திகதியன்று இ.நி.சேயை உஆநி சேயுடன் சேர்த்து உள்வாங்கப்பட்டதால் உருவாக்கப்பட்ட முரண்பாடுகளைச் சரிப்படுத்தல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 30/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 30/94

செயலாளர்கள் மேலதிக செயலாளர்களினதும் தீவு அடங்கல் சேவைகளினதும் சம்பள முரண்பாடுகளை அகற்றல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 25/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 25/94

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகத்தின் அலுவலகப் பணியாளர் தொகுதியின் தேவைகள்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 22/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 22/94

கட்டட அமைவிடமொன்றை அல்லது வீட்டுச் சொத்தைப் பெற்றுக் கொள்ளல் அல்லது வீடொன்றை அமைத்தல்/ பூர்த்தி செய்தல் என்பவற்றுக்கான கடன்கள் – தாபன விதிக்கோவை அத்தியாயம் XXIV

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 21/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 21/94

தேர்தல்களில் போட்டியிடுவதற்காக சேவையிலிருந்து விலகிய கிராம உத்தியோகத்தர்கள்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 20/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 20/94

அரசாங்க சேவையிலுள்ள கீழுமைப்பு பட்டதாரிகளுக்கு நிவாரணம் வழங்கலும் 1971க்கும் 19766 க்கும் இடையே பட்டதாரிப் பயிற்சி திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்கலும்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 17/93 (1)

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 17/93 (1)

371 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையின் நியதிகளின் படி இலங்கை நிருவாகச் சேவையின் 11 ஆம் வகுப்பின் 11 ஆம் தர அலுவலர்களை 11ஆம் வகுப்பு 1 ஆம் தரத்துக்கு பதவியுயர்த்தலின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை அகற்றுதல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 16/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 16/94

1994 மே தினம் மேன்மை தங்கிய சனாதிபதி அவர்களால் செய்யப்பட்ட பிரகடனப்படி அமயப் பணியாளர்கள் உறுதிப்படுத்தப்படல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 16/94 (1)

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 16/94 (1)

1994 மே தினம் மேன்மை தங்கிய சனாதிபதி அவர்களால் செய்யப்பட்ட பிரகடனப்படி அமயப் பணியாளர்கள் உறுதிப்படுத்தப்படல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 14/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 14/94

உள்ளுராட்சி நிர்வாக சேவையை (உ.நி.சே) இலங்கை நிருவாக சேவைக்கு (இ.நி.சே) உட்சேர்த்தல் – சேவை முதுமுறையை முன் நிலைப்படுத்தல் 1ஆம் வகுப்பிற்கு நியமித்தல் – நியமனங்களை முற்றேதியிடல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 13/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 13/94

அரச பணியாளர்களின் நலன்புரி மற்றும் விளையாட்டுத்துறை நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 12/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 12/94

1993 டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் வழங்குதல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 09/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 09/94

நேர்முக பரீட்சை சபைகளில் அங்கத்தவர்களாகக் கடமை புரிவதற்கான கொடுப்பனவுகள்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 08/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 08/94

நீதிமன்ற உத்தியோகத்தர்கள்/ அரசாங்க உத்தியோகத்தர்கள்/ அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர்கள் அரசாங்க வாகனங்களை உபயோகித்தல்

தகவலுக்கான உரிமை தொடர்பான அறிவித்தல்

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

தகவலுக்கான உரிமை தொடர்பான அறிவித்தல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 04/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 04/94

அரசாங்க விடுமுறை பங்களாக்களை ஒதுக்கும் முறை கட்டணங்களை அறவிடும் முறையைத் திருத்துதல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 02/94

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 02/94
தற்காலிக அமய பதில் ஊழியர்களுக்கும் பயிலுநர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்குதல்

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம்

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 20(5) இன் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, கீழே தரப்பட்டுள்ள அரிசி வகைகளை அவற்றின் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள ஆகக்கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக உற்பத்தியாளர், இறக்குமதியாளர், விநியோகஸ்தர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விற்பனைக்கு கோரவோ அல்லது விறப்னைக்காக காட்ச்சிப்படுத்தவோ முடியாதென கட்டளையிடுகின்றது

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம்

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 2003-44_T

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின்கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது, உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பொதியிடுவோர், விநியோகத்தர் அல்லது வியாபாரி எவரும் கீழே தரப்பட்டுள்ள ஆகக்கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக பின்வரும் பொருட்களை விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விற்பனைக்கு கோரவோ அல்லது விற்பனைக்காக காட்ச்சிப்படுத்தவோ முடியாதென கட்டளையிடுகின்றது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 2003-44_த

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் 3 ஆம் தரத்தின் உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை 2017 (1)

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் 3 ஆம் தரத்தின் உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை 2017  (1)

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் 3 ஆம் தரத்தின் உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை 2017 (1)

கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பணிக் கொள்கை 2011

கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பணிக் கொள்கை 2011

கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பணிக் கொள்கை 2011

2016.11.29 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொது மனுக் குழுவின் 6வது அறிக்கை

2016.11.29 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொது மனுக் குழுவின் 6வது அறிக்கை

2016.11.29 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொது மனுக் குழுவின் 6வது அறிக்கை

“தொழில்நுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தென்கிழக்காசிய நிறுவனத்தை (SAITM) மாதிரியாகக் கொண்டு தனியார் துறையின் பங்களிப்புடன் இலங்கையில் மருத்துவக் கல்வியை விஸ்தரித்தல்” தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி பற்றிய உபகுழுவின் அறிக்கை

“தொழில்நுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தென்கிழக்காசிய நிறுவனத்தை (SAITM) மாதிரியாகக் கொண்டு தனியார் துறையின் பங்களிப்புடன் இலங்கையில் மருத்துவக் கல்வியை விஸ்தரித்தல்” தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி பற்றிய உபகுழுவின் அறிக்கை

“தொழில்நுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் பற்றிய தென்கிழக்காசிய நிறுவனத்தை (SAITM) மாதிரியாகக் கொண்டு தனியார் துறையின் பங்களிப்புடன் இலங்கையில் மருத்துவக் கல்வியை விஸ்தரித்தல்” தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி பற்றிய உபகுழுவின் அறிக்கை

பயனுறுதிமிக்கத் தகவல்களையும் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகளையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அக்கறையுடைய தரப்புகளினாலும் மற்றும் அக்கறையுடைய தரப்புகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இடைக்கால அறிக்கை

பயனுறுதிமிக்கத் தகவல்களையும் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகளையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அக்கறையுடைய தரப்புகளினாலும் மற்றும் அக்கறையுடைய தரப்புகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இடைக்கால அறிக்கை

பயனுறுதிமிக்கத் தகவல்களையும் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகளையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அக்கறையுடைய தரப்புகளினாலும் மற்றும் அக்கறையுடைய தரப்புகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இடைக்கால அறிக்கை

2017 வரவுசெலவுத்திட்டத்தின் அரசாங்க நிதி, அரசிறை மற்றும் பொருளாதார ஊகங்கள் பற்றிய மதிப்பீடு மீதான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

 

2017 வரவுசெலவுத்திட்டத்தின் அரசாங்க நிதி, அரசிறை மற்றும் பொருளாதார ஊகங்கள் பற்றிய மதிப்பீடு மீதான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

2017 வரவுசெலவுத்திட்டத்தின் அரசாங்க நிதி, அரசிறை மற்றும் பொருளாதார ஊகங்கள் பற்றிய மதிப்பீடு மீதான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

பொது நிர்வாக சுற்றறிக்கை இல : 31/92 (1)

அரசாங்க திணைகளங்களை மூடியதால் முப்போய்வு நலன்களின்றி சேவைகளிலிருந்து நிறுத்தப்பட்ட அரச அலுவலர்களுக்கு நிவாரணத்திற்காண ஏற்பாடு

பொது நிர்வாகச் சுற்றறிக்கை : 29/93

தேசிய தொழிநுட்ப டிப்ளோமா / கனிஷ்ட தொழிநுட்ப உத்தியோகத்தர் சான்றிதழ் பெற்ற நடுத்தர மட்ட தொழிநுட்ப உத்தியோகத்தர்களை இரண்டாவது தினணகளப் பரீட்சையிலிருந்து விடுவித்தல்.

පාර්ලිමේන්තු මෙතිවර්ණය 2015 චක්‍රලේඛය

  • රජයේ දේපළ අනිසි ලෙස භාවිතයෙන් වැළැක්වීම සහ සමහර ක්‍රියා සීමාසහිත කිරීම හා අත්හිටුවීම

රජයේ දේපළ අනිසි ලෙස භාවිතයෙන් වැළැක්වීම සහ සමහර ක්‍රියා සීමාසහිත කිරීම හා අත්හිටුවීම

  • කාර්යය මණ්ඩල චක්‍රලේඛ

කාර්යය මණ්ඩල චක්‍රලේඛ

  • මැතිවරණ ප්‍රචාරක කාර්යාල සීමා කිරීම

මැතිවරණ ප්‍රචාරක කාර්යාල සීමා කිරීම

  • ප්‍රවාහන චක්‍රලේඛ

චක්‍රලේඛ 01

චක්‍රලේඛ 02

චක්‍රලේඛ 03

චක්‍රලේඛ 04

චක්‍රලේඛ 05

චක්‍රලේඛ 06

චක්‍රලේඛ 07

චක්‍රලේඛ 08

චක්‍රලේඛ 09

චක්‍රලේඛ 10.1

චක්‍රලේඛ 10

චක්‍රලේඛ 11

චක්‍රලේඛ 12

චක්‍රලේඛ 13

  • ප්‍රචාරක කටයුතු සඳහා රජයේ වාහන භාවිතය

ප්‍රචාරක කටයුතු සඳහා රජයේ වාහන භාවිතය

  • දුම්රිය බලපත්‍ර නිකුත් කිරීම

දුම්රිය බලපත්‍ර නිකුත් කිරීම

  • ගෙවීම් චක්‍රලේඛ

ගෙවීම් චක්‍රලේඛ

 

பாராளுமன்ற தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம்

பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும், விடுபாட்டுரிமைகளையும், தத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்கும், வரைவு படுத்துவதற்கும்; பாராளுமன்றத்தில் பேச்சு, விவாதம் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றுக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பெறுவதற்கும்; பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல்களுக்கான தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், பாராளுமன்ற அறிக்கைகள், பத்திரங்கள், நிகழ்சிக்குறிப்புகள், தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை ‌வெளியிடுவதில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமானதொரு சட்டம்.

“ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் 2017/2018”

“ஆசிரியர் கல்லூரிகளின் ஆசிரியர் கல்விப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் 2017/2018” தொடர்பாக 28/2016 கல்வி அமைச்சு சுற்றறிக்கை 2016 டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பொறுப்பேற்கும் இறுதித் திகதி 2017.01.31

தற்போது நாட்டில் காணப்படும் அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அரச அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களில் சேவையாற்றும் பட்டதாரி அல்லாத சகல பயிற்றப்படாத ஆசிரியர்கள் இவ் ஆசிரியர்  பயிற்சிப் பாடநெறிக்காக விண்ணப்பிப்பது கட்டாயமாகும்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகை அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்)

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகை

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி

பகுதி 2 இற்குக் குறைநிரப்பி

அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்)

இலங்கையின் துரிதப்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உட்பட, எல்லா விடயங்களினதும் மீதான தேசியக் கொள்கையொன்று வகுத்தமைக்கப்பட்டு வசதிப்படுத்துவதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்ட மூலம்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 21/93

ஒய்வூதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு அரசாங்க சேவை சகாய நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமையை வழங்குதல்

இலங்கை அரசியலமைப்புக்கான சீர்த்திருத்தங்கள்

இலங்கை அரசியலமைப்புக்கான 1ஆவது திருத்தம் தொடக்கம் 19 வரையான திருத்தங்கள்

1ஆவது திருத்தம் தொடக்கம் 17 வரையான திருத்தங்கள்

அரசியலமைப்புக்கான பதினெட்டாவது திருத்தம்

அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்தத்மானப் பத்திரிகை அதி விசேஷமானது 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 10 (1) (அ) ஆம் பிரிவின் கீழான பணிப்புரை

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க,  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 10 (1) (அ)  ஆம் பிரிவின்  கீழான பணிப்புரை

2003 ஆம் ஆண்டின், 9 ஆம் இலக்க  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச்  சட்டத்தின் படி 10 (1)  (அ)  ஆம் பிரிவின் கீழ்  உரிதத்ளிகக்பப்ட்ட தத்துவங்களின்,  கீழ் செயறப்டுகின்ற   பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, எல்லா  உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள்  மற்றும் வியாபாரிகளும்  அவர்களால் வழங்கப்படும் பண்டங்களிற்கான எல்லா நிபந்தனைகள் உள்ளடங்கலான கட்டுறுத்து (வரன்றி) ஆனது சிங்கள தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டதாக  இருத்தல் வேண்டுமென  பணிப்புரை  விடுக்கபடுகின்றது. இப்பணிப்புரை  2017, சனவரி 01 ஆம் திகதியிலிருந்து  அமுலுக்கு  வருகின்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடு தொடர்பான சமகால கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடு தொடர்பான சமகால கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடு தொடர்பான சமகால கலந்துரையாடலொன்று ஹோட்டல் ரேணுகாவில் இன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கலாநிதி பாக்கியசோதிசரவணமுத்து, சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் சட்டத்தரணி நிஸாம் காசியப்பர் போன்ற புத்திஜீவிகள் கருத்துரை வழங்கினர்.பொதுமக்கள் கருத்தறி குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலர்அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சியின் சார்பில் திரு. லயனல் குருகே அவர்கள் வழிநடத்தியிருந்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை துரிதப்படுத்தும் முறை தொடர்பாக அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மேலும் சிறப்பானமுறையில் தயாரிப்பது குறித்து சிவில் சமூகத்தின் வகைப்பொறுப்பு மற்றும் என்ன என்பது குறித்த பல்வேறுகலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான குழுவின் தலைவர், பிரதம அமைச்சர், தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மூலம் 6 உப குழுக்களின் அறிக்கை கடந்த சனிக்கிழமை 2016.11.19 ஆம் திகதி அரசியலமைப்பு உருவாக்க சபைக்கு முன்வைக்கப்பட்டது. அவ் அறிக்கை அரசியலைப்பு உருவாக்கச் சபை இணையத்திலும் எமது இணையத்திலும் பார்வையிட முடியும்.

நீதித்துறை பற்றிய உப குழுவின் அறிக்கை

பகிரங்க சேவை மறுசீரமைப்பு பற்றிய உபகுழுவின் அறிக்கை

அடிப்படை உரிமைகள் பற்றிய உப குழுவின் அறிக்கை

நிதி பற்றிய உப குழுவின் அறிக்கை

மத்திய – சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழுவின் அறிக்கை

தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ். சட்ட வலுவூட்டல் பற்றிய உபகுழுவின் அறிக்கை

016, நவம்பர் 9 ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “மொழியும் மனித நேயமும்” என்ற தொனிப்பொருளிலான விழாவின் போது பிரஜைகள் வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் மற்றும் 35 பிரதேச செயலகங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுகப்பட்ட மொழிக் கணக்காய்வு தொடர்பிலான அறிக்கையும் வெளியீடு செய்யப்பட்டது.

2016, நவம்பர் 9 ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “மொழியும் மனித நேயமும்” என்ற தொனிப்பொருளிலான விழாவின் போது பிரஜைகள் வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன்  மற்றும் 35 பிரதேச செயலகங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுகப்பட்ட மொழிக் கணக்காய்வு தொடர்பிலான அறிக்கையும் வெளியீடு செய்யப்பட்டது. இந்த வலைத்தளத்தில் இலங்கையில் மொழி தொடர்பில் காணப்படும் அனைத்து சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுளன.

இந்த வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் என்பன மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

website-launch-report

Citizenslanka Web launch video

மொழிக் கணக்காய்வு சாரம்சக் குறிப்புகள்

மொழிக் கணக்காய்வினுள் உள்வாங்கப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தனியார்துறை தகவல்கள்

 

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 17/93

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 17/93

371 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையின் நியதிகளின் படி இலங்கை நிருவாகச் சேவையின் வகுப்பு 11 தரம் 11 இலுள்ள அலுவலர்கள் வகுப்பு 11 தரம் 1 க்குப் பதவியுயர்த்தப்பட்ட போது ஏற்பட்ட முரண்பாடுகளை அகற்றுதல்

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல. 13/93

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இல 35/90 மற்றும் அதன் பின் திருத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்தல் பற்றிய சுற்று நிருபத்துக்கு இணங்க நியமித்துக் கொள்ளப்பட்ட விசாரணை உத்தியோகத்தர்கள் (சட்டதரணிகள்) சபையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்லது சட்டத்தரணிகளுக்கு பிரயாணச் செலவுகளையும் உண்டி உறையுள் கொடுப்பனவுகளை செலுத்துதலும்